disalbe Right click

Friday, April 7, 2017

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க.......

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க.......

மத்திய அரசாங்க அல்லது மாநில அரசாங்க ஊழியர்களுக்கு எதிராகவோ அல்லது பொது ஊழியருக்கு எதிராக நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தாக்கல் செய்யக்கூடாது.

மேற்கண்டவர்களுக்கு உரிமை வழக்கு விசாரணை முறைச் சட்டம் (Civil Procedure Act) பிரிவு - 80ன் கீழ் அறிவிப்பு கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

அறிவிப்புகளை இரண்டு பேருக்கு அனுப்புவது நல்லது. ஒன்று துறைத் தலைவர் அ்வர்களுக்கும், மற்றொன்றை சம்பந்தப்பட்ட ஊழியருக்கும் ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆனால், அரசு ஊழியர்கள் யார் மீதும் ஊழல் புகார் வந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment