disalbe Right click

Saturday, February 18, 2017

குற்றவாளிகளிடம் அபராதம் வசூலிக்கும் வழி


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன?
மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும் நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. 

 உச்சநீதிமன்றம்.அபராதத்தை செலுத்தத்தவறி னால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்கும் நடைமுறைகள் பற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் கூறியதாவது:

குற்றவழக்குகளில் துாக்கு, ஆயுள், கடுங் காவல், மெய்க்காவல்(சாதாரண) சிறை தண்டனை, அபராதம் தண்டனையாக விதிக் கப்படும். கடுங்காவல் தண்டனை என்பது சிறை யில் வேலை பார்க்க வேண்டும்.சாதாரண தண்டனை என்பது சிறையில் வேலை பார்க்கத் தேவையில்லை. இவ்வழக்கில் சாதாரண சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

குற்றவழக்கை பொறுத்த வரை, 'ஆளுடன் வழக்கு ஆளுடன் முடியும்' என்பது சட்டத்தின் நெறி. 

இதன்படி ஜெயலலிதா இறந்ததால், அவருக்கு எதிரான வழக்கில் அனுபவிக்க வேண்டிய சிறை தண்டனை குறித்த பகுதி,உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் இறந்தால், 30 நாட்களுக்குள் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள், வழக்கின் ஒரு தரப்பினராக இணைய வேண்டும் அல்லது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அதுபோல் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டகுற்றவாளி இறந்து போனால்,அதிலிருந்து 30 நாட்களுக்குள் அபராதம் தொடர்பான குறைபாடு பற்றி அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களை வழக்கின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள மனு செய்ய வழிவகை உள்ளது. 

ஆனால், இவ்வழக்கில் தீர்ப்புஒத்தி வைக்கப்பட்ட பிறகு தான், முதல் குற்றவாளியான ஜெ.,இறந்தார். சிறை தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும் போது, அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் தண்டனை காலத்தின் நான்கின் ஒரு பங்கு காலத் திற்கு குறையாத ஒரு காலத்தை, தண்டனையாக அனுபவிக்க உத்தரவிடலாம். 

அதன்படி 4 ஆண்டு சிறை தண்டனையின் ஒரு பகுதியான, ஓராண்டு சிறை தண்டனை, இவ் வழக்கில் விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக் குள், அபராதத்தை வசூலிக்கும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

செலுத்த தவறும் பட்சத்தில், வருவாய் வசூல்சட்டப்படி, அபராதத்தை வசூலிக்க சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட கலெக்டர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியானவர், குற்றவாளியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் கொண்டுவர வேண்டும். தொகையை வசூலித்து, அரசுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

சசிகலா உட்பட 3 பேரின் தண்டனையைப் பொறுத்தவரை, அபராதத்தை செலுத்தாமல், அதற்கு பதிலாக அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க விரும்பினால் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்களிப்படுவர். 

அப்படிகூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில், அவர்கள் தண்டனை காலம் முடிந்ததிலிருந்து 6 ஆண்டு களுக்கு பொதுத்தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஜெ.,விற்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க, அவரது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாசொத்துக்களை, பறிமுதல் செய்ய, மேற்கண்ட வழிவகையை விசாரணை நீதிமன்றம் பின்பற்றும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017 

No comments:

Post a Comment