disalbe Right click

Tuesday, August 15, 2017

அரசு ஊழியர் - உரிய அனுமதியின்றி உயர்கல்வி பயிலலாமா?

அரசு ஊழியர் -  உயர்கல்வி பயில என்ன செய்ய வேண்டும்?
அரசு ஊழியர்களுக்கென்று சில நடத்தை விதிகளை அரசு நிர்ணயித்துள்ளது. அதில் அரசு ஊழியர்கள் உயர்கல்வி  பயில சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. அதனை கீழே காண்போம்.
(அ) அஞ்சல் வழிக் கல்வி
அஞ்சல் வழிக் கல்வி பயில்வதற்கு அந்த அரசு ஊழியர் பணிபுரிகின்ற அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அவர்களிடம் எழுத்து மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்..
(அரசாணை எண்:328, நிர்வாகத்துறை நாள்:09.04.1993 மற்றும் அரசு கடித எண்:22536/54, நிர்வாகத்துறை நாள்:22.09.1993)
(ஆ) மாலை நேரக் கல்வி
மாலை நேரக் கல்வி  பயில்வதற்கு அந்த அரசு ஊழியர் பணிபுரிகின்ற துறைத் தலைவர் அவர்களிடம் அவர்களிடம் எழுத்து மூலமாக விண்னப்பித்து அனுமதி பெற வேண்டும்.  (அரசாணை எண்:1341, பொது நாள்:27.08.1993 மற்றும் அரசு கடிதம் எண்:98189/84-8 நிர்வாகத்துறை நாள்:13.08.1983) 
மேற்கண்ட அஞ்சல் வழிக்கல்வி மற்றும் மாலை நேரக்கல்வி பயில்வதற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எந்தவித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசு ஆணை எண்:200, நிர்வாக சீர்திருத்தத்துறை,  நாள்:19.04.1995.
(இ) தனது சொந்தச் செலவில் உயர்கல்வி  பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண்: 362, நிர்வாகத்துறை, நாள்:04.11.1992 மற்றும் அரசு கடித எண்:99147/பணி-ஏ/93, நாள்: 22.06.1993)
(ஈ) அரசு ஊழியர் ஒருவர் (Private Study) பயிலதற்கும் துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms. No.:360, P & A.R., Date:04.11.1992) 
***********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment