disalbe Right click

Sunday, February 5, 2017

பாண்டிச் சேரி (புதுச்சேரி) வரலாறு

No automatic alt text available.

பாண்டிச் சேரி (புதுச்சேரி) வரலாறு
வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது.
  • முன்னதாக பாண்டி மற்றும் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது.
  • முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உரோமானிய வணிகவிடங்களில் பொடுகெ அல்லது பொடுகா எனப்படும் இடம் குறிப்பிடப்படுகிறது.
  • இது நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவப் பேரரசின் பகுதியாக இருந்தது.
  • பத்தாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் சோழர்களின் வசம் இருந்தது.
  • 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் கைப்பற்றினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விசயநகரப் பேரரசின் பகுதியாக இருந்தது.
  • 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்து வந்தது, இடையிடையே ஆங்கிலேயர்களிடமும் டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்த்து.
  • 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
  • 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்த 178 மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இதில் 170 பேர் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் 8பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
  • இதனால் 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது.
  • ஆனால் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியே முறைப்படி உடன்படிக்கை கையெழுத்தானது.
  • அதனால் இன்றுவரை ஆகஸ்ட்16-ம் தேதியே புதுச்சேரியின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
  • பிரெஞ்ச் அமைப்புகளின் கோரிக்கைகளை அடுத்து தற்போதைய முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களால் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரியின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 16-ம் தேதி குடியரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டது.
  • இங்கு திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், தெருக்களின் அமைப்புகளில் பிரெஞ்சு கட்டிடக்கலையின் நேரடி தாக்கத்தை காண முடிகிறது.
  • பாண்டிச்சேரியில் பல்வேறு தெருக்கள் பிரெஞ்சு பெயர்களை தாங்கியுள்ளதாகவும் மற்றும் பிரம்மாண்டமான வீடுகளையும், தனி மாளிகைகளையும் காலனீய காலத்தைச் சோந்த கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருப்பதை காண்பது பார்வையாளரின் கண்களுக்கு சிறந்த விருந்தளிக்கும்.
  • இந்த நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது—இதில் பிரெஞ்சுப் பகுதியானது வெள்ளை நகரம் அல்லது வில்லே பிளான்சே என்றும், இந்தியப் பகுதி கருப்பு நகரம் அல்லது வில்லே நோய்ரே என்றும் அழைக்கப்படுகின்றன.
  • பாண்டிச்சேரி வரைபடத்தைப் பார்த்தவர்களுக்கும், பாண்டியில் இருந்தவர்களுக்கும் இந்த வேடிக்கைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு!
  • நாம் பேருந்தில் பயணித்தால், நேர் ரோடிலேயே, பாண்டிச்சேரி நெருங்கும் சமயம் “பாண்டிச்சேரி எல்லை வரவேற்கின்றது” என்ற வாசகத்தைக் காணலாம்.
  • சிறிது தூரம் சென்றதும், “தமிழ்நாட்டு எல்லை, காஞ்சிபுரம் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் வரவேற்கின்றது” என்ற வாசகத்தைக் காணலாம்.
  • சற்று தூரம் சென்றதும், “தமிழ் நாட்டின் நன்றி” உரையைக் காணலாம்.
  • சற்றுத் தூரம் கடந்ததும், உங்களை விழுப்புரம் மாவட்டம் வரவேற்கும்.
  • 2 கி.மீ. தூரம் கூட கடந்திருக்கமாட்டீர்கள்,
  • விழுப்புரம் நன்றி சொல்லும்.....பாண்டி எல்லை வரவேற்கும்.
  • இப்படித் தமிழ்நாடும், பாண்டியும் மாறி, மாறி வரவேற்கும் நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும்!
  • பல இடங்களில், மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளிலேயே ஒரு தெரு தமிழ் நாட்டு எல்லைக்குள்ளும், அடுத்த தெரு பாண்டிச்சேரி எல்லைக்குள்ளும் இருக்கும்!
  • சென்னையில் இருந்து 3 மணி நேர பயணத்தில் புதுச்சேரியை அடையலாம்.
