disalbe Right click

Thursday, February 2, 2017

கோர்ட் உத்தரவை மதிக்காத கலெக்டருக்கு சிறை

Image may contain: text

மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாருக்கு 6 வாரம் சிறை: மேலூர் கோர்ட் உத்தரவு

மேலூர்: கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது(சப் டிவிசன்) தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை அளந்து பிரிக்க உத்தரவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

உத்தரவு:

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2017

No comments:

Post a Comment