disalbe Right click

Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Saturday, July 15, 2017

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன?

பெங்களூரு சிறையில் நடப்பது என்ன? வீடியோ வெளியானதால் பரபரப்பு
பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள், நேற்று, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, கடந்த, 10ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கப் பட்ட சிறப்பு சமையல் அறை, முத்திரை தாள் மோசடி குற்றவாளி, அப்துல் கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதி, போதை பொருளான கஞ்சா கொண்டு வருவது போன்ற முறைகேடு களை கண்டுபிடித்தார்.
இது தொடர்பாக, கைதிகளிடம் விசாரித்தார். கஞ்சா, சூதாட்ட அட்டைகள் எப்படி கிடைத்தன என்று கைதிகளிடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கைதிக ளிடம் ரூபா விசாரிப்பது, சிறை கைதிகள் சூதாடுவது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று மீடியாக்களில் வெளியானது. இதனால், கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், டி.ஐ.ஜி., ரூபா புகார் வெளியாகி மூன்று நாட்களுக்கு பின்னும், புகார் தொடர் பான பரபரப்பு குறையாமல் இருந்ததால், சிறை துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் பீதி அடைந்துள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறைக்கு செல்வர் என்பதை அறிந்த, சத்யநாராயண ராவ், நேற்று காலையில் திடீரென, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக, சிறையில் இருந்தார். சில ஆவணங்களை சரி செய்ததாக வும், நேற்று முன்தினம் இடிக்கப்பட்ட, சசிகலாவின் சமையல் அறை பகுதியை ஆய்வு செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வளவு நாட்களாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சாதாரண உடை தான் அணிந்துள்ளார்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சீருடைக்கு மாறும்படி, ஊழியர்கள் மூலம், டி.ஜி.பி., கூறியதாகவும், அதன் பின், சிறை சீருடையான, வெள்ளை சேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. டி.ஜி.பி., ராவ், சிறைக்கு வந்து, சில ஆவணங் களை சரிப்படுத்திய தகவலை அறிந்த டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலை 4:00 மணியளவில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார்.
அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டர் பாபு சங்கரிடம் சில நிமிடங்கள் பேசினார். பின், சிறைக்குள் சென்றார். சிறையில் தான் ஏற்கனவே பார்த்த ஆவணங்கள் சரியாகவுள்ளதா அல்லது மாற்ற பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., ஒருவர் பின் ஒருவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சசியை சந்திக்க சென்றவர்களுக்கும் சிறையில் ராஜமரியாதை கிடைத்ததா?
பரப்பன அக்ரஹாரா சிறையில் இம்மாதம், 10ம் தேதி ரூபா ஆய்வு செய்தபோது, அவர் எடுத்த வீடியோ காட்சிகளை சிறை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார்; அந்த காட்சிகளை தனக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் அனுப்பிய வீடியோ காட்சிகளை பார்த்தபோது, சசிகலா சம்பந்தமானசில முக்கியமான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக சத்யநாராயண ராவ், உள்துறை முதன்மை செயலர், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஊழல் ஒழிப்பு படை ஆகியோருக்கு, நேற்று காலை, இரண்டாவது அறிக்கையை, ரூபா சமர்ப்பித்துள் ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சசிகலாவை சந்திக்க வருபவர்கள், நேரடியாக, அவர் அடைக்கப்பட்டுள்ள இடத்துக்கே அழைத்து செல்லப் படுகின்றனர். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் அமருவதற்கு, நான்கு நாற்காலிகள், ஒரு மேஜை போடப்பட்டிருந்தன. இந்த அறை முன் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுப்பது தொடர்பாக சிறை ஊழியர் ஒருவர், எனக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியிருந்தார். எனக்கு எதிராக கைதிகள் போராட்டம் நடத்திய காட்சிகள், எப்படி வெளியானது; அதற்கு துணை புரிந்தவர்கள் யார்; அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிறை ஊழியர்களுக்கு தெரிந்தே, கைதிகள், சூதாட்டம் ஆடுகின்றனர்.இதுபோன்ற பல முக்கிய தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறைக்கு வெளியே சசி
