disalbe Right click

Showing posts with label பராமரிப்பு. Show all posts
Showing posts with label பராமரிப்பு. Show all posts

Sunday, March 5, 2017

இன்வர்ட்டரைப் பாதுகாப்பது எப்படி?


இன்வர்ட்டரைப் பாதுகாப்பது எப்படி?

இருபது நாட்கள் குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது நண்பருக்கு. ஃபிரிட்ஜில் பல பொருள்கள் இருந்தன. மின் இணைப்பைத் துண்டித்து விட்டால் அவை கெட்டுப்போய் விடும். எனவே அவர் வீட்டுக்கான மின் இணைப்பை ஆஃப் செய்யாமல் கிளம்பினார்.

20 நாட்களுக்குப் பிறகு வந்தபோது வீட்டில் எந்த வித்தியாசத்தையும் அவர் உணரவில்லை. இரு நாட்களுக்குப் பிறகு வீட்டில் மின்வெட்டு. அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

மின்வெட்டு நேர்ந்ததற்காக அந்த அதிர்ச்சி அல்ல. வீட்டில் அவர் இன்வர்ட்டர் ஒன்றை நிறுவியிருந்தார். மின்வெட்டு ஏற்பட்டாலும் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்காவது வீட்டின் சில விளக்குகளும், மின்விசிறிகளும் இயங்கும். அவைகள் அந்த இன்வர்ட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன. 

(இன்வெர்ட்டர் இயங்கவில்லை)

மாலை வேலையில் மின்வெட்டு. அந்த மின்வெட்டு மூன்று மணி நேரத்துக்குத் தொடர்ந்தது. தவிர உடனடியாக அனுப்ப வேண்டிய சில மின்னஞ்சல்களையும் அவரால் அனுப்ப முடியவில்லை. தவித்து விட்டார். 

அடுத்த நாள் இன்வர்ட்டர் குறைபாட்டைச் சரி செய்ய டெக்னீஷியன் ஒருவரை அழைத்து வந்தார். விவரத்தைக் கூறியவுடன் அவர் சில ஆலோசணைகள் கூறினார்.

அவர் கூறிய முக்கிய ஆலோசனைகள் எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

“அதிக நாட்கள் வீட்டை பூட்டிக் கொண்டு செல்கிறீர்கள் என்றால் மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றாலும் இன்வர்ட்டரின் முன்புறம் காணப்படும் வட்ட வடிவ சுவிட்சை ஆஃப் செய்து விடுங்கள். இல்லையென்றால் பாட்டரி மிகவும் பலவீனமடைந்துவிடும்”

இன்வர்ட்டர் பராமரிப்பு தொடர்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய வேறு சில தகவல்கள்:

சிலர் ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, ஏ.சி. போன்றவற்றை எல்லாம் இன்வர்ட்டர் இணைப்பில் வைத்திருக்கிறார்கள். இது விரும்பத்தக்கதல்ல. அதிகமான லோடு என்றால் மின்சுற்று பாதிக்கப்படும். எனவே மின் விளக்குகள், மின் விசிறிகளுடன் மட்டுமே இன்வர்ட்டரை இணையுங்கள்.

இன்வர்ட்டர் பாட்டரியில் போதிய நீர் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதற்காகக் கிட்டத்தட்ட காலியாகும் நிலையில்தான் நிரப்ப வேண்டும் என்பதல்ல. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பார்த்து எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு நீரை நிரப்புங்கள். 

இங்கே நீர் என்பது குழாய் தண்ணீர் அல்ல. வடிகட்டிய நீர். Distilled water எனப்படும் இது பெட்ரோல் பங்குகளிலும் கிடைக்கிறது.

இந்த நீர் எப்போது ‘பேக்’ செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்தத் தேதிக்கு சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு அது தன் தனித்தன்மையை இழந்துவிட வாய்ப்பு உண்டு. 

எனவே, பல டிஸ்டில்ட் வாட்டர் பாட்டில்களை வாங்கி வீட்டில் சேமிக்க வேண்டாம் 

(ஒரு முக்கியக் குறிப்பு: வடிகட்டிய நீர்தானே’ என்று நினைத்து இதைக் குடித்துவிடாதீர்கள். இது வேறு வகையானது).

இன்வர்ட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகள் (இவற்றை டெர்மினல்கள் என்பார்கள்) டைட்டாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த இணைப்புகள் லூசாக இருப்பதன் காரணமாக இன்வர்ட்டர் இயக்கத்தில் பிரச்சினைகள் தோன்றலாம்.

கொடுத்து வைத்த சில பகுதிகளில் மாதக் கணக்கில் மின்வெட்டே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் 40 நாட்களுக்கு ஒரு முறை மின் இணைப்பை ஐந்து நிமிடமாவது ஆஃப் செய்துவிட்டு இன்வர்ட்டரை ஓடவிடுங்கள்.

பேட்டரியில் தண்ணீர் குறையும்போது நீங்கள் அதில் தண்ணீர் விடுங்கள். அப்படி விட்ட பிறகு இன்வர்ட்டரை ஆஃப் செய்துவிட்டு பிறகு ஆன் செய்யுங்கள். 

இல்லையென்றால் பேட்டரியின் திறமை குறையும்.
பேட்டரியை வருடத்திற்கு ஒருமுறை அதற்கான சேவை மையத்தில் கொடுத்து கந்தக அமிகத்தை (Sulfuric acid) மாற்றிக் கொள்ளுங்கள். 

இல்லையென்றால் மின்வெட்டின்போது தொடக்கத்தில் எட்டு மணி நேரத்துக்கு மின் சக்தியை அளிக்கும் இன்வர்ட்டர்கள் ஏழு, ஆறு, ஐந்து என்று குறையத் தொடங்கும்.

ஜி.எஸ்.எஸ்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 04.03.2017

Thursday, April 28, 2016

பைக் பராமரிப்பு


பைக் பராமரிப்பு - என்ன செய்ய வேண்டும்?

கொஞ்சம் அக்கறை.. கொஞ்சம் தெளிவு!

பைக் பராமரிப்பு
ந்த பைக் வாங்கியவர்களாக இருந்தாலும், கணிசமானவர்களுக்கு பைக் மீதான அக்கறை, அதிகபட்சம் ஃப்ரீ சர்வீஸ் முடியும் வரைதான் நீடிக்கும். அப்படி இருந்தால், பைக் அதிக செலவு வைக்கும் என்பதே உண்மை. 
'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மெக்கானிக் சொல்கிற அத்தனை ஸ்பேர் பார்ட்ஸையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக் கொடுத்துவிடலாமா? இல்லை. அப்படிச் செய்வதற்குப் பெயர் பராமரிப்பு இல்லை. அப்படி என்றால் பைக்கைப் பராமரிப்பதுதான் எப்படி?
''கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பைக் பற்றிய அறிவு - இவை இருந்தால் போதும். நம் பைக் வாழ்வாங்கு வாழும்'' என்கிறார், மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் பைக் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் ரமேஷ். ''பைக் பராமரிப்பில் இரண்டு வகை. ஒன்று, நாமே செய்கிற தினசரிப் பராமரிப்பு. அடுத்தது, ரெகுலர் மெக்கானிக் சர்வீஸ். இதில், தினசரிப் பராமரிப்பை ஒழுங்காகச் செய்துவந்தாலே, சர்வீஸ் செலவு மிகவும் குறைவாக இருக்கும்'' என்கிறார் ரமேஷ். தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே சொன்னார்.
பைக் ஸ்டார்ட் செய்வது எப்படி?
இரவு நிறுத்திய பைக்கை காலையில் ஸ்டார்ட் செய்யும்போது, கிக்கரை சில முறை மிதித்து பம்ப் செய்த பிறகு ஸ்டார்ட் செய்வதுதான் இன்ஜினுக்கு நல்லது. அப்படி ஸ்டார்ட் செய்யும்போது ஆக்ஸிலரேட்டரை முறுக்காமல் ஐடிலிங்கில் சிறிது நேரம் இயங்கிய பிறகு ஆக்ஸிலரேட்டரை உயர்த்தலாம். காரணம், இரவு நிறுத்திய பைக்கின் இன்ஜினின் மேல் பகுதியில் தேங்கி இருந்த ஆயில் வடிந்து கீழே தேங்கி இருக்கும். ஆயில் இல்லாமல் உலர்ந்துபோன இன்ஜினை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், ஆயில் சரிவரப் பரவாமல் இன்ஜின் தேய்மானம் ஆகும். அதனால், முதலில் பைக்கை ஆன் செய்யாமலேயே மூன்று நான்கு தடவை கிக்கரை மிதித்து ஆயில் பம்ப் செய்துவிட்டு, பிறகு ஆன் செய்து கிக்கர் மூலம் ஸ்டார்ட் செய்வது நல்லது. அதேபோல், செல்ஃப் ஸ்டார்ட் இருக்கும் பைக்காக இருந்தாலும், காலையில் மட்டும் கிக்கரைப் பயன்படுத்துவது பேட்டரியின் ஆயுளுக்கு நல்லது.
பிரேக்
பிரேக் பிடிப்பது ஒரு கலை. அதை பெரும்பாலும் தவறாகவே உபயோகிக்கிறோம். எப்போதும் முன் - பின் இரண்டு பிரேக்குகளையும் ஒன்றாக அப்ளை செய்வதுதான் சிறந்த முறை. அதேபோல், அவசரமாக பிரேக் செய்யும்போது கிளட்ச் பிடிப்பதை அறவே தவிருங்கள். ஏனெனில், இன்ஜின் பிரேக் - பைக்கை நிறுத்த பெருமளவு உதவி செய்கிறது. மேலும், பைக்கின் ஸ்டெபிளிட்டியைக் காக்கிறது. வேகத்தடையைப் பார்த்தவுடன் நம் கையும் காலும் தானாக பிரேக்கைத் தேட வேண்டும். பைக்கின் வேகம் குறைத்த பின்பே, வேகத் தடை மீது ஏற வேண்டும். இதன் மூலம் ஃபோர்க் சேதமாவதைத் தவிர்க்கலாம்.
டிரம் பிரேக் கொண்ட பைக்கில், முன் - பின் இருக்கும் பிரேக் ஷூ ஒரே மாதிரியாகத் தேய்ந்திருக்க வேண்டும். பிரேக் செய்யும்போது, முன் பக்க பிரேக் அதிகமாகவும், பின் பக்க பிரேக் குறைவாகவும் பிடித்தால், பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுவோம். டிஸ்க் பிரேக் கொண்ட பைக் என்றால், ஆயில் அளவு சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். டிஸ்க் பிரேக்கில் ஏதாவது பிரச்னை என்றால், அதில் நாம் கை வைக்கக் கூடாது. மெக்கானிக்கிடம்தான் கொண்டுசெல்ல வேண்டும்.
பெட்ரோல்
'ரிசர்வ்’ என்ற ஆப்ஷன் உங்கள் பைக்கில் இருப்பதையே மறந்துவிடுவது உத்தமம். காரணம், பெட்ரோல் 'ஆன்’ செய்த நிலையில் பைக் ஓட்டுவதற்கும், ரிசர்வ் நிலையில் ஓட்டுவதற்கும் மைலேஜ் வேறுபாடு இருக்கும். அதனால், எப்போதும், 'ஆன்’ பொசிஷனிலேயே பைக்கை ஓட்டும் வகையில் டேங்க்கில் பெட்ரோல் இருப்பது நல்லது.
டயர்
பெரும்பாலும் இன்று பைக்குகளில் ட்யூப்லெஸ் டயர்கள்தான். நார்மல் டயர் வழியில் பஞ்சரானால், வால் ட்யூபைப் பிடுங்கிவிட்டு பஞ்சர் கடை வரை உருட்டிப் போவோம். ட்யூப்லெஸ் டயரில் ஒரே ஒரு பிளஸ் பாயின்ட்... பஞ்சர் கடை வரை வேண்டுமானால், கவனமாக பைக்கை ஓட்டிக்கொண்டு செல்லலாம். அவ்வளவே! சிலர் ட்யூப்லெஸ் டயர் பஞ்சரானதே தெரியாமல், 'வண்டியில ஏர் கம்மியா இருக்குடா... காலையில நைட்ரஜன் ஃபில் பண்ணாப் போதும்'' என அசால்ட்டாக இருகின்றனர்.
ஒருவேளை, மறுநாள் காலைக்குள் குண்டும் குழியுமான ரோட்டில் பயணம் போனால், புது டயர் வாங்க நேரலாம். காலமறிந்து செய்யப்படும் சிறு செயலும் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தும். இது தவிர, இன்ஜின் ஸ்பார்க் பிளக் சுத்தம் செய்வது, காற்றழுத்தத்தைக் கண்காணிப்பது போன்ற அடிப்படை வேலைகளைத் தெரிந்துவைத்திருப்பதும் நல்லது.
செயின் ஸ்பிராக்கெட் ஒரு முக்கியமான பாகம். இது, அதிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது: தளர்வாகவும் இருக்கக் கூடாது. எப்போதும் சரியான இறுக்கத்தில் இருக்க வேண்டும். செயின் தளர்ந்தால், சத்தம் வரும். லேசாகத்தானே சத்தம் வருகிறது. சர்வீஸ் செய்யும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டால், செயின் ஸ்பிராக்கெட் செட்டையே மாற்ற வேண்டி வரலாம். இதை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், பிக்-அப், மைலேஜ் இரண்டும் குறையும்
இது எல்லாவற்றையும்விட, முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் உங்கள் பைக்கோடு கொடுக்கப்பட்ட மேனுவலை (manual) வாசிப்பது. அது உங்கள் பைக் பற்றிய புரிதலைக் கொடுக்கும்.
 மோ.அருண்ரூப பிரசாந்த்
நன்றி : மோட்டார் விகடன் - 01.05.2016

Tuesday, April 5, 2016

வாஷிங் மெஷின் பராமரிப்பு


வாஷிங் மெஷின் பராமரிப்பு - என்ன செய்ய வேண்டும்?

விதம் விதமா இருக்குதுங்க... வாஷிங் மெஷின்!
வாஷிங் மெஷினில் மார்க்கெட்டில் உள்ள வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி விரிவாகச் சொல்கிறார், ‘வசந்த் அண்ட் கோநிறுவனத்தின் சென்னைக் கிளை மேனேஜர் கார்த்திகேயன்.
‘‘வீட்டின் பவர் சப்ளை, தண்ணீர் வசதி, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற கூறுகளின் அடிப்படையில், அதற்கேற்ற வாஷிங் மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 6.5 கிலோ கொள்ளளவு வரையிலான வாஷிங் மெஷின் ஓ.கே! வாஷிங் மெஷினில் செமி ஆட்டோமேட்டிக், ரெகுலர் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்று மூன்று வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்
செமி ஆட்டோமேட்டிக்

துவைக்கும் வாஷர் மெஷின் மட்டுமே இருக்கும்.
டிரையர் ஆப்ஷன் இல்லை என்பதால் இதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
ரெகுலர் செமி ஆட்டோமேட்டிக்

பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தும், வாஷர், டிரையர் இரண்டும் இருக்கும் மாடல் இது.
வாஷரில் துவைத்து முடித்ததும், நாம்தான் டிரையருக்கு மாற்ற வேண்டும்.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக்

தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதில் இருந்து, டப் நிரம்பியதும் தண்ணீரை நிறுத்திக்கொள்வது, துவைப்பது, தண்ணீரை வெளியேற்றுவது, டிரையரில் பிழிவது என்று அனைத்தையும் தானே செய்யும். ஒருமுறை துணியை லோடு செய்து ஆன் செய்த பின், அருகில் ஆள் இருக்க வேண்டிய அவசியமில்லை. துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து முடித்ததும் ஒலி எழுப்பும். பின் துணிகளை எடுத்துக் கொடியில் உலர்த்தினால் போதும்.
டாப் லோடு, ஃப்ரன்ட் லோடு என்று இதில் இரண்டு வகைகள் உள்ளன.
பொதுவாக, 460 வாட்ஸ் மெஷின் மோட்டார் கொண்ட டாப்லோடிங்தான் வசதியாக இருக்கும். காரணம், இதில் குறிப்பிட்ட அளவு பிரஷர் இருக்க வேண்டும், குறிப்பிட்ட வாட்ஸ் கரன்ட் சப்ளை இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. 5 ஆம்ப்ஸ் மின்சாரம் கிடைத்தால் போதும். மேலும் இதில் இன்பில்ட் ஹீட்டர் இருக்காது என்பதால், அதிகமாக பவர் கன்ஸ்யூம் செய்யாது.
ஆனால், ஃப்ரன்ட் லோடிங்கில் 2,000 வாட்ஸ் வரை ஹீட்டர், மெஷினின் மோட்டார் 460 வாட்ஸ் வரை இருந்தாலும், மேற்சொன்ன பிரஷர், கரன்ட் சப்ளை நிபந்தனைகள் உண்டு. டாப் லோடிங் மெஷினைவிட இது சற்று விரைவாகத் துவைத்துவிடும் என்பது ப்ளஸ்.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக்... பல வெர்ஷன்கள்!

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மாடலில் பல வெர்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.
சமீபத்தில் வந்த மாடலில் 100% டிரையர் கான்சப்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். முந்தைய மாடல் டிரையரில் துணிகள் 70% காய்ந்திருக்கும். பிறகு, நாம் கொடியில் உலர்த்த வேண்டும். இந்த, 100% டிரையரில் முழுவதும் காய்ந்துவிடும். இதில் வாஷிங் கொள்ளளவு 6 கிலோ என்றால், டிரையர் கொள்ளளவு 3 கிலோ வரை இருக்கும்.
அடுத்தது, டைரக்ட் டிரைவ் மாடல். 

பொதுவாக வாஷிங் மெஷினில் பெல்ட்டுடன் இருக்கக்கூடிய ரெகுலர் மோட்டார்தான் இருக்கும். இதில் பெல்ட் லூஸாவது, அதனால் சத்தம் வருவது, அதிர்வது, பெல்ட் அறுந்துவிடுவது போன்ற கம்ப்ளெயின்ட்கள் இருக்கும். ஆனால், டைரக்ட் டிரைவ் மாடலில் பெல்ட் டைப் மோட்டாராக அல்லாமல் டைரக்ட் மோட்டாராக இருப்பதால், மோட்டாரின் ஆயுட்காலம் அதிகரிக்கும். அதேசமயம், இந்த மாடலில் அதிக மின்சாரம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்டிவ் வாஷ்என்ற ஆப்ஷன், அடுத்த புது வரவு. வழக்கமாக சட்டையின் காலர், பிள்ளைகளின் யூனிஃபார்ம் டிராயர், பேன்ட்டின் பின்புறம் போன்றவற்றை மெஷின் சலவை முழுமையாக சுத்தம் செய்யாது என்பதால், அந்தத் துணிகளைத் தனியாகத்தான் துவைக்க வேண்டும். ஆனால் ஆக்டிவ் வாஷ்மாடலில் மெஷினிலேயே ஒரு பிளேட் அட்டாச்மென்ட் இருக்கிறது. அதில் வைத்துத் துவைத்துக்கொள்ளலாம். சைடில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், பிளேட்டின் மீது தண்ணீர் விழும்.
ஜெட் ஸ்ப்ரேமாடல், தண்ணீர்ப் பற்றாக்குறைக்கான தீர்வாக இருக்கும். ஒரு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் ஃப்ரன்ட் லோடிங் மெஷினில், 153 லிட்டர் தண்ணீர் வரை செலவாகும். அதுவே ஜெட் ஸ்பிரேமாடல் ஸ்பிரே செய்துகொண்டே துவைப்பதால் இதில் பாதியளவு, அதாவது 70 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும்.
மொத்தத்தில், சலவை வேலையை சுலபமாக்கும் வாஷிங் மெஷினில் உள்ள மாடல்கள் இவைதான். வீட்டுச் சூழலைப் பொறுத்துத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்!’’ என்று சொன்னார் கார்த்திகேயன்.
--------------------------------------------ந.ஆஷிகா
மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
பைப்பில் தண்ணீர் தடைப்படாமல் வரும் என்ற சூழலில் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மாடல் மெஷின் வாங்கவும்.
துணிகளின் தன்மைக்கேற்ப துவைக்கும் வசதி தற்போது அனைத்து மெஷின்களிலும் உள்ளது. அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தினால் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.
பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்ஃபில்டர் (lintfilter) வசதி இருக்கும். இது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைக்கும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்யவும்.
மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர்என்ற வடிகட்டி இருக்கும். இது தூசு, அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, தண்ணீரை மெஷினுக்குள் அனுப்பும். குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரை சுத்தம் செய்யவும்.
சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் வாஷிங் மெஷினுக்குக் கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தக் கூடாது.
வாஷிங்மெஷினை அதிகம் வெயில் படக்கூடிய இடங்களில் வைக்கக் கூடாது.
எப்போதும் எர்த் கனெக்‌ஷனை செக் செய்துகொள்வதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வாஷிங் மெஷினை சர்வீஸ் செய்வது நல்லது.
நன்றி : அவள்விகடன்-15.12.2015


