disalbe Right click

Monday, July 3, 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி

Image may contain: text
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இச்சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் எழுத்து மூலமாக எத்தகவல்கள் அவர்களுக்குத் தேவையோ, அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். 
மனுதாரரை தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்கள் (அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் நகலனுப்பி எண் (பேக்ஸ் எண்), மின்னஞ்சல் முகவரி) குறிப்பிடப்படவேண்டும். விவரங்கள் தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இது இருக்கும். 
இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தகவல்கள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமாதலால், குடியுரிமைச் சான்றையும் விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
மனுவை அனுப்புதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் மத்திய அரசின் தகவல் அறியும் உரிமை விதிகள் 2012-ல் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 6(i)-ன்கீழ் தகவல் பெறுவதற்கான் விண்ணப்பங்களுடன் ரூ.10/- ரொக்கம் செலுத்தியதற்கான ரசீது/ கேட்புவரைவோலை/வங்கிக் காசோலை (சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர் பெயரில்) இணைக்கப்பட வேண்டும்.
உங்கள் மனுவுடன் மனுக்கட்டணம் ரூ 10/- க்கான கேட்பு வரைவோலையாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ ரிசர்வ் வங்கியின் பெயருக்கு அனுப்பவும். கட்டணம் பணமாகவும் மனுவுடன் செலுத்தப்படலாம். 
மனுக்களை நகலிறக்கி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 
மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 
என்ற முகவரிக்கு அனுப்பலாம். ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். 
இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.
சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க வேண்டியிருந்தால் -

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-
எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.
தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

இந்திய அரசு 2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது (http://www.persmin.nic.in/). 2005 அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல், பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள்

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பொது அலுவலகமாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்குத் தகவல்கள் அளிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும்.
வெளிப்படைத்தன்மை அதிகாரியின் பெயர் மற்றும் முகவரி

தலைமைப் பொது மேலாளர் – பொறுப்பு
மனித வள மேலாண்மைதுறை 
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம் (20வது தளம்)
சாஹித் பகத் சிங் மார்க்-போர்ட்
மும்மை – 400 001
தொலைபேசி எண் 22610301
பிரிவு 4(1)(b) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள்

(i) அமைப்பு / நிறுவனத்தின் விவரங்கள், பணிகள், கடமைகள்
(ii) அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்
(iii) மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்
(iv) தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்
(v) வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்
(vi) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்
(vii) பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்
(viii) அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா அல்லது கூட்டத்தில் நடப்பவை மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறதா
(ix) அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு
(x) மாதச்சம்பளம் / சலுகைகள்
(xi) திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்
(xii) பொருந்தாதது
(xiii) சலுகைகள் பெறுவோர் விவரம் அளிக்கப்பட்ட அனுமதி அல்லது அங்கீகாரம்
(xiv) மின்னணு முறையில் கொடுக்கப்பட்ட தகவல்களின் விவரங்கள்
(xv) தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்
(xvi) பொதுத் தகவல் அதிகாரியின் பெயர், பதவி மற்றும் முகவரி
கோரிக்கையை எங்கு அனுப்ப வேண்டும்

உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 
மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 
என்ற முகவரிக்கு அனுப்பலாம். 
ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். கோரிக்கையை அனுப்பும்போது, விண்ணப்பதாரருக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அதைக் கொணடு அவர் தனது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளமுடியும்.
மத்திய பொதுத் தகவல் அதிகாரி / மாற்று மத்திய பொதுத் தகவல் அதிகாரி, மேல்முறையீட்டு அதிகாரி
இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் விண்ணப்பிக்க 

துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) 
இந்திய ரிசர்வ் வங்கி
மனிதவள மேலாண்மைத் துறை
16, ராஜாஜி சாலை
சென்னை - 600 001 044-25360823
044-25399203
Fax: 044-23565220
தகவல் அளிக்க ஆகும் காலம்

உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.
தகவல் கிடைக்கப் பணம் தரவேண்டுமா ?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஒழுங்கு முறைக்கட்டணம் செலவு) விதிகள் 2005 இன் கீழ் பொது அதிகாரி.
ஒருபக்கத்துக்கு (A3 or A4) (அச்சு அல்லது நகல்) ரூ.2/-.
பெரிய அளவு காகிதமெனில் அதற்குள்ள விலை, மாதிரிகள் ஏதேனும் அனுப்பினால் அவைகளுக்குரிய விலை, ஆவணங்களை ஆய்வு செய்ய : முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணம் ஏதுமில்லை, அதற்கு அதிகமனால் குறைந்த அளவு, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ.5/- கட்டணம் விதிக்க வேண்டும்
சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க 

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை 
அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-
எப்பொழுது செலுத்தவேண்டும்?தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.
தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
கேட்ட தகவலை ரிசர்வ் வங்கி தர மறுக்கலாமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8, 9 இன் கீழ், சில தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் தகவல்கள்; பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார, அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்டின் தகவல்கள்; அன்னிய நாடுகளுடனான உறவு; குற்றமாகக் கருதப்படுவதற்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவைகள் தடைசெய்த தகவல்கள்; நீதிமன்ற அவதூறுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
பாராளுமன்ற, சட்டமன்ற தனி உரிமைகளை மீறும் செயலுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
வணிக நம்பிக்கை, வியாபார ரகசியங்கள், அறிவுச்சொத்துகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்; முன்றாவது நபரின் போட்டியிடும் தன்மையைப்பாதிக்கும் தகவல்கள்; பொதுவான மக்கள் நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள்
அந்நிய அரசுகளிடமிருந்து வரும் ரகசியத்தகவல்கள், பிறரது உயிரையும், உடமையையும் பாதிக்கும் தகவல்கள்; தகவல் தரும் நிறுவனங்களைப் பாதிக்கும் தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அல்லது சட்டத்தை அமல் படுத்துபவர்களை பாதிக்கும் தகவல்கள்
ஏற்கனவே விசாரணை, ஆய்விலிருக்கும் விவரங்களைப் பற்றிய தகவல்கள், அமலில் உள்ள விசாரணை, ஆய்வைப் பாதிக்கும் தகவல்கள்
அமைச்சர் குழுக்காகிதங்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தகவல்கள்
தனி நபர் பற்றிய தகவல்கள் பொது நன்மை அல்லது பொதுக் காரியத்திற்கு அல்லது பொது நன்மைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள்
ஒட்டுமொத்தமான பொதுநலன் கருதி தகவல்களை வெளியிடுதல் தேவை என்று தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரி திருப்திபட்டாலன்றி, பொருப்பாண்மையிலிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்கள்
யாருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும் ?

(மேல் முறையீட்டு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாஹித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
Tel : 022 - 22611083
Fax : 022 – 22632052
அல்லது
(மாற்று மேல் முறையீடு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாகித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
தொலைபேசி : 022 - 22611097
நகலனுப்பி 022 – 22675277
மேற்கண்ட தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் https://www.rbi.org.in/ இணைய தளத்தில் இருந்து 03.07.2016 அன்று எடுக்கப்பட்டு முகநூலில் எனது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment