disalbe Right click

Showing posts with label நுழைவுத்தேர்வு. Show all posts
Showing posts with label நுழைவுத்தேர்வு. Show all posts

Thursday, January 26, 2017

நீட் நுழைவுத்தேர்வு

Image may contain: 2 people, people sitting and text

நீட் நுழைவுத்தேர்வு

மருத்துவம் படிக்க ஆர்வமா? ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகுங்கள்!

இதோ… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். அடுத்து என்ன படிக்கலாம் என அவர்களோடு சேர்ந்து பெற்றோரும் யோசிக்கும் நேரம் இது. 
பெரும்பாலானோரின் கனவு மருத்துவக் கல்விதான். ஆனால், அதிக மதிப்பெண் மட்டுமே போதாது என்கிற நிலை இன்று உருவாகியுள்ளது.  சி.பி.எஸ்.சி நடத்துகிற `நீட்’ தேர்வு (National Eligibility cum Entrance Test) எழுத வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால்தான் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியும்.

`இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்வ தற்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்கிற கோரிக்கையின் அடிப்படையில், இத்தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய 
அரசு கடந்த ஆண்டு இதைச் சட்டமாக்கியது. தமிழக அரசின் கோரிக் கையை ஏற்றுக் கடந்த ஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மீண்டும் தமிழக அரசு மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி, `நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க கேட்டுவருகிறது. ஆனால், கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் கறாராக `நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கு மாணவர் களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டது. ஆகவே, இந்த ஆண்டு `நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் சேர முடியும் என்பதையும், `நீட்’ தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கவுன்சலிங்கில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

இதற்கேற்ப, `நீட்’ தேர்வு தமிழ்மொழி யிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசின் சுகாதாரத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளில் `நீட்’ தேர்வுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்று  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொல்லி இருக்கிறார்.

நீண்ட காலமாக `நீட்’ தேர்வு குறித்து தமிழ கத்தில் குரல் கொடுத்துவரும் மருத்துவரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதுபற்றிப் பேசினோம். “தமிழ்நாட்டில் ஏற்கெனவே மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதே அடிப்படை யில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம். 

ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி வந்தது. இதைத்தவிர, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் கீழ் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் என ஒவ்வொன்றும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கை நடத்தின. இதன் மூலம் மாணவர் கள் பல நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவ தும், மன அழுத்தத்துக்கு உள்ளாவதுமாக இருந்தார்கள். அதோடு, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், அவர்களுக்கு உகந்த வகையில் கட்டணம் நிர்ணயித்து இருந்தார்கள்.

இதனை எல்லாம் கருத்தில்கொண்டே பல நுழைவுத்தேர்வுகளுக்கு மாற்றாக மத்திய அரசு நடத்தும் ஒரே நுழைவுத்தேர்வே சரி யானது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருக்கிறது. `நுழைவுத்தேர்வே நடத்தக்கூடாது’ என்று மீண்டும் கோரிக்கை வைத்தால், அது பின்னோக்கிச் செல்வதா கவே அமையும்.

தமிழக மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பிடிக்க இந்த நுழைவுத் தேர்வு சரியான வழிதான். தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சேர முடியும். புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம், ராணுவ மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் என 24 ஆயிரத்துக்கும் அதிக இடங்களில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் `நீட்’ தேர்வு எழுதி இருக் கிறார்கள். இதில் நான்கு லட்சம் பேர் கட் ஆஃப் மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள்.

தமிழ்வழி கற்கும் மாணவர்கள் தமிழில் `நீட்’ தேர்வு எழுதுவதன் மூலம் எளிதில் அதை எதிர்கொள்ள முடியும். என்றாலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பழைய பாடத்திட்டத்தையே படித்து வருகிறார்கள் இதனை நிச்சயம் மாற்ற வேண்டும். `நீட்’ தேர்வில் மத்திய அரசு பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.சி) இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதால், அதற்கு இணையான பாடத்திட்டம் தமிழ்நாட்டிலும் வேண்டும்.

`நீட்’ தேர்வால், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்களும் பின்னடைவும் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்” என்று நம்பிக்கை அளிக்கிறார் ரவீந்திரநாத்.

நீட் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகி, மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறக்கூடும். பொதுத்தேர்வுக்குப் பின்னர், இரண்டு மாத கால அவகாசமே உள்ள சூழலில் `நீட்’ தேர்வுக்கு தயாராவது  எப்படி?

மொத்தம் 180 கேள்விகள். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 45 கேள்விகள் இடம்பெறும். சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள். தவறு எனில் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். அதனால் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வது அவசியம்.

ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட நூல்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். ப்ளஸ் ஒன் பாடப்புத்தகத்தில் இருந்து 50% கேள்விகளும், ப்ளஸ் டூ பாடங்களில் இருந்து 50% கேள்விகளும் கேட்கப்படுகின்றன. என்.சி.இ.ஆர்.டி (NCERT) வெளியிட்டுள்ள ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ புத்தகங்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

கடந்த ஆண்டு கேள்வித்தாள் மற்றும் விடைகள் உள்பட இணையத்தில் `நீட்’ தேர்வுக் கான மாதிரி கேள்வித்தாள்கள் நிறையவே  இருக்கின்றன. இவற்றை டவுன்லோடு செய்து மாதிரித்தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதன் மூலம் எந்தெந்தப் பிரிவுகளில் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை அறிந்து, கூடுதல் கவனம் செலுத்த முடியும். கேள்விகளை சற்று நீளமானதாகவும், கணக்கீட்டே பதிலை தேர்ந்தெடுக்கும் வகையிலும் அமைத் திருக்கிறார்கள். பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மாதிரித்தேர்வு நடத்துகின்றன. அதில் கலந்துகொண்டு நீங்கள் எந்த அளவுக்குத் தயாராகி இருக்கிறீர்கள் என்பதையும் சோதித்துக்கொள்ளலாம்.

  படிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்புகளை தேர்வுக்குச் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு திரும்பப் பார்க்கும்போது நிச்சயம் உதவும்; நேரமும் மிச்சமாகும்.

`நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் குறிப்பிடவேண்டி இருக்கும். அதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே விண்ணப்பித்துப் பெறுவது அவசியம்!

அகில இந்திய மருத்துவக் கல்லூரியில் இரண்டாயிரம் ரூபாய் கட்டணம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம். சுயநிதி கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் மட்டுமே. ஆனால், பல்வேறு கட்டணங்கள் வழியாக ரூபாய் பத்து லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரை கல்விக் கட்டணம் பெறப்படுகிறது.

நன்றி : அவள் விகடன் - 24.01.2017
*****************************************************************
’நீட்’ தேர்வை 3 முறை எழுதலாம்!

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான ’நீட்’ தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூ.ஜி.சி., தெரிவித்துள்ளது.
டில்லியில் நேற்று நடந்த யூ.ஜி.சி., ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். 

பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் ’நீட்’ தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். 

யூ.ஜி.சி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.01.2017

Friday, January 20, 2017

பொறியியல் கல்லூரி - நுழைவுத்தேர்வுகள்!


பொறியியல் கல்லூரி - நுழைவுத்தேர்வுகள்!

தேசிய அளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பது பலரும் அறிந்ததே! முன்னணி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பிரத்யேகமாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குகின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்த விபரம் இதோ...

Birla Institute of Technology and Science Admission Test (B.I.T,S.A.T) 

பிலானி, துபாய், கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) கல்வி நிறுவனத்தில், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் கொண்ட மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

தகுதிகள்: 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற ஒவ்வொரு பாடங்களிலும் தலா 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.

தேர்வு முறை: 

அப்ஜெக்டிவ் அடிப்படையில் ஆன்லைன் தேர்வு. இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதிகளில் 80 கேள்விகள், காம்பிரிஹென்சன் (ஆங்கில மொழித் திறன் 15- கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங்- 10 கேள்விகள்) மற்றும் கணிதத்தில் 45 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6

விபரங்களுக்கு: www.bitsadmission.com

V.I.T. Engineering College Entrance Exam (V.I.T.C.E.E)

சென்னை, வேலூர், போபால் மற்றும் அமராவதி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத்தேர்வு.

