disalbe Right click

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Saturday, December 2, 2017

‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்

வெயிட் ஏறிட்டே போகுது, பீரியட்ஸ் ஒழுங்கா வரலை, ரொம்ப டயர்டா இருக்கு” – இப்படி யாராவது சொன்னால், உடனே அவர்களிடம் கேட்பது, தைராய்டு பிரச்னை இருக்கா என்றுதான். இந்தியாவில் பெரும்பான்மையான பெண்களுக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. ஆனால் இதில் பாதிப் பேருக்்கு தைராய்டு பற்றிய விழிப்புஉணர்வே இல்லை.
தைராய்டு என்பது என்ன?
தைராய்டு நம் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவம்கொண்ட ஓர் உறுப்பு. உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றப் பணிக்குத் தேவையான, பிரதான நாளமில்லா சுரப்பி இது. பலரும் ஆரோக்கியத்துடன் வாழ உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றுகிறோம். ஆனால், உடலின் சீரான, ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மிக முக்கியம்.”
தைராய்டு பாதிப்பு பெண்களுக்குதான் ஏற்படுமா?
தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் ஆண், பெண் இருவருக்குமே வரும். ஆனால் ஆண்களைவிட பெண்களையே 5 முதல் 10 மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. அதிலும் இளம் வயதுப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உடலில் தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தால், அதை ஹைப் போதைராய்டிசம் (Hypothyroidism) என்றும், அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyrodism) என்றும் குறிப்பிடுவோம்.
தைராய்டு பாதிப்பால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?
‘‘ பெண்கள் பருவம் அைடயும்போதும், குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் போதும், உடல் மற்றும் மனதளவில் பல சிக்கல்களை தைராய்டு பாதிப்பால் சந்திக்க நேரிடும். தைராய்டு சுரப்பியில் இருந்து வெளிப்படும் டி3, டி4 என்ற இரண்டு ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. நமது உடலின் நரம்பு மண்டலம், நினைவாற்றல், உடல் மற்றும் மூளை வளர்ச்சி, பாலின உறுப்புகளின் செயல்பாடு, கருத்தரித்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தைராய்டு சுரப்பு குறைந்தால், உடல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல், தோலில் வறட்சி, நினைவாற்றல் குறைதல் போன்றவை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால், உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும்.
குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு, தைராய்டு பிரச்னை உள்ளது. மேலும், கருவுற்ற தாயின் தைராய்டு நோய், கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. முதலிலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கருச்சிதைவைத் தவிர்க்க முடியும்.”
தைராய்டு நோய் ஏன் பெண்களையே அதிகளவில் பாதிக்கிறது?
‘‘மிக முக்கியமான ஒரு காரணம், ஆட்டோ இம்யூனிட்டி (Autoimmunity) எனப்படும் தன் எதிர்ப்பு ஆற்றல். அதாவது, நம் உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள்,சொந்த உடலின் உறுப்புகளையே, வெளியில் இருந்து வரும் நோய்க் கிருமிகளை போல கருதி அழிக்கத் துணிகின்றன. இந்த தன்எதிர்ப்பு ஆற்றல் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) என்ற ஹார்மோன், இந்த தன்மையைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது.
மேலும் பெண்களின் மரபணுவில் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் (Chromosomes) இருப்பதும் காரணம். இயற்கையாகப் பெண்களுக்கே அதிக அழுத்தமான சூழ்நிலைகள் உள்ளன. நமது முன்னோர்களைவிட, இன்றைய தலைமுறையினரிடம் தைராய்டு நோய் அதிகமாகக் காணப்படுவதற்கு ஸ்ட்ரெஸ் முக்கிய காரணம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கு, ஸ்ட்ரெஸ் ஒரு முக்கிய காரணமாகும்.”
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு?
‘‘தைராய்டு நோய்க்கு தீர்வு இல்லை என்ற எண்ணம் மிகவும் தவறானது. ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்களின் அளவைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னை உள்ள பெண்களும் மற்ற பெண்களைப் போல ஆரோக்கியமாக வாழ முடியும். நாளமில்லா சுரப்பியியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, மருந்து உட்கொள்வதன் மூலம், மாதவிடாய் கோளாறு மற்றும் மலட்டுத்தன்மைக்கும் தீர்வு காண முடியும். பேறு காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தவிர்க்க முடியும்.”
- எஸ்.விஜயஷாலினி
நன்றி : டாக்டர் விகடன் - 01.12.2014  

Tuesday, November 14, 2017

இல்லறம் சிறக்க உதவும் எளிய வழிமுறைகள்!

