disalbe Right click

Sunday, April 30, 2017

போக்சோ சட்டம்-2012

போக்சோ சட்டம்-2012
குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012
குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட யாரும் எளிதில் தப்பிக்க வழியே இல்லாத மிக வலிமையான சட்டம் இதனை சுருக்கமாக ”போக்சோ” சட்டம் என்று அழைக்கிறோம்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை காப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு  இந்த  சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம் செய்தவர்க்கு தண்டனை வழங்கப்படும். மற்ற வழக்குகளை போல  பாலியல் வன்கொடுமை வழக்கை வெளிப்படையாக விசாரிக்க மாட்டார்கள், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை குழந்தையின் எதிர்கால நலன் கருதி மறைமுகமாக நடத்தப்படும்.
குற்றங்கள்  நிரூபிக்கப்பட்டால்சம்பந்தப்பட்டவர்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கப்படும். 
இந்த குற்றம் சம்பந்தமாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்த பின் தான், விசாரிக்க வேண்டும் என்பதில்லை. புகார் வந்தவுடனேயே காவல்துறையினர் துரிதமாக விசாரனையை துவக்க வேண்டும் மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக, யாராக இருந்தாலும், அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரனை செய்ய வேண்டும்.
இந்த குற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரை உடன் வைத்துக்கொண்டு, பாதிப்புக்குள்ளான குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. காவல் நிலைய எல்லை பிரச்சனையை காரணம் காட்டி, வழக்கு விசாரணையை காவல்நிலைய அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது. அவ்வாறு செய்யும் காவல்துறை அதிகாரிகளின் மீது, நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்வதற்கு, இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம், , ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும், அதை வீடியோவிலும் மற்றும் ஆடியோவிலும் பதிவு செய்ய வேண்டும். உடனடியாக அந்தக் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும். இவைகள்தான் இந்த  வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும்.
இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டில் பல குழந்தைகள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பானது அரசு, நீதித்துறை, காவல்துறை ஆகியவர்களுக்கு மட்டுமல்லாமல் சமானிய மக்களுக்கும்  உள்ளது. என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.04.2017

No comments:

Post a Comment