disalbe Right click

Friday, September 22, 2017

ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய

ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய..... 
சென்னை ஐகோர்ட்டில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வழக்கறிஞர் திரு புகழேந்தி அவர்கள் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 
அந்த மனுவில் அவர் வினித் நாராயணன் என்பவரது வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம்,, ஊழல் குற்றச்சாட்டில் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். இதற்காக அரசு ஒப்புதல் தேவையில்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது. 
ஆனால், அதற்கு நேர்மாறாக, தமிழக அரசு கடந்த 1988–ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அந்த ஊழல் புகாரை மாநிலஅரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த புகார் மீது தமிழக விஜிலென்ஸ் கமிஷன் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரிக்க முடியும் என்று கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசின் கீழ் நிலை அதிகாரிகள் மீது இதுபோன்ற ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எந்த முன் அனுமதியும் இல்லாமல், நேரடியாக வழக்கு பதிவு செய்கின்றனர். 
அரசு ஊழியர்கள் மத்தியில் பாகுபாடோ, பாரபட்சமோ இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து ஊழியர்கள் மீதும் ஒரே விதமாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்! என்று அவர் கோரியிருந்தார்..
இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் அவர்கள் அரசாணை ஒன்றை கடந்த 2016ம் வருடம், பிப்ரவரி மாதம் 2–ந் தேதி  வெளியிட்டார். 
அந்த அரசாணையில்,
அந்தஸ்து அல்லது குரூப் போன்றவற்றை தவிர்த்து, எந்த நிலையில் உள்ள அரசு அலுவலராக இருந்தாலும், அவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அந்த புகாரை கண்காணிப்பு ஆணையத்துக்கு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த புகாருக்கான விசாரணைக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் உத்தரவிடுவதற்கு முன்பு, தமிழக அரசின் கருத்தை கண்காணிப்பு ஆணையம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அரசாணை ரத்து
கடந்த 01.07.2016 அன்று வழக்கறிஞர் திரு புகழேந்தி அவர்களின் வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச புகாரில் அரசு அதிகாரிகளை கைது செய்ய அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 
எடுத்துக்காட்டு வழக்கு
அரசு ஊழியர் நம்பிக்கை மோசடி ,போலிஆவணம், தயாரித்தல் ,குற்ற உடந்தை, ஆகிய குற்றச்சாட்டு சம்பந்தமாக வழக்கு,பதிய, நடத்த, அரசின் முன் அனுமதி தேவை யில்லை!
Public Servant – Sanction for Prosecution 2015 STPL(Web) 314 SC (SC)(DB) - Judgment Date: 13-4-2015 - No sanction required for cheating, fabrication of records or misappropriation

INSPECTOR OF POLICE AND ANOTHER Vs. BATTENAPATLA VENKATA RATNAM AND ANOTHER
Criminal Procedure Code, 1973, Section 197 – Penal Code, 1860, Sections 420, 468, 477A, 120B read with 109 – Public Servant – Sanction for Prosecution – Whether sanction under Section 197 ‘CrPC’ is required to initiate criminal proceedings in respect of offences under Sections 420, 468, 477A, 120B read with 109 IPC? – Held that alleged indulgence of the officers in cheating, fabrication of records or misappropriation cannot be said to be in discharge of their official duty – Their official duty is not to fabricate records or permit evasion of payment of duty and cause loss to the Revenue – Learned Magistrate has correctly taken the view that if at all the said view of sanction is to be considered, it could be done at the stage of trial only – Impugned orders passed by High Court quashing proceedings on the sole ground that there was no sanction under Section 197 CrPC liable to be set aside.
Equivalent Citation: JT 2015 (4) SC 147 : 2015(5) SCALE 253

No comments:

Post a Comment