disalbe Right click

Friday, February 3, 2017

மதுரை மாவட்ட கலெக்டர் மீதான சிறை உத்தரவு ரத்து

Image may contain: text

மதுரை மாவட்ட கலெக்டர் மீதான சிறை உத்தரவு ரத்து

மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர், மேலூர் தாசில்தார் மீதான சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உசேன் முகம்மது, மற்றும் ஜவஹர் அலி ஆகியோருக்கு வருவாய்துறை பட்டா வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 2 பேருக்கும் பட்டா வழங்க வேண்டுமென 2014-ல் மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பு கூறியது. 

நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாததால் கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு 6 வார கால சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில்மனுதாரர் இருவருக்கும் வருவாய்துறை பட்டா வழங்கியதை அடுத்து மாவட்ட கலெக்டர், மேலூர் தாசில்தார் மீதான சிறை உத்தரவை மேலூர் உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 03.02.2017

No comments:

Post a Comment