disalbe Right click

Tuesday, November 28, 2017

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை - அரசாணை

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்று கடந்த 2017 செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது தொடர்பாக தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஸ்வர்ணா அவர்கள், ”அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும். இல்லாத பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றும் உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல், அரசு ஊழியர்களை நேரடியாக பார்த்து தங்களுக்குத் தேவையான அரசு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், லஞ்சம் பெறுகின்ற அரசு ஊழியர்கள் மீது புகார் அளிக்கும் போது, அந்த ஊழியரின் பெயர் மற்றும் பதவியை யாரிடமும் விசாரிக்காமல், யாருக்கும் தெரியாமல் புகாரில் குறிப்பிட முடியும்! என்றும் பொது மக்கள் இந்த உத்தரவைக் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
கானல் நீரான உத்தரவு
இது போன்ற ஒரு உத்தரவை ஏற்கனவே தமிழக அரசு கடந்த 09.01.2014 அன்று போட்டு அதற்கு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தது. அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிட்ட உத்தரவையே அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. வெளியிட்ட அரசாணைக்கும் ஒரு மதிப்பு இல்லை. இந்த நிலையில் அடையாள அட்டை சம்பந்தமாக அதே போன்று மற்றொரு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Image may contain: text
 
அரசு உத்தரவை, அரசாணையை அரசு ஊழியர்களே மதிக்காமல் தங்கள் இஷ்டம் போல் செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும். இதன் மீது கவனம் செலுத்தி அனைத்து அரசு ஊழியர்களும் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிவதற்கு தமிழக அரசு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.
**************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment