disalbe Right click

Sunday, April 7, 2019

காவல்துறையினரின் கட்டண சேவை!

காவல்துறையினரின் கட்டண சேவை!
ஒருவர் எப்படிப்பட்டவர்? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதிகார பூர்வமான முன் நடத்தை பற்றிய தகவல்களை  இணையம் வழியாக காவல்துறை அளிக்கிறது.
இதற்காக பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல்துறையின் இணையதளமான.
WWW.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பின்வரும் சேவைகளுக்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன சேவைகள்?
தனிநபர் குறித்த விவரங்கள், வேலையாட்கள் குறித்த விவரங்கள்,   வாடகைதாரர்   குறித்த  விவரங்கள் வீட்டு வேலையாள்கள் குறித்த விவரங்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்த விண்ணப்பிக்கும் தனிநபர் ரூ. 500, தனியார் நிறுவனங்கள் ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு டெபிட் கார்டு, இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் இக்கட்டணத்தை செலுத்தலாம்.
இந்த சேவையின் நோக்கம் என்ன?
காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் நோக்கம் முக்கியம்மாக என்னவென்றால், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி, காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்த நபர் இதற்குமுன் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடித்து, அது குறித்த தகவல்கள் வழங்கப்படும்..
இந்த சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த அறிக்கையின் நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்
விண்ணப்பத்தின் நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்
காவல் சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள QR Code ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள "சரிபார்ப்பு' (Verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பத்தின் நிலை  (Status) குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
இச்சேவை தொடர்பாக எழுகின்ற கேள்விகள், அதற்கான விளக்கங்கள் தமிழ், ஆங்கிலத்தில்  மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து மற்றும் புகார் அளிக்கவும் முடியும்
இச்சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது இச்சேவை பற்றிய தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருந்தாலோ அதுபற்றி இணையதளம் வழியாக காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியில்   அளிக்கலாம்.
மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர ஆணையர் மற்றும் சென்னை மாநகர DC-II, IS ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.
முக்கிய அறிவிப்பு
இச்சேவையைப் பெற விரும்புபவர்கள் அளிக்கப்படும் விண்ணப்பத்திலுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைகள் இருந்தால், அந்த  விண்ணப்பம் நிராகரிக்கப்படும்  அந்த சேவைக்காக  செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. இந்த சேவையில் காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
************************************** செல்வம் பழனிச்சாமி - 07.04.2019 

No comments:

Post a Comment