தகுதிகள்

பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.

தேர்வு முறை: 

மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் 40 கேள்விகள் வீதம் மொத்தம் 125 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28

விபரங்களுக்கு: www.vit.ac.in

S.R.M. Joint entrance examination (S.R.M.J.E.E)

இந்த தேர்வு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்

இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று பிளஸ் 2வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: 

அப்ஜெக்டிவ் அடிப்படையில், ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 315 மதிப்பெண்களுக்கு 155 கேள்விகள், மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 2017

விபரங்களுக்கு: www.srmuniv.ac.in

Manipal university online entrance test (M.U.O.E.T)

மனிப்பால் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மனிப்பால் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வே எம்.யூ.ஒ.இ.டி.,!

தகுதிகள்:

12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு திட்டம்: 

இயற்பியல் - 50 கேள்விகள், வேதியியல் - 50 கேள்விகள், கணிதம் - 70 கேள்விகள் மற்றும் ஆங்கில மொழி திறனாய்வு- 30 கேள்விகள் கேட்கப்படும். 

தேர்வு காலம் 2.30 மணி நேரம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 11

விபரங்களுக்கு: http://manipal.edu/

Amirta engineering entrance exam (A.E.E.E)

கொல்லம், பெங்களூரு மற்றும் கோவையில் உள்ள அமிர்தா விஷ்வா வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் கொண்ட பி.டெக்.., பட்டப்படிப்பிற்கான இடங்கள், ஏ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

தகுதிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 55 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

 கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.amrita.edu

sathyabama university

சென்னையில் உள்ள இப்பல்கலைக்கழகம் நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வின் மூலம், இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்., பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்:

 பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.sathyabamauniversity.ac.in

நன்றி : தினமலர் (கல்விமலர்) -20.01.2017

Monday, January 2, 2017

ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்


ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்  

ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதலாக இரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்பில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, ஏப்ரலில், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு, டிச., 3ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்றுடன் பதிவு முடிவதாக இருந்தது. 

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க, கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, ஜே.இ.இ., தேர்வு, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஜன., 16 வரை, இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை, ஜன., 17 வரை செலுத்தலாம்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 03.01.2017

Friday, December 30, 2016

மேட் நுழைவுத் தேர்வு - 2017


மேட் நுழைவுத் தேர்வு - 2017


நாட்டின் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், உங்களுக்கு படிக்க விருப்பமா? உங்களது பதில் ‘ஆம்’ எனில், ‘மேட்’ எனும் மேலாண்மை நுழைவுத் தேர்வை எழுதலாம்!

அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு, மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட்). இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.

அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பாக ஆண்டுக்கு நான்கு முறை- பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும், இந்த நுழைவுத் தேர்வை, லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.

மாணவர்கள் ஒரு முறை இந்த தேர்வு எழுதிப் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, ஒரு ஆண்டு வரை பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு, இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு விவரம் 

தேசிய அளவில் நடைபெறும் இத்தேர்வினை, மாணவர்கள்  தாள் அடிப்படையிலும் (பேப்பர் பேஸ்ட் டெஸ்ட்) அல்லது கணினி அடிப்படையிலும் (கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட்) தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து, எழுதலாம்.

லாங்க்வேஜ் காம்பிரிஹென்சன், மேத்மேட்டிக்கல் ஸ்கில், டேட்டா அனலைசஸ் அன்ட் டேட்டா சவ்பீஸியன்சி, இன்டலிஜென்ஸ் அண்ட் கிரிட்டிக்கல் ரீசனிங், இந்தியன் அன்ட் குளோபல் என்விராண்மெண்ட் ஆகிய ஐந்து பிரிவுகளில், ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 40  கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

நுழைவுத் தேர்வு நாள்

காகித அடிப்படையிலான எழுத்துத்தேர்வு - பிப்ரவரி 5

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு- பிப்ரவரி 11

விண்ணப்பிக்கும் முறை: 

www.apps.aima.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: ஜனவரி 27, 2017

மேலும் விவரங்களுக்கு: www.apps.aima.in

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.12.2016