disalbe Right click

Friday, January 13, 2017

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச்  சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், 
பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படி பெறுவது?
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். 
இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை,
புற்றுநோய் மருத்துவம், 
சிறுநீரக நோய்கள், 
மூளை மற்றும் நரம்பு மண்டலம், 
கண் நோய் சிகிச்சை, 
இரைப்பை (ம) குடல் நோய்கள்,
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , 
காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், 
கருப்பை நோய்கள், 
ரத்த நோய்கள்.
மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து  5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். 
இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.
மேலதிக விவரங்களுக்கு
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
http://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
நன்றி : விகாஸ்பீடியா
****************************************************************
குறிப்பு:
இந்தத் திட்டத்தின் காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை ஜனவரி 10, 2017 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இந்தக் காப்பீட்டு நிறுவனம், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.50 லட்சம் காப்பீட்டு தொகை, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: 
முதல் முறையாக இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் குடியேறி 6 மாதத்துக்கும் மேல் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு, தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள்.
 மேலும், மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும்.
நன்றி : தினமணி நாளிதழ் - 14.01.2017
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற 7373004974 என்ற செல் நம்பரிலும், 04562 252507 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 10.03.2017

No comments:

Post a Comment