disalbe Right click

Friday, December 29, 2017

மனுதாக்கல் செய்ய அடையாள அட்டை

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலியான வழக்கறிஞர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து களைவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. போலி வழக்கறிஞர்களை கண்டுபிடித்து அவர்களை களைவதற்கு வழக்கறிஞர் சங்கங்களும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அடையாள அட்டை
தங்களுக்கான அடையாள அட்டையை பார் கவுன்சலில் இருந்து பெற்று, அதன் நகலை இணைத்து வழக்குகளை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2ம் தேதிக்குள் இது நடைமுறைக்கு வரவேண்டும். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக நீதிமன்ற பதிவாளர் அனுப்பவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.12.2017

No comments:

Post a Comment