முருங்கைக்கீரை, ஆலம்பழம், எண்ணெய்க்குளியல்... இல்லறம் சிறக்க உதவும் எளிய வழிமுறைகள்!
ஆண்மைக்குறைவு...
இன்றைய இளைஞர்களில் பலரை பயமுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரமான பிரச்னை. ஆனால், பல போலி மருத்துவர்களுக்கு இது ஆயிரக்கணக்கில் பணம் ஈட்டித்தரும் அமுதசுரபி. ஆண்மைக்குறைவை சரிசெய்வதாகச் சொல்லிக்கொண்டு ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருவது கவலைக்குரிய செய்தி. இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் போய் பணத்தையும் இழந்து, சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், மனஅழுத்தத்துக்கு ஆளாகிவருகிறார்கள் நம் இளைஞர்கள்.
ஆண்மைக்குறைவு
ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கு பயம், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் புகைப்பழக்கம் உள்ளிட்ட போதைப்பழக்கங்கள் போன்றவை முக்கியக் காரணங்கள். அதேநேரத்தில் ஆண்மைக்குறைவு என்பது ஒரு நோயே அல்ல என்றும் சொல்லப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் போதிய அளவு புரதச்சத்து இல்லாததால், ஆண்களுக்குப் பலவீனம் ஏற்படுகிறது. புரதச்சத்துகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே வயதான காலத்திலும்கூட இனிய இல்லற வாழ்க்கையை வாழ முடியும்.
சில காரணங்களால் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும், அந்தக் குறைகள் நீங்கிவிடும். அவற்றில் சில இங்கே...
 அதிகாலையில் கண்விழிப்பது, வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது, காலைக்கடன் கழிப்பது, எளிய உடற்பயிற்சி செய்வது... என காலைப் பொழுதைத் தொடங்க வேண்டும். நீந்திக் குளிக்க வசதி இருந்தால் காலையில் நீச்சலடித்துக் குளிக்கலாம். முடிந்த வரை அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டியில் (சைக்கிள்) செல்வது என பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.
ஆண்மைக்குறைவு
 வாரத்துக்கு ஒருநாள் எண்ணெய்க் குளியல் செய்வதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். நல்லெண்ணெயுடன் சிறிது மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் காய்ந்த மிளகாய் தலா ஒன்று சேர்த்து லேசாகக் கொதிக்கவைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அடிக்கடி வெந்நீரில் குளிக்கக் கூடாது.
 உணவில் புளி, காரம் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவுகளை அறவே ஒதுக்கிவிடுவது நல்லது.
▇  பகல் உறக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
▇  பாதாம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்பு போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
 ஆலம் பழம், அரசம் பழம், அத்திப் பழம் போன்றவற்றை மரங்களில் இருந்து பறித்து, அதிலிருக்கும் பூச்சிகளை அகற்றிவிட்டு அப்படியே சாப்பிட வேண்டும். வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை, கசகசா, குங்குமப்பூ, மாதுளம்பழம், நெல்லிக்காய், கோதுமை, வெள்ளைப்பூண்டு, ஜாதிக்காய், வால்மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கம், கீரை வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆண்மைக்குறைவைப் போக்கி, இல்லறம் இனிக்க உதவும்.
இல்லறம
 காலை உணவுக்கு முன்னர் மாதுளம்பழம் சாப்பிட்டுவந்தால், ரத்தசோகை நீங்கும்; ஆண்மை பலம் தரும். மதிய உணவின்போது முதல் கவள உணவுடன் கால் டீஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டுவருவது நரம்புகளுக்கு பலம் தரும். மதிய உணவின்போது முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப்பூக்களை நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுவது உடல் பலம் பெற உதவும். மாலை நேரங்களில் முற்றிய முருங்கைக்காய்களில் சூப் செய்தும் குடிக்கலாம்.
 இரவு நேரங்களில் பிஞ்சு முருங்கைக்காய்களை பாலில் வேகவைத்துச் சாப்பிடுவது, முருங்கைப்பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது, முருங்கை விதைகளைப் பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிடுவது நல்லது.
 இரவில் ஒரு கைப்பிடி வெறும் எள்ளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு பால் அல்லது தண்ணீர் குடிக்கலாம். வாரத்தில் இரண்டு நாள்கள், அரிசி கலந்து கஞ்சிபோல் செய்து குடித்துவரலாம்
▇ இவை தவிர முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், செவ்வாழைப்பழம், அரைக்கீரை, புளிச்சக்கீரை, சோயா பீன்ஸ் மற்றும் கோதுமைக்கஞ்சி, பாதாம் பால், கறிவேப்பிலைச் சட்னி, கொத்தமல்லி துவையல், உளுந்து வடை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
▇ புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினால் ஆண்மைக்குறைவு பிரச்னை நெருங்கவே நெருங்காது.
எம்.மரிய பெல்சின்
நன்றி : விகடன் செய்திகள் - 12.11.2017