disalbe Right click

Wednesday, January 11, 2017

RTI - மூன்றாம் நபர் தகவல் - தீர்ப்பு


RTI - மூன்றாம் நபர் தகவல் - தீர்ப்பு

மூன்றாம் நபர் தகவல் என்பதாலேயே, தகவல் மறுக்கப்படும் என்பது சட்டத்தின் நிலை இல்லை. அவ்வாறு மூன்றாம் நபர் தகவல் என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.
1) பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தகவலை வழங்கக் கருதினால், மனு் பெறப்பட்ட ஐந்து தினங்களுக்குள், அந்த மூன்றாம் நபருக்கு, அவருடைய கருத்துக்களை கேட்பதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவிப்பாணை ஒன்றை அனுப்ப வேண்டும்.
அந்த அறிவிப்பு கிடைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மூன்றாம் நபர் பொதுத்தகவல் அலுவலரிடம், “ஏன் அந்த தகவலை வழங்கக்கூடாது?” என்பதற்கான ஆட்சேபணையை விளக்க வேண்டும்.
அந்த மூன்றாம் நபர் விளக்கியுள்ள ஆட்சேபணையைப் பொதுத்தகவல் அலுவலர் கருத்தில் கொண்டு, அந்த ஆட்சேபணைகள் ஏற்கக்கூடியவையா, இல்லையா என்று பரிசீலணை செய்து, ஏற்கக்கூடியது என்றால், அந்தத் தகவலை வழங்க மறுத்துவிடலாம். ஏற்கக்கூடியது அல்ல என்றால், அந்தத் தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கலாம்.
2) பொதுத்தகவல் அலுவலர் தான் எடுத்த முடிவினை (பிரிவு 6ன் கீழ் மனு பெறப்பட்ட 40 நாட்களுக்குள்) சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.
3) பொதுத்தகவல் அலுவலர் எடுத்த முடிவினை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அந்த மூன்றாம் நபருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19ன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு.
குறிப்பு:
சட்டப்பிரிவு 11 (மூன்றாம் நபர் தகவல்) பற்றிய மேற்கண்ட விளக்கத்தை கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து ஆணையம் வழங்கிய தீர்ப்பில் காணலாம்.
http://www.tnsic.gov.in/judgements/new/pdfs/34307_2014_11062015_G%20Alex%20Benziger.pdf

No comments:

Post a Comment