ரூபாவுக்கு சிறை ஊழியர் எழுதிய கடிதத்தில், 'சசிகலா சிறைத்துறை உயர் அதிகாரி காரில், சிறை யில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு மூன்று முறைக்கும் மேலாக சென்று வந்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் ரகளை கைதிகள் மீது தடியடி
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலையில் ஆய்வை முடித்து திரும்பிய பின், இரவு 7:30 மணியளவில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி கைதிகளை சிறை அதிகாரி கிருஷ்ணகுமார் துாண்டியதாகவும் தகவல் அறிந்து பரப்பனஅக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் சென்று கைதிகள் மீது தடியடி நடத்தி கலைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கையா அவசரமாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ரூபாவுக்கு ஆதரவாக சில கைதிகளும் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக சில கைதிகளும் கோஷம் எழுப்பினர். அவர்களை
சமாதானப்படுத்திய போரலிங்கையா நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவத்தால் சிறை பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ்
பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறை கேடு குறித்து டி.ஐ.ஜி., ரூபா, டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு சமர்ப்பித்த அறிக்கை குறித்து மீடியாக்களில் பேசியதற்காக ரூபா வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சத்யநாராயண ராவுக்கும் விளக்கம் கேட்டு கர்நாடக உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரபட்சமின்றி அரசு செயல் படுகிறது என காண்பித்து கொள்வதற்காக, இது போன்று நடப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதி மீது தாக்குதல்?
சசிகலாவுக்கு சிறையில், சிறப்பு வசதி செய்து கொடுத்திருந்ததை அம்பலப்படுத்திய, டி.ஐ.ஜி., ரூபா, நேற்று மாலை, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தபோது, சிறை வளாகத்தில் இருந்த ராமமூர்த்தி என்ற கைதியின் மனைவி அனிதா, ரூபாவிடம் ஓடி வந்து, ''சிறையிலுள்ள என் கணவர், சிறை முறைகேடுகள் குறித்து உங்களுக்கு தகவல் அளித்து வந்ததாக கூறி, சிறை அதிகாரி கிருஷ்ணகுமார், தகாத வார்த்தையால் திட்டி, அவரை தாக்கியுள்ளார்,'' என்றார்.
இதற்கு ரூபா, ''நான் பார்த்துக் கொள்கிறேன்,'' எனக் கூறி, சிறைக்குள் சென்றார்.
இது தொடர்பாக, சிறைக்குள், கிருஷ்ணகுமாருக் கும், ரூபாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரானிக் சிட்டி பகுதி போலீசாரை அழைத்து, தன் பாதுகாப்புக்கு வரும்படி, ரூபா அழைத்தார். இதன் பின், அங்கிருந்து, ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு போலீசார் வந்தனர். வெளியே வந்த ரூபா, நேராக, பரப்பன அக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷ னுக்கு சென்றார். அங்கு, சிறை அதிகாரி கிருஷ்ண குமார் மீது, அவர் புகார் அளித்திருக்கலாம் என தெரிகிறது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடந்துள்ள முறைகேடு விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வந்தவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் அது பற்றியே, கருத்தை தெரிவித்து கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
-சித்தராமையா, கர்நாடக முதல்வர், காங்.,-

