அன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.in”
disalbe Right click
Showing posts with label போக்குவரத்து. Show all posts
Showing posts with label போக்குவரத்து. Show all posts
Monday, April 30, 2018
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான கையேடு
Labels:
போக்குவரத்து
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Monday, March 12, 2018
வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?
வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?
சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கை செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.
அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது.
வாகன தணிக்கை யார் செய்ய முடியும்?
சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி ஆகியோர் எந்தவொரு வாகனத்தையும்
ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக அவர்கள் நிறுத்த சைகை காட்டினால், உங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும்கூட, உங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள்.
காவலர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது?
சாதாரண போக்குவரத்து
காவலருக்கு (கான்ஸ்டபிள்) உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை எடுப்பதற்கோ
அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாது. அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான சலான் புத்தகம் அல்லது எலக்ட்ரானிக் மெஷின் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது. பணியில் இருக்கும் காவலரின் சீருடையில், அவருடையபெயர் மற்றும் அவரது பெல்ட் எண் ஆகியவை இருக்க வேண்டும்.
போக்குவரத்து விதிமீறல்கள்
மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்க,
அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க காவலர்களுக்கு அதிகாரம் உண்டு.
கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா?
சாதாரண போக்குவரத்து காவலர்களுக்கு வாகன ஓட்டி ஒருவரின் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டி வருபவர்களை கைது செய்யவோ முடியாது. அந்த வாகன புகை பரிசோதனை சான்றைக்கூட அவர்களுக்கு கேட்க அதிகாரம் இல்லை. அது போக்குவரத்து அதிகாரிகளால்
மட்டுமே கேட்க அதிகாரம் உள்ளது. வண்டியிலிருந்து
சாவியை பிடுங்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
எந்த சூழ்நிலைகளில் வண்டியை ஒப்படைக்க வேண்டியதிருக்கும்?
சிக்னல் ஜம்ப், குடிபோதையில் டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது மற்றும் அதிக பாரம் ஏற்றுதல் போன்ற குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டியதிருக்கும். அதேநேரத்தில், அதற்குண்டான உரிய சலான் இல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸை டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல முடியாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை வாகன ஓட்டிகள் கேட்டு பெறுவது அவசியம். நீதிமன்றத்தில் அபாரதத்தை கட்டிய பிறகு, அந்த ரசீதை அவர்களிடம் கொண்டு சென்று காட்டி, லைசென்ஸை திரும்ப பெற முடியும்.
ஒரு வேளை அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அபராதம் விதித்தால், நான் அபராதத்தை கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் எழுதிய சலானை பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்.
காரை எடுத்துச் செல்ல அதிகாரம் உண்டா?
காரினுள் யாராவது அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் (car toe) டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அவர்களிடம் பேசி விபரத்தைத் தெரிவித்து இறக்கிவிட்டு காரை கொண்டு செல்லலாம்.
பெண்கள் வாகனத்தை ஓட்டி வந்தால்...
மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவர்களை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய வேண்டும். பெண் காவலர் இல்லை என்றால்,
அவரை வரவழைத்து அவர்களை ஆய்வு செய்யுங்கள்! என்று கூறவும் பெண்களுக்கு உரிமை உண்டு.
போக்குவரத்து விதிகளை மீறினால்....
சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ்
உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.
போக்குவரத்து அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்தால்....
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஒருவரை கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உரிய ஆவணங்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். பயம் கொள்ளாதீர்கள். உங்களை நம்பி பலபேர்கள் இருப்பதை எண்ணி பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.03.2018
Labels:
போக்குவரத்து
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Monday, January 29, 2018
போக்குவரத்து காவலர்கள் பணி
தமிழ்நாடு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை அழைத்து தானே நேரடியாக ஆலோசனை வழங்கி, போக்குவரத்து காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை நேற்று வழங்கியுள்ளார்.
போக்குவரத்து காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயிண்டில் நியமிக்கப்பட்ட இடத்தில் நின்று பணி முடியும் நேரம் வரை அலுவல் புரிய வேண்டும். நியமிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் அனுமதி பெற்று வேறு ஒருவரை அந்த இடத்தில் நிற்க வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பாயிண்டில் நிற்பவரை தவிர வேறு இடத்தில் உள்ள காவலர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து நின்று கொண்டு அலுவல் புரிய கூடாது. சுத்தமான சீருடையில் பணிக்கு வரவேண்டும்.
2. பாயிண்ட் அலுவலின் போது செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருக்ககூடாது. தவிர்க்க முடியாத முக்கியமான அழைப்பாக இருந்தால் மட்டும் சிறிது நேரத்தில் பேசி முடித்து விட்டு பணியாற்ற வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசியில்
பேசிக்கொண்டிருக்க கூடாது.
3. காவலர்கள் சாதாரண உடையிலோ, சீருடையிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். இதை மீறிச்சென்றால் உயர் அதிகாரிகள் தணிக்கையின் போது கடும் நடவடிக்கை இருக்கும்.
4. காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை தணிக்கை செய்யக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பி-டயரி (B,diary) வழக்குகள் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் விதி மீறும் வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது.
5. J,walk- ஜெ.வால்க் பணியாற்றும் காவலர்கள் பாதசாரிகளை விசில் ஊதித்தான் சைகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பாதசாரிகள் சுரங்கப்பாதையை உபயோகிக்காமல்
சாலையை கடக்கும் போது விசில் ஊதி அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
6. காவல் ஆணையர் உத்தரவுப்படி மாலை 6 மணிக்கு மேல் பாயிண்ட் அலுவலில் உள்ள காவலர்கள் ரிஃப்லக்ட் ஜாக்கெட், மற்றும் மிளிரும் விளக்கு கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு : J,walk என்றால் என்ன? Jay walk என்ற வார்த்தையையே சுருக்கி J,walk என்று குறிப்பிடுகிறார்கள். J,walk என்றால் பாதசாரிகள் நடக்க தடைசெய்யப்பட்ட சாலையில் பொதுமக்களை வழிநடத்துகின்ற போக்குவரத்து காவலர்கள் பார்க்கின்ற பணியாகும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.01.2018
Labels:
போக்குவரத்து
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Subscribe to:
Posts (Atom)