disalbe Right click

Sunday, February 12, 2017

சகோதரியின் வாரிசாக சதோதரன் ஆக முடியாது


சகோதரியின் வாரிசாக சதோதரன் ஆக முடியாது

புதுடில்லி: திருமணமான பெண், அவரது கணவர் வீட்டின் மூலம் சம்பாதித்த சொத்துகளுக்கு, அந்த பெண்ணின் சகோதரன் வாரிசாக உரிமை கோர முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு: 

ஹிந்து வாரிசு சட்டத்தின் படி, யார் யார், ஒருவரது வாரிசு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணுக்கு, அவரது சகோதரன் வாரிசாக முடியாது. அதிலும், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் சம்பாதித்த சொத்து, அந்த பெண்ணின் பெயருக்கு மாற்றப்பட்டாலும், அதில் அந்த பெண்ணின் சகோதரன் எந்த உரிமையும் கோர முடியாது.

மகன், மகள் இல்லாத நிலையில், திருமணமான பெண்ணின் சொத்துகளுக்கு, அவரது கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே உரிமை கோர முடியும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 13.02.2017

No comments:

Post a Comment