disalbe Right click

Friday, January 5, 2018

பாலிடெக்னிக் தேர்வில், தேர்ச்சி பெறாத பழைய மாணவர்கள்


 மீண்டும் எழுத கல்வித்துறையால் சிறப்பு அனுமதி 
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டயத்தேர்வு
தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பாக, வருகின்ற 2018 ஏப்ரல் மற்றும் அக்டோபர்  மாதத்தில்,      பாலிடெக்னிக் மாணவர்களுக்கான, பட்டயத் தேர்வு நடைபெற உள்ளது.
கருணை அடிப்படையில் அனுமதி
இந்தத் தேர்வின்போது, ’.ஆர்., - என்.ஆர்., - ஆர்.ஆர்., - ஆர்.எஸ்., - சி, டி, ஜி, ஜெ., மற்றும் கேஆகிய பாடத்திட்டங்களில் நிலுவை வைத்துள்ள, முன்னாள் மாணவர்கள், சிறப்பு கருணை அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கு, தொழில்நுட்பக் கல்வித்துறையால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்?
2011-ம் ஆண்டுக்கு முன், மூன்று ஆண்டுகள் முழு நேர படிப்பிலும், 2010-ம் ஆண்டுக்குப் பின், நான்காண்டு பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?
தேர்வு எழுத விரும்புகின்ற மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், 500 ரூபாய் தேர்வுக் கட்டணமாகவும், 30 ரூபாய் மதிப்பெண் கட்டணமாகவும், 25 ரூபாய் பதிவுக் கட்டணமாகவும், தாங்கள் ஏற்கனவே படித்த பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வரிடம் செலுத்தி,தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தட்கல் முறை
அபராதம் ஏதுமின்றி கட்டணம் செலுத்த, 07.02.2018 கடைசி நாள் ஆகும். 5௦௦ ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த, 14.02.2018 கடைசி நாள் ஆகும். தட்கல் முறையில், 500 ரூபாய் அபராதத்துடன், கட்டணம் செலுத்த 09.03.2018 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.01.2018 

No comments:

Post a Comment