disalbe Right click

Showing posts with label மூலிகை. Show all posts
Showing posts with label மூலிகை. Show all posts

Thursday, November 9, 2017

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

குப்பைமேனிமிகுந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையான இது எல்லா நிலப்பரப்புகளிலும் தானாக வளரக்கூடியது. மருத்துவத் தன்மைகள் நிறைந்த இந்த மூலிகையின் சிறப்புகள் பற்றிச் சொல்கிறார் சித்த மருத்துவர் அர்ஜுனன்.
சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பல்வேறு அரிய மூலிகைகளைக் கண்டெடுத்து, வகைப்படுத்தி நமது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் வழிமுறைகளைச் சொல்லியிருக் கிறார்கள். அந்த வகையில் இந்தக் குப்பைமேனி மூலிகைச் செடி, பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. குப்பைமேனிக்கு `பூனை வணங்கி’, `பூனை விரட்டி’, ‘மார்ஜால மோகினிஉள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Acalypha indica.
நாம் உட்கொள்ளும் உணவு சில நேரங்களில் செரிமானம் ஆகாமல் பிரச்னைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழலில், குப்பைமேனியைக் கஷாயம் செய்து அருந்தினால் நிவாரணம் கிடைக்கும். குப்பைமேனி இலையைச் சாறெடுத்து, சம அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்ச வேண்டும். நன்கு சுண்டியதும், அடியில் படியும் உப்பை நீக்கிவிட்டு, தண்ணீரை மட்டும் வடிகட்டி மிளகு சேர்த்து லேசாகச் சூடாக்கினால் குப்பைமேனி கஷாயம் தயார். இதைக் காலை, மாலை அருந்தினால் செரிமானக் கோளாறு மற்றும் வாய்வுக் கோளாறுகள் சரியாகும். நெஞ்சுக்கோழை நீங்கும். இருமலும் கட்டுப்படும். விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தக் கஷாயம் நிவாரணம் தரும்.
குப்பைமேனி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு ரோமங்கள் உதிரும். முகத்தின் பொலிவு அதிகரிக்கும். இலையுடன் சிறிது மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்து உடலில் பூசிச் சிறிது நேரம் கழித்துக் குளித்தால் சொறி, சிரங்கு உள்ளிட்ட சரும நோய்கள் விலகும். குப்பைமேனி இலையைச் சாறு பிழிந்து 200 மி.லி எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் சேர்த்துத் தைலம் போலக் காய்ச்சி வலியுள்ள இடங்களில் தேய்த்தால் குணம் கிடைக்கும்.
குப்பைமேனியைத் துவையல் செய்து சாப்பிடலாம். வாணலியில் எண்ணெய்விட்டுக் கடுகு சேர்த்துத் தாளித்து, அதில் நறுக்கிய குப்பைமேனி இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் குப்பைமேனித் துவையல் தயார். இதைச் சாப்பிடுவதால் தீராத தலைவலி தீர்வதுடன் பக்கவாத நோய்களும் பறந்து போகும். மூல நோயாளிகள் இதைச் சாப்பிட்டுப் பலன் பெறலாம்.
குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்விட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் கட்டி வந்தால் படுக்கைப்புண்கள் ஆறும். இதன் வேரைத் தண்ணீர்விட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் பூச்சிகள் வெளியேறும். இலைச் சூரணத்தை (பொடி), சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு, கபம் விலகும்.
நன்றி : டாக்டர் விகடன் - 01.11.201

Thursday, November 2, 2017

துத்தி

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு 'அதிபலா' என்ற வேறு பெயரும் உண்டு
மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்திஇலை , இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும்

இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.
துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலையை எடுத்து 500 மி.லி தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை குடித்து வர குணமாகும்.
வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச குணம் காணலாம்
மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இந்த நோய் அணுகாது
துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்,காமம் பெருக்கும், ஆண்மையைப் பெருக்கும், குளிர்ச்சி உண்டாக்கும். சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட சரியாகும். துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும். வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர சரியாகும்.
துத்தி விதைச்சூரணம் 20கிராம் கற்கண்டு ஐந்து , தேனில் கலந்து சாப்பிட மேகநோய் குணமாகும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும். 20 மி.லி பூச்சாறுடன் கற்கண்டு நான்கு சேர்த்து சாப்பிட்டு வர இரத்த வாந்தி கட்டுப்படும்.
இதை சாப்பிடும் நேரத்தில் புளி, காரம், மாமிசம் உணவைச் தவிர்க்கவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும். துத்திப் பூவை 200கிராம் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வர , உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.

எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும். துத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நீண்ட நாள் ஆரோக்கியம் தரும். கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் உள்ளன.. 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன.
துத்தி இலை அல்லது துத்தி வேரை 100கிராம் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை 60 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளை நோயும், வெட்டை நோயும் குணமாகும். துத்தி விதையை 30 கிராம் அளவு எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து, பிறகு தேவையான அளவில் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
இலை 200 கிராம் அளவில் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி சாப்பிட்டு வர , மஞ்சள் காமாலை நோய் குணமாகும் துத்தி விதையைப் பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.
இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நெய் சேர்த்து 30 மில்லி அளவு சாப்பிட்டு வர , கடுமையான ஜலதோஷம் குணமாகும்.
இக்கீரையை பச்சரிசி அல்லது துவரம் பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறு கட்டுப்படும்.
துத்தியிலையை உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி 20கிராம் பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும். துத்தி இலையை காய்ச்சி தினமும் குடித்துவர குடல்புண் குறையும்.

மேலும் தெரிந்துகொள்ள: 94420 60556,80988 17833
நன்றி : முகநூல் - கொல்லிமலை மூலிகைகள்