disalbe Right click

Saturday, January 20, 2018

இரு சக்கர வாகனம் - பெண்களுக்கு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்க பெண்களுக்கு தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பு வருமாறு:
பயனாளிகளுக்குள்ள தகுதி என்ன?
கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது அந்த வாகனத்தின் 50% விலை இதில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..
வாங்கக்கூடிய இரு சக்கர வாகனம் 01.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..
பயனாளிகளுக்குண்டான பணியாற்றும் தகுதி:
1.நிறுவனப் பணியில் உள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.
2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்.
3.அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.
4.பெண்; வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்); ஆர்வலர்கள்..
வயது வரம்பு, வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள்:
தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள, தமிழ்நாட்டில் வசிக்கும்   ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் கண்டிப்பாக இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்துள்ளவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சொந்தமாக சிறுவணிகம் செய்பவர்கள், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புரியும் மகளிர். வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
முன்னுரிமை பெறத் தகுதியுள்ள பெண்கள்
ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை.
மனுக்கள் பெறும் தேதி  22.01.2018 முதல்  05.02 2018 வரை
தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில்  http://www.tamilnadumahalir.org/tnatws.html  என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் 22.01.2018 திங்கள்கிழமை முதல் 05.02.2018 திங்கள் கிழமை வரை நேரிலோ அல்லது பதிவுத்தபால் மற்றும் விரைவுத்தபால் மூலம் சமர்ப்பிக்கலாம்.
பயனாளிகளுக்கு கடன் வசதி
பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125சி.சி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்..
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவண நகல்கள்
💬  பிறந்த தேதிக்கான சான்றிதழ் 
💬  இருப்பிடச் சான்றிதழ்
💬 வாக்காளர் அடையாள அட்டை
💬  உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.
💬 வேலை வழங்கும் அலுவலரால் அல்லது நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.
💬  நிறுவனத்தலைவர் அல்லது சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.
💬 ஆதார் அடையாள அட்டை.
💬 எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.
💬  பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
💬 சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.
💬 சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு மட்டும் )
💬  மாற்றுதிறனாளி என்றால் உரிய அலுவலரால் வழங்கப்பட்ட  அடையாள அட்டை
💬 வாங்கப்போகின்றஇருசக்கர வாகனத்தின் ஒப்பந்த விலைப்புள்ளி
💬 5 ஆண்டுகளுக்கு இந்த வாகனங்களை யாருக்கும் விற்கவோ, வோறொருவருக்கு மாற்றவோ முடியாது. 
குறிப்பு : இத்திட்டத்தில், பணிபுரியும் பெண்கள் பயன்பெற, பழகுநர் உரிமம் (LLR) வைத்திருந்தாலே போதும் என்று விதிமுறையைத் திருத்தி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.01.2018 

No comments:

Post a Comment