disalbe Right click

Monday, March 20, 2017

சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!


சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!

ஒரே ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்கலாம். 
நீதிமன்றம் சாட்சியம் அளித்த சாட்சியின் நம்பகத்தன்மையை தான் பார்க்க வேண்டுமே தவிர எத்தனை சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளார்கள் என்று பார்க்கக்கூடாது. ஒரே ஒரு சாட்சியின் வாக்குமூலம் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவாக கூடுதல் சாட்சியம் தேவையில்லை.
P. V. Haridas and Smt. Anuja Prabhussai Mohammed Badshaha Sayyad and Others 
 Vs
State of Maharastra, (2016-Cri.LJ-70-NOC-Bom),
Criminal Appeal No - 580&100/2007
Thanks to : Mr. Dhanesh Balamurugan Advocate
குறிப்பு: இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134லிலும் எந்த வழக்கிலும் ஏதாவதொரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை எண்ணிக்கையுள்ள சாட்சிகள் வேண்டுமென்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment