disalbe Right click

Friday, February 3, 2017

பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?


பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?
இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு இருக்கும் தயக்கம் இதுதான். 
தனக்குள்ள ஒரு பிரச்சணையை பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதுவதும், அதனை தீர்த்து வைக்க வேண்டுவதும் ஒரு கலைதான்.

நீங்கள் எழுதுகின்ற மனுவின் மூலமாக அதனை படிக்கும் அதிகாரியானவர், உங்களது பிரச்சணையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டால்தான் அதனை அவர் தீர்க்க முற்படுவார்.
உங்களது மனுமூலமாக உங்களுக்குள்ள பிரச்சணையை படிக்கின்றவர்களுக்கு, கண்ணாடியில் தனது முகத்தை பார்ப்பது போல, அது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
உங்களுக்குள்ள பிரச்சணை மற்றவர்களைவிட உங்களுக்குத்தான் மிக நன்றாகத் தெரியும். ஆகையால், அதனை நீங்கள் எழுதுவதுதான் நல்லது.
பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?
கருப்பு அல்லது புளு கலர் மை பேனாவால் எழுதுங்கள். வேறு கலர் மையை கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள்.
பெட்டிசனின் இடதுபுறம் 1 இஞ்ச் அகல மார்ஜின் விடுங்கள். பக்கம் எண் எழுதுங்கள். நான்கு புறமும் 1 இஞ்ச் அகல மார்ஜின் இருந்தால் உங்களது பெட்டிசன் மிக அழகாக இருக்கும்.
முதலில் சுருக்கமாக தலைப்பை எழுதுங்கள். அதன் கீழ் அடிக்கோடிடுங்கள். பின்பு, உங்களது பெயர் மற்றும் வயதை குறிப்பிட்டு முழு முகவரியை தெளிவாக எழுதுங்கள். 
அதற்குப்பின் பெறுநர் முகவரியை எழுதுங்கள். பெறுநர் முகவரியில் பெறுபவரின் பெயரை குறிப்பிட்டிருந்தால் அதற்கு முன் உயர்திரு என்றும், பெயருக்குப் பின்பு அவர்கள் என்றும் சேர்த்துக் கொள்ளுங்கள். 
பதவியை மட்டும் குறிப்பிட்டிருந்தால், உதாரணமாக மேலாளர் என்று இருந்தால், அதற்குப் பின்னால் அவர்கள் என்று சேர்த்துக் கொண்டால் போதுமானது. பதவிக்கு முன்னால் உயர்திரு என்று போட தேவையில்லை.
அதற்கு அடுத்து எதுபற்றி எழுத நினைக்கிறீர்களோ அதனைப்பற்றி சுருக்கமாக (பொருள்) எழுத வேண்டும். உங்களது கடிதத்தை முழுமையாக படிக்காமலேயே உங்களது பிரச்சணையை அதிகாரி உணர்ந்து கொள்ள இது உதவும். 
உதாரணமாக ஏதேனும் சான்றிதழ் பெற வேண்டியது இருந்தால், ............................ சான்றிதழ் வேண்டுவது சம்பந்தமாக. என்று பொருளில் குறிப்பிட வேண்டும். 
உங்கள் பிரச்சணை சம்பந்தமாக ஏதாவது செய்தி, ஆணை, சுற்றறிக்கை அல்லது கடிதத்தை நீங்கள் பார்த்திருந்தால், அதனைப்பற்றி பொருளுக்கு கீழே (பார்வை) குறிப்பிட வேண்டும். அவைகள் ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால், அவைகளை தேதிவாரியாக வரிசைப் படுத்துங்கள். தங்களது பிரச்சணையின் வீரியத்தை அதிகாரிக்கு இது உணர்த்தும்.
அதன்பிறகு மரியாதைக்குரிய அய்யா/அம்மா, என்று தொடங்கி தங்கள் பிரச்சணைகளை எழுத வேண்டும். தேவையில்லாத விஷயங்கள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு வரிகளுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்கும்படி எழுதுங்கள். ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொரு பத்தியில் குறிப்பிடுங்கள். நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். அடித்தல், திருத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிவில் உங்கள் பிரச்சணையை தீர்ப்பதற்கு அதிகாரியிடம் பணிவுடன் வேண்டுங்கள். அவர்களுக்கு ஆணையிடாதீர்கள். 
அதற்குக் கீழே நாள் மற்றும் இடம் குறிப்பிடுங்கள். அதற்குக் கீழே மறக்காமல் கையொப்பம் செய்யுங்கள்.
என்னென்ன இணைக்க வேண்டும்?

பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதம், உத்தரவு அல்லது ஆணை போன்ற ஆவண நகல்களை இணையுங்கள். 
நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
மேலதிகாரிகளுக்கு நகல் அனுப்ப நினைத்தால், பணிவுடன் நகல் சமர்ப்பிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு அதன் கீழ் அவர்களது முகவரியை குறிப்பிடுங்கள்.
எழுதிய பெட்டிசனை ஒரு நகல் (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அனுப்புகின்ற கடிதங்களை பதிவுத்தபால் மூலம் அனுப்புங்கள். தபால் அலுவலகத்தில் அதற்காக தருகின்ற ரசீதுகளை எடுத்து வைத்துள்ள விண்ணப்ப நகலில் ஒட்டி பத்திரப்படுத்துங்கள். மேல்முறையீடு செய்ய அவை உதவும்
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment