disalbe Right click

Monday, August 14, 2017

கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில்குற்றஞ்சாட்டப் பட்டோருக்குஜாமின் வழங்கும் நடைமுறையை கைவிடும்படிகீழ் கோர்ட்டுகளுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்ஜாமின் : 
ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில்தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தஉச்ச நீதிமன்ற நீதிபதிகள்ரஞ்சன் கோகோய்நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஜார்க்கண்டை சேர்ந்த ஒருவர்தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோதுஉச்ச நீதிமன்றத்தில்முன்ஜாமின் பெற்றுள்ளார். இருப்பினும்ஜார்க்கண்டில் உள்ளகீழ் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகிவழக்கமான ஜாமின் பெற்றுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன.உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில்வழக்கு நிலுவையில் இருக்கும்போதுகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்குகீழ் கோர்ட்டுகள்வழக்கமான ஜாமின் அளிக்கும் நடைமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றம்உச்ச நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில்முன் ஜாமின் அளித்துள்ள பட்சத்தில்குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கீழ் கோர்ட்டில் சரண் அடைந்துவழக்கமான ஜாமின் கோரக் கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்சரண் அடைவதும்வழக்கமான ஜாமின் கோருவதும்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கருதப்படும்.
அர்த்தமற்றது : 
கீழ் கோர்ட்டில் ஜாமின் பெற்ற பின்மேல் நீதிமன்றங்களில்சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமை அடைந்துகுற்றஞ்சாட்டப்பட்ட நபருக்குஜாமின் நிராகரிக்கப்படும்போதுஅதுஅர்த்தமற்றதாகி விடும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.08.2017


No comments:

Post a Comment