disalbe Right click

Thursday, October 19, 2017

பொது தகவல் வழங்க ஒரே அலுவலகத்தில் 20 அதிகாரிகள்

பொது தகவல் வழங்க ஒரே அலுவலகத்தில் 20 அதிகாரிகள் தமிழகத்தில் முதல் முறை
தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி..,வில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க, 20 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொது தகவல் வழங்க ஒரே அலுவலகத்தில் 20 அதிகாரிகள்: தமிழகத்தில் முதல் முறை
அங்கீகாரமில்லா மனைப்பிரிவு குறித்து தகவல் கேட்டு, ஆதம்பாக்கத்தை சேர்ந்த, பிரேம் ஆனந்தன் என்பவர், ஜன., 6ல், சி.எம்.டி..,வுக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு, ஏப்., 27ல் பதில் வந்துள்ளது. பதில் திருப்தி அளிக்காததால் அவர், தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.இந்த மனு, தலைமை தகவல் ஆணையர், கே. ராமானுஜம் முன்னிலையில், ஆக., 30ல், விசாரணைக்கு வந்தது.
அறிக்கை அளிக்க வேண்டும்
அப்போது, சி.எம்.டி.., சார்பில், பொது தகவல் அலுவலர், துணை திட்ட அதிகாரி ஆகியோர் ஆஜராகினர். விசாரணையின்போது,ஆஜரான அதிகாரிகள் தெரிவித்த பதில்கள், சி.எம்.டி..,வில் நடக்கும் நிர்வாக குழப்பத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமை தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு:
'பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகளால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு பிரிவுக்கும், பொறுப்பான தகவல் அலுவலரை நியமிக்க வேண்டும். தற்போதைய பொது தகவல் அலுவலர், ஒருங்கிணைப்பு அலுவலராக இருப்பார். இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரத்தை, உறுப்பினர்செயலர் அறிக்கையாக அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.
முதன்முறை
இதையடுத்து, சி.எம்.டி..,வில், நிர்வாக பிரிவுபரப்பு திட்ட பிரிவு, வரன்முறை பிரிவு உட்பட, பத்து பிரிவுகளுக்கும், தலா, ஒரு பொது தகவல் அலுவலர் என, 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல், 10 பிரிவுகளுக்கும், தலா, ஒரு மேல் முறையீட்டு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான நிர்வாக உத்தரவை, சி.எம்.டி.., உறுப்பினர் செயலர், விஜயராஜ்குமார் பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில், ஒரு அரசு அலுவலகத்தில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க, 20 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, இதுவே முதல்முறை
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.10.2017 

No comments:

Post a Comment