disalbe Right click

Monday, June 25, 2018

பத்திரப்பதிவு - அசல் ஆவணம் தேவையில்லை - எப்போது?

பத்திரப்பதிவு - அசல் ஆவணம் தேவையில்லை - எப்போது?
பத்திரப் பதிவில் செய்யப்படுகின்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் கடந்த 07.06.2018 அன்று பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில் பத்திரப்பதிவு செய்யும் போது அந்த சொத்துக்குரிய முன்பதிவு அசல் ஆவணங்களை பதிவு அலுவலரிடம் கண்டிப்பாக சொத்தின் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும், அதனை பதிவாளர்கள் ஸ்கேன் செய்து பரிசீலிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தார். 
இது 11.06.2018ல் இருந்து அமுல்படுத்தப்பட்டது.
பொது மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் அறிவிப்பினால் பொதுமக்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க மீண்டும் ஒரு கடிதத்தை பத்திர பதிவு அலுவலகங்களுக்கு கடந்த 13.06.2018 அன்று  பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பொதுமக்களுக்கு இருந்த சிக்கல்கள் இதனால் தீர்க்கப்பட்டுள்ளது.
அந்தக் கடித நகல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.06.2018 

No comments:

Post a Comment