disalbe Right click

Monday, May 8, 2017

போலீஸ்-பொதுமக்கள் இணைந்த வாட்ஸ்-அப் குழு உதயம்

போலீஸ்-பொதுமக்கள் இணைந்த வாட்ஸ்-அப் குழு உதயம்

குற்றங்களை தடுக்க காவல் ஆணையர் புது நடவடிக்கை: சென்னை காவல் நிலையங்களில் வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவு - பொது மக்கள், போலீஸார் உறுப்பினர்களாக இருப்பார்கள்

சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் ஆணை யர் கரன் சின்ஹா சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலை யங்களிலும் வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்று இணைய தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓர் இடத்தில் நடக்கும் நிகழ்வு அடுத்த விநாடியே மற்றொரு இடத்துக்கு வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. குற் றத்தை தடுக்கும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அழைப்பு
அதன்படி சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களி லும் (135 காவல் நிலையங்கள்) வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் அட்மினாக அந்தந்த காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் இருப்பார்கள். மேலும் குற்றப்பிரிவு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ரோந்து பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பொதுமக்கள் சார்பில் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், வணிக வளாக காவல் மேலாளர் கள், தன்னார்வ தொண்டு அமைப் பினர், அரசு அதிகாரிகள், ஹோட் டல் பாதுகாப்பு மேலாளர்கள் உள்ளிட்ட 13 வகையைச் சேர்ந்த வர்கள் உறுப்பினர்களாக இருப் பார்கள்.
கருத்து தெரிவிக்கலாம்
சம்பந்தப்பட்ட குழுவை துணை ஆணையர்கள், உதவி ஆணை யர்கள் கண்காணிப்பார்கள். அந் தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நிகழ்வுகள், சம்பவங்கள், பாதுகாப்பு குறைபாடுகள், மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
மேலும் நடக்கும் குற்ற நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அனுப்பலாம். வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் கள் (தெற்கு மற்றும் வடக்கு) ஆய்வு செய்வார்கள்.
வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்படும் தேவையான தகவல்களை சேகரித்து போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹா தெரிவித் துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.05.2017


No comments:

Post a Comment