  • புதுச்சேரியை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு வார இறுதி நாளை இனிமையாகக் கழிக்க புதுச்சேரி சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும்.
  • புதுச்சேரியில் முக்கியமாகக் கூற வேண்டும் என்றால் 15 சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.
அரிக்கமேடு
  • புதுச்சேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது அரிக்கமேடு. தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடைபெற்று வரும் இந்த பகுதியில் ரோமானிய கால வணிக முறைகள் தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வரலாறு, தொல்லியல் ஆய்வு உள்ளிட்டவை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு. இது மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
அரவிந்தர் ஆசிரமம்
  • புதுச்சேரி என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது அரவிந்தர் ஆசிரமம். இங்கு அரவிந்தர் மற்றும் அன்னை வாழ்ந்த வீடும் நினைவிடமும் அமைந்துள்ளது.
  • ஏராளமானோர் நாள் தோறும் இங்கு வந்து ஆசிரமத்தை பார்த்துச் செல்கின்றனர்.
பாரதி பூங்கா
  • புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சற்று நேரம் குளுமையான நிழலில் இளைப்பாறவும், குழந்தைகளுடன் சென்று நேரத்தை செலவிடவும் பாரதி பூங்கா ஒரு சிறந்த இடமாகும்.
  • புதுச்சேரி கடற்கரை சாலை அருகே பாரதி பூங்கா அமைந்துள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள ஒரே ஒரு பெரிய பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
பொடானிகல் கார்டன்
  • புதுச்சேரியில் அமைந்துள்ள பொடானிகல் கார்டன் எனப்படும் தோட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு தெற்கே அமைந்துள்ளது.
  • 1826ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில், உலகெங்கிலும் இருந்து ஏராளமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
  • இங்கு இசையுடன் கூடிய நீர் விளையாட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் மட்டும் இந்த இசையுடன் கூடிய நீர்விளையாட்டு இயங்கும்.
கோயில்கள்
  • பாண்டிச்சேரியில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
  • இங்குள்ள சுற்றுச் சுவரில் 40 விதமான விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கோயிலுக்கு தினமும் 5000க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
எம்.ஜி. சாலையில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோயில்.
  • விஷ்ணுவுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலில் ராமர், சீதை, லஷ்மணன், அனுமான் சிலைகளும் அமைந்துள்ளன. இந்த கோயிலின் கோபுரம் மிகச் சிறந்த கலையுணர்வுக்கு சாட்சியாக விளங்குகிறது.
  • இந்த கோயிலின் அருகே கன்னிகா பரமேஸ்வரி ஆலயமும் உள்ளது. இது சக்தி ஆலயமாகத் திகழ்கிறது.
  • பாரதி சாலையில் அமைந்திருப்பது காமாட்சியம்மன் ஆலயம். தென்னிந்திய கோயில்களில் இருந்து இந்த ஆலயம் வேறுபட்டு காணப்படும். பொதுவாக கோயில்களின் நிறம் இந்த ஆலயத்துக்கு இருக்காது. இந்த கோயில் ஒரு புதிய காட்சியாக நம் கண்களில் பதியும்.
பாரதி அருங்காட்சியகம்
  • மிகப்பெரிய கவிஞரும், சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டவருமான சுப்ரமணிய பாரதியார் 1908 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியில் வாழ்ந்து வந்தார்.
  • அவர் வாழ்ந்த இல்லம் தற்போது பாரதி அருங்காட்சியகமாக விளங்குகிறது
  • ஈஸ்வரன் தர்மராஜா கோயில் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், பல தமிழர்களின் கோயிலாகவும் விளங்குகிறது.
  • இதோடு மட்டும் அல்லாமல், புதுச்சேரி அரசு அருங்காட்சியகம் பாரதிதாசன் அருங்காட்சியகம், ஆனந்தா ரங்கா பிள்ளை, ஜவகர் பொம்மை அருங்காட்சியகமும், பொடானிகல் கார்டனை ஒட்டியுள்ள குழந்தைகளுக்கான அருங்காட்சியகமும் பார்க்கத் தக்கவை.
பிரான்ஸ் போர் நினைவிடம்
  • புதுச்சேரியில் கௌபர்ட் அவென்யூ என்ற இடத்தில் அமைந்திருப்பது பிரான்ஸ் போர் நினைவிடம்.
  • முதல் உலகப் போரின் போது பிரான்ஸ் நாட்டுக்காக போரிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment