disalbe Right click

Wednesday, February 22, 2017

ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை


ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்;வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூ400 லஞ்சம் வாங்கிய திருத்தங்கல் நகராட்சி ஊழியருக்கு ஒன்றரை ஆண்டு சிறைதண்டனை , ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருத்தங்கல் மேலரதவீதியை சேர்ந்தவர் அய்யனார்.43. இவரது மனைவி சாந்திக்கு அவரது பெற்றோர் இரண்டு வீடுகளை கொடுத்துள்ளனர். இதற்காக வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யக்கோரி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்கு ரூ. 200 வீதம் இரண்டு வீட்டுக்கு ரூ400 லஞ்சம் தருமாறு நகராட்சி அலுவலக உதவியாளர் ஜேசு கேட்டுள்ளார். 

கடந்த 2008 ஆகஸ்ட் 10ல் ஜேசு லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. 

ஜேசுவிற்கு ஒன்றரை ஆண்டு சிறை, ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வசந்தி தீர்ப்பளித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 21.02.2017

No comments:

Post a Comment