Thursday, February 4, 2016

பட்டாடைகளை பாதுகாக்க


பட்டாடைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?


ஒரிஜினல் பட்டு - எப்படிக் கண்டுபிடிப்பது?

தீபாவளிக்குப் பட்டுப் புடவை வேண்டும் என்பது, பெண்கள் பலரின் விருப்பம். இப்படி ஆண்டுக்கு ஒரு பட்டாக எடுத்து பீரோவில் அடுக்கினால் மட்டும் போதாது... பல ஆயிரங்கள் செலவழித்து வாங்கும் அதை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். பட்டு தொடர்பான நம் சந்தேகங்களுக்குப் பதில் தருகிறார், ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவக்குமார்...

``அப்படி என்னதான் ஸ்பெஷல் பட்டில்?’’

``ஒரிஜினல் நூல், பட்டுப்பூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படுவது. இதில், அழகூட்டுவதற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை (ஜரி) இழைத்துக் கைத்தறியில் நெய்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் அழகு குறையாமல் பளபளப்பாக இருக்கும். பட்டுக்குத் தீட்டில்லை, எல்லா சமயங்களிலும் கட்டலாம் என்பது நம்பிக்கை.’’

``ஒரிஜினல் பட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?’’

``ஆர்ட் சில்க், டெஸ்டட் சில்க் (Tested silk), பிளண்டட் சில்க் என பட்டில் ஏகப்பட்ட கலப்பட வகைகள் பெருகியுள்ள இந்தச் சூழலில், தூய்மையான பட்டைக் கண்டறிவது சிரமம்தான். பட்டில் அனுபவம் உள்ள பயனாளர்களுக்கும், பட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்குமே அது கை வரும். மற்றவர்கள் எப்படித்தான் கண்டறிவது என்றால், ஒரு வழி இருக்கிறது.

ஒரு நூலை மட்டும் தனியாக எடுத்து நெருப்பில் காட்டும்போது, தலை
முடியை நெருப்பில் காட்டினால் வருவதுபோன்ற ஒரு வாசனை வந்தால் அது ஒரிஜினல். மேலும் அந்த நூல் மிச்சமில்லாமல் எரிந்துபோகும். அதுவே அந்த நூல் எரியும்போது பிளாஸ்டிக் வாசனை வந்து நெகிழும் தன்மையுடன் இருந்தால் அது கலப்படம். அதிக விலையில் அல்லது அதிக எண்ணிக்கையில் பட்டுப்புடவை வாங்கும்போது, தேவைப்பட்டால் ‘லேப்’புக்கு அனுப்பியும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.’’

``ஒரிஜினல் பட்டு எந்த விலையில் இருந்து கிடைக்கும்?’’

``3,000 ரூபாயில் இருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது. சிறிது அல்லது பாதி மட்டும் ஒரிஜினல் பட்டு நூல் சேர்ப்பது போன்ற பட்டுகளும் மார்க்கெட்டில் உள்ளன. அதற்கு ஏற்ப விலை மாறுபடும்.’’

``பட்டுப்புடவை பாதுகாப்பு எப்படி?’’

``அணிந்த பின், அப்படியே மடித்து வைக்கக் கூடாது. அதில் படிந்திருக்கும் வியர்வை பட்டைப் பாழாக்கும். பிளவுஸ், புடவை இரண்டையும் நிழலில் நன்கு விரித்து உலரவிட வேண்டும். 

உலர்ந்த பின்னும் மடித்தோ, அயர்ன் செய்தோ வைக்கக் கூடாது. அடுத்த பயன்பாடு வரை அதிக நாட்கள் புடவை மடிப்பிலேயே இருப்பதால், அந்த மடிப்புகளில் எல்லாம் பட்டு நூல் சேதமடைந்துவிடும்.

புடவையின் அகலத்துக்கும் சற்று அதிக நீளமான `வுடன் ஸ்டிக்’கில் (திரைச்சீலைகளுக்குப் பயன்படுத்துவது போன்றது) முதலில் வெள்ளை காட்டன் துணியை ரோல் செய்து கொள்ளவும். பிறகு, பட்டுப்புடவையை அதில் ரோல் செய்யவும். முடித்த பின், மீண்டும் இரண்டு சுற்றுக்கு வெள்ளை காட்டன் துணியினை ரோல் செய்து முடிக்கவும். இந்த ரோலை அப்படியே அலமாரியில் வைத்துக்கொள்ளவும்.

இதனால் மடிப்புப் பிரச்னை தவிர்க்கப்பட்டு, புடவை பாதுகாக்கப்படும்.

பட்டுப்புடவைகளை எக்காரணம் கொண்டும் தண்ணீரில் அலசக்கூடாது.

தரமான டிரைவாஷ் கடைகளில் கொடுத்தே வாங்க வேண்டும்.

டிரைவாஷ் எனும்போது, சிலர் பள்ளு, பார்டர், உடல் பகுதிகளைத் தனித்தனியாக வாஷ் செய்யாமல் ஒன்றாக வாஷ் செய்யும்போது, உடல் பகுதியிலுள்ள நிறம் பார்டரிலோ, பார்டரின் நிறம் உடலிலோ கலந்துவிடலாம்.

சிலர் டிரைவாஷ் செய்யாமல் நன்றாக அயர்ன் மட்டும் செய்துவிட்டு டிரைவாஷ் செய்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள்... எச்சரிக்கை!

பட்டுப்புடவையில் கறை படிந்துவிட்டால்,

சோப்பு, ஷாம்பு, ஸ்டெயின் ரிமூவர் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தக் கூடாது. பூந்திக்கொட்டை பயன்படுத்தலாம். புடவையின் நூலுக்கோ நிறத்துக்கோ எந்தத் தீங்கும் நேராது.''

``பட்டுப்புடவைகளில் சாயம் போகுமா?’’

``நிச்சயமாக! துவைப்பது, அலசுவது போன்றவற்றால் நாளாக ஆக தானாக நிறம் மங்கும். பொதுவாக பட்டில் மிகவும் அடர்த்தியான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். லைட் பிங்க், லைட் கிரீன் போன்ற மெல்லிய நிறங்கள் ஓ.கே!’’

``பட்டு வேஷ்டிகளைப் பற்றி?’’

``பட்டு வேஷ்டிகளை துவைக்கும்போது முறுக்கிப் பிழியக்கூடாது. சோப்புத் தூளில் ஊறவைத்து பின்பு, கைகளால் அழுக்குப் பகுதிகளில் சுத்தம் செய்தபிறகு, அலசலாம். பட்டுப்புடவைகளைப் போன்றே பட்டு வேஷ்டிகளையும் ரோல் ஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம். உங்கள் திருமணத்துக்குக் கட்டிய பின், உங்கள் பையன் திருமணத்தின் போதும் எடுத்துக்கட்டினால் அதே மெருகுடன் இருக்கும்!’’

நன்றி : அவள் விகடன் - 17.11. 2015