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.07.2017

சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்

Image may contain: 4 people
சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, அத்துறையின் டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் மீதே புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, கர்நாடகா, 'மாஜி' முதல்வர் குமாரசாமி கூறியதாவது: சிறை அதிகாரிகள்டி.ஜி.பி.,க்கு மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதில், 25 லட்சம் ரூபாய், டி.ஐ.ஜி.,க்கு செல்ல வேண்டும். இந்த பணத்தை வழங்காமல், டி.ஜி.பி.,யே பெற்றுக் கொண்டதால் தான், முறைகேடு வெளியே வந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.
விதிமுறைகளை மீறி, மீடியாக்கள் முன் பேட்டியளித்த, சத்யநாராயண ராவ் மற்றும் ரூபா ஆகியோரை, விடுப்பில் அனுப்பி விட்டு, விசாரணை நடத்த வேண்டும். எனக்கு கிடைத்துள்ள தகவலின் படி, சசிகலாவிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, மாதந் தோறும் 10 லட்சம் ரூபாய், 'மாமூல்' தரவேண்டு மென்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது.
நிர்வாகம் சரியில்லாததால் தான், அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொள்கின்றனர். மற்ற விசாரணை போன்று, இவ்விசாரணையிலும், 'பி' ரிப்போர்ட் வழங்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில், ஒரு வழக்கிலாவது, உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடக அரசுக்கு 'சிம்ம சொப்பனம்' ரூபா
* கர்நாடக மாநிலம் தாவணகரேயைச் சேர்ந்தவர் ரூபா, 42; எஸ்.எஸ்.எல்.சி.,யில், மாநில அளவில், 20வது ரேங்க் பெற்றார். பி.ஏ., பட்டப் படிப்பில், தங்கப்பதக்கம் பெற்று மாநிலத்தில் முதலிடமும்; எம்.ஏ., முதுகலை பட்டப் படிப்பில், மூன்றாவது இடமும் பெற்றார்.

* கடந்த, 2000ல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவில், 43வது இடத்தை பிடித்து, ஐ.பி.எஸ்., அதிகாரியானார்.
* ரூபாவின், 17 ஆண்டுகள் அரசு பணியில், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், 30க்கும் மேற்பட்ட முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆரம்ப காலத்தில், வாடகை வீட்டில் தங்குவதற்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டுள்ளார் யாத்கிரியில் பணியில் இருக்கும் போது, அரசு பள்ளியில் தன் மகளை சேர்த்து படிக்க வைத்தார் கலாசாரத்தை மதித்து, பண்டிகை யின் மகத்துவத்தை குழந்தைகளுக்கு விளக்கி கொண்டாடுவார்.
* பணியில் யார் குறுக்கிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்ததை செயல்படுத்தியவர்.
* இரண்டு முறை, 'மிஸ் தாவணகரே' அழகி பட்டம் பெற்றதால், பல மொழி சினிமாக்களில் நடிக்க அழைப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து, மக்கள் நல பணியாற்றினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.07.2017

Thursday, July 13, 2017

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை
சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை
பெங்களூரு:'பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று, ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு, ரூபா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை,டி.ஐ.ஜி.,யான நான், ஆய்வு நடத்தியதை, தங்களுக்கு . இவ்வாறு அந்த அறிக்கையில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் ரூபா கூறுகையில் இதே அறிக்கையை, ஊழல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.07.2017

Saturday, April 1, 2017

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?


எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?

காவல் நிலையத்தில் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் தெரியுமா..? - ஒரு குபீர் விளக்கம்!

'ஆடுதானே காணாம போச்சு. அதை அப்படியே விட்டுடு. போலீஸ் ஸ்டேஷன் போனா... இருக்குற மாட்டையும் விக்க வேண்டியிருக்கும்' - கிராமங்களில் இப்படி சொல்வதுண்டு.

பிரச்னைனா போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டியதுதானே. நீங்களாவே ஒரு முடிவு எடுத்துக்குவீங்களா? என போலீஸ் தரப்பு நியாயம் பேசினாலும், 'போலீஸ் ஸ்டேஷனே வேண்டாம். நமக்கேன் பிரச்னை?' என போலீஸ் ஸ்டேஷனையே பிரச்னையாக நினைப்பவர்கள்தான் அதிகம். இதற்கு காரணமும் உண்டு.

உங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் அலுவலகம் எதுவென்று தெரியுமா? சந்தேகமே வேண்டாம் போலீஸ் ஸ்டேஷன்கள்தான். புகார் கொடுப்பவரையே கைது செய்ய போலீசாரால் முடியும். என் மீது தவறில்லை என நீங்கள் போலீஸ் ஸ்டேஷனின் நான்கு சுவருக்குள் நிரூபிக்க முடியாது. அதற்கு நீங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். 

நீங்கள் காவல்நிலையத்துக்கு எதற்காக சென்றாலும், வாசலில் காவலுக்கு துப்பாக்கியோடு நிற்கும் காவலாளியை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அடுத்து நீங்கள் சந்திக்கும் நபர் ரைட்டர். 

நீங்கள் சென்றால் உங்களை பார்க்காமல் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பார். சில நிமிடங்கள் நீங்கள் நின்று கொண்டே இருந்தால் மெல்ல நிமிர்ந்து பார்த்து, 'என்ன பிரச்னை..?' என கேட்பார். 

நீங்கள் ஏதாவது பெரிய பிரச்னையை சொல்லிவிட்டால், எஸ்.ஐ.,யையோ, இன்ஸ்பெக்டரையோ கை காட்டி விடுவார். அதுவே சிறிய பிரச்னையாக ஏதாவது சொன்னால் அவரே களத்தில் இறங்கி விடுவார். 

பேப்பர் கட்டு, பேனாவில் துவங்கி...பிரச்னை என கேட்டு விட்டு, 'அப்படியா. முதல்ல பக்கத்துல கடைக்கு போய் 2 கட்டு பேப்பர், 10 பேனா வாங்கிட்டு வா. வரும்போது எல்லோருக்கும் டீ சொல்லிடு" என ஆரம்பிப்பார். 

அதில் இருந்துதான் துவங்குகிறது வசூல் வேட்டை. காவல்நிலையத்தில் நீங்கள் புகார் அளித்தால் உடனடியாக புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

புகாரைப்பொறுத்து அதன் மீது முதல் தகவல் அறிக்கை போட வேண்டும். அதன் பின்னர்தான் விசாரணையை துவக்க வேண்டும்.

ஆனால் இது எதையுமே போலீசார் செய்யமாட்டார்கள். நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள் என்றால் உடனே எதிர் தரப்பை அழைத்து பேசுவார்கள். இருவரிடமும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவார்கள். யாரிடம் அதிகம் பேரம் படிகிறதோ அவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவார்கள். 

அதாவது புகார் கொடுத்தவரை விட எதிர் தரப்பு அதிக பணம் கொடுத்தால், முதலில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதை மீறி புகார்தாரர் கேள்வி கேட்டால் அவ்வளவுதான். எதிர்தரப்பிடம் புகாரை வாங்கி, புகாரை கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுத்து விடுவார்கள். 

ஒருவரை தகாத வார்த்தைகளில் பேசுகிறீர்கள் என்றால் அது சாதாரண வழக்கு. அதுவே கொலை செய்து விடுவேன் என சேர்த்துக்கொண்டால் அது கொலை மிரட்டல் ஆகிவிடும். அதேபோல் தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் என ஒரே சம்பவத்தில் ஜாமீனில் வரக்கூடிய அளவுக்கும் போலீசால் வழக்குப்பதிவு செய்ய முடியும். ஜாமீனில் வரமுடியாத அளவுக்கும் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ய முடியும். 

சட்டப்பிரிவுகளை மாற்றி உங்கள் ஜாதகத்தை இவர்கள் மாற்றி அமைத்து விடுவார்கள். ஜாமீனில் வெளி வரக்கூடிய அளவுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் லஞ்சம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

குற்றப்பிரிவு திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட போலீசார் தங்கள் கைவரிசையை காட்ட மறுப்பதில்லை. ஒரு வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போகிறது என்றால், அவர் புகார் அளித்தாலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய
மாட்டார்கள். 

அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் கொள்ளைபோன அளவை விட குறைவாகவே குறிப்பிட்டு வழக்கு பதிவார்கள். அதாவது 50 பவுன் கொள்ளை போன இடத்தில் 20 பவுன், 30 பவுன் நகை திருட்டு போனதாக வழக்கு பதிவாகும்.

திருடர்களை பிடித்த பின்னர் ஒட்டுமொத்த நகையையும் பறிமுதல் செய்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தனை நகை இல்லை. எல்லாவற்றையும் விற்றுவிட்டான். பாதிதான் கிடைக்கும் என்பார்கள். பலருக்கு எப்.ஐ.ஆரில் குறிப்பிட்ட அளவு நகைதான் கிடைக்கும். மீதி போலீசின் பாக்கெட்டுக்கு போய் விடும். பத்திரிகையாளர்களை அழைத்து 20 பவுன் நகையையும் மீட்டு விட்டதாக பந்தாவாக பிரஸ் மீட்டும் கொடுப்பார்கள்.

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் இத்தனை கொள்ளைகளும் உண்மைதானா என்றால், கொஞ்சம் கூட மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார்கள் போலீசார். 

"காவல்துறையில் லஞ்சம் அதிகளவில் புழங்குவது உண்மைதான். ஆனால் காவல்துறையில் லஞ்சத்தை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஏனென்றால் காவல்நிலையங்களே இந்த லஞ்சப்பணத்தில்தான் நடக்கிறது" என அதிர வைத்தார் முன்னாள் போலீஸ் அதிகாரி.

"புகார் கொடுக்க வருபவரை பேப்பர் வாங்கி வரச்சொல்வதும், டீ வாங்கி கொடுக்க சொல்வதும், உணவு பொட்டலங்களை வாங்கி வரச்சொல்வதும் உண்மை. அது எங்களுக்கு மட்டுமல்ல. காவல்நிலையங்களில் உள்ள விசாரணை கைதிகளுக்காகவும்தான். விசாரணை கைதிகளை வைத்து பராமரிக்க அரசு வழங்கும் நிதியை வைத்து ஒரு டீ கூட வாங்கி தர முடியாது. 

மேலும் சட்டப்படி ஒருவரை ஒரு நாளுக்கு மேல் விசாரணைக்கு வைத்திருக்கவும் முடியாது. அதேபோல் குற்றவாளிகளை கைது செய்ய செல்வதற்கான வாகன செலவுகளையும் அரசு ஏற்காது. 

விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் என எதற்கும் அரசு செலவு இல்லை. இதுதவிர போலீஸ் வாகனம் துவங்கி, மறியலில் கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு கொடுப்பது வரை எல்லாவற்றுக்கும் லஞ்சப்பணம் தேவை.

ஏனென்றால் அரசு இதற்கெல்லாம் செலவிடும் தொகை மிக மிக சொற்பம். சாலை மறியலில் ஆயிரம் பேரை கைது செய்தால், அவர்களுக்கு உணவுக்கு கொடுக்கும் தொகை ஒரு நபருக்கு வெறும் 10 ரூபாய். 

ஆனால் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் செலவாகும். இதற்கெல்லாம் நாங்கள் எங்கு போவது. இதற்கு துவங்கிய லஞ்சம்தான் இப்போது மிக அதிகமாகி இருக்கிறது" என இதற்கு விளக்கமும் சொன்னார் அந்த ஓய்வுபெற்ற அதிகாரி.

ஏன் லஞ்சம் வாங்குறீங்கனு கேட்டா... ஜென்டில்மேன் அர்ஜூன்மாதிரி விளக்கம் சொல்றீங்களே பாஸ்...! 

- ச.ஜெ.ரவி


விகடன் செய்திகள் - 31.03.2016

Friday, March 17, 2017

புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி


புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி
தான பத்திரம் மீது விசாரணை கை நீட்டிய 'தங்கம்' கைது!
விருதுநகர், : போலியாக பத்திரம் தயாரித்ததாக அளித்த புகாரை விசாரிக்க 3,000 ரூபாய் வாங்கிய, விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக டைப்பிஸ்ட் தங்கத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் சாமியார் கிணற்றுதெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது குடும்பத்தினர் பெயரில் பொதுச் சொத்துக்கள் உள்ளன.

'இதை பங்காளிகளில் ஒருவரான வெள்ளைச்சாமி, போலி பத்திரம் தயாரித்து தானம் கொடுத்து விட்டார்' என, சென்னை பத்திரப்பதிவு ஐ.ஜி.,யிடம் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார்.

லஞ்சம் கொடு: 
இதை விசாரிக்க விருதுநகர் மாவட்ட பதிவாளர் சந்தானத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பதிவாளர் அலுவலக டைப்பிஸ்ட் தங்கம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பாண்டுரங்கன் புகார் அளித்தார். அலுவலகத்தில் நேற்று, டைப்பிஸ்ட் தங்கம் 3,000 ரூபாய் வாங்கியபோது, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கேட்டது ரூ.10 ஆயிரம்: 
பாண்டுரங்கன் கூறுகையில், ''எனக்கு சாதகமாக விசாரிக்க தங்கம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். மறுத்ததால், மூன்றா யிரம் ரூபாயாக குறைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல் புகார் கொடுத்தேன்,'' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


Wednesday, February 22, 2017

ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை


ரூ.400 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு சிறை

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்;வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூ400 லஞ்சம் வாங்கிய திருத்தங்கல் நகராட்சி ஊழியருக்கு ஒன்றரை ஆண்டு சிறைதண்டனை , ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருத்தங்கல் மேலரதவீதியை சேர்ந்தவர் அய்யனார்.43. இவரது மனைவி சாந்திக்கு அவரது பெற்றோர் இரண்டு வீடுகளை கொடுத்துள்ளனர். இதற்காக வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யக்கோரி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்கு ரூ. 200 வீதம் இரண்டு வீட்டுக்கு ரூ400 லஞ்சம் தருமாறு நகராட்சி அலுவலக உதவியாளர் ஜேசு கேட்டுள்ளார். 

கடந்த 2008 ஆகஸ்ட் 10ல் ஜேசு லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. 

ஜேசுவிற்கு ஒன்றரை ஆண்டு சிறை, ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வசந்தி தீர்ப்பளித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 21.02.2017

Thursday, January 26, 2017

வழக்கிலிருந்து விடுவிக்க Rs.10 ஆயிரம் லஞ்சம்


வழக்கிலிருந்து விடுவிக்க Rs.10 ஆயிரம் லஞ்சம் 

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய தேரடி தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி பஷீர்கனி (56). இவர், பழவேற்காடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம் ₹45 லட்சம் கடன் பெற்றிருந்தார். ஆனால், அந்த பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தர்மலிங்கம், திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி., சாம்சனிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிந்து, பொன்னேரி பஷீர்கனியை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கில் பஷீர்கனியின் மகன் ராஜ்கிரண் (35) என்பவரும் உள்ளதால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ₹10 ஆயிரம் கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் கேட்டுள்ளார். மேலும், அந்த பணத்தை மணவாளநகரில் உள்ள தனது வீட்டில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்கிரண், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சிவபாதசேகரன், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் ₹10 ஆயிரத்தை ராஜ்கிரணிடம் கொடுத்து, அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி கூறினர்
.
அந்த பணத்தை மணவாளநகரில் உள்ள குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கநாதனிடம் கொடுத்தபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய இன்ஸ்பெக்டரே லஞ்சம் பெற்று பிடிபட்டு கைதான சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : தினகரன் நாளிதழ் - 27.01.2017

Wednesday, December 28, 2016

லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. கைது


லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. கைது

வழக்கு விரைவாக விசாரிப்பு, ரூ.50 ஆயிரம் லஞ்சம், டிஎஸ்பி கைது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடவடிக்கை


வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதி யைச் சேர்ந்தவர் எம்.எஸ்.குமரேசன். இவரது மனைவி சுஜாதா பெயரில் அரப்பாக்கத்தில் 7, 548 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்றுத் தருமாறு ஆற்காட்டைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு சுஜாதா பவர் