disalbe Right click

Friday, August 18, 2017

கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பையும்

கீழ்கோர்ட் அளித்த  தீர்ப்பையும் 
உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்!
கீழ் கோர்ட் தீர்ப்பை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட்டுக்கு உத்தரவு
புதுடில்லி: 'கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பையும் உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சென்னை உயர்நீதி மன்றத்துக்கு, சி.ஐ.சி., எனப்படும், தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
'சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளில், கீழ் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிட்டால்தான், அதை இரண்டு தீர்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். 
கீழ்கோர்ட் தீர்ப்புகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்' என, ஆர்.கே. ஜெயின் என்பவர், தலைமை தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 
'கடந்த, 2014 ஜூன் முதல், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன், நீதிபதிகள் உத்தரவிட்டால் மட்டுமே, அந்த தீர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'முந்தைய தீர்ப்புகள் தேவைப்பட்டால், அதற்காக விண்ணப்பித்து, நகலை பெறலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே. மாத்தூர், தன் தீர்ப்பில் கூறியதாவது:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கீழ் கோர்ட்டின் தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக வசதியாக, அந்த வழக்கில் கீழ் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 17.08.2017

No comments:

Post a Comment