disalbe Right click

Wednesday, January 11, 2017

மீசல்ஸ் ருபெல்லா - தடுப்பூசி


மீசல்ஸ் ருபெல்லா - தடுப்பூசி

6 -2- 2017 முதல்*  *28-2-2017*  வரை 

*9 மாதம் முதல்* *15 வயது* வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் 

*மீசல்ஸ் - ருபெல்லா* *( Measles Rubella)* தடுப்பூசி போடப்படஉள்ளது.

*தட்டம்மை *

வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கப்படு்கிறது.. 
பாதுகாப்பான, பலனளிக்கக்கூடிய தடுப்பு மருந்து இருந்தும், குழந்தைச் சாவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது. 

இது  பாரோமைக்சோ வைரஸால் உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும். 

நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச் சளியின் மூலமாக இது மற்றவருக்கு பரவுகிறது.

*ரூபல்லா*

இது ஜெர்மானிய மணல்வாரி அம்மை எனப்படுகிறது.இது காற்றில் பரவும் தன்மை கொண்ட தொற்று நோய்க் கிருமி ஆகும். 

நோய்த் தொற்றுள்ள குழந்தை பிற குழந்தைகளோடு நெருங்கி விளையாடும்போது, சுலபமாக அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்றுவிடும்.

தகவல் உதவி : வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards

குறிப்பு : பள்ளிகளிலேயே போடுவதற்கு ஏ்ற்பாடு செய்யப்பட்டுள்ளது. இல்லையெனில் தங்கள் பகுதிக்குட்பட்ட “ஆரம்ப சுகாதார நிலையத்தை” அணுகுங்கள்.

No comments:

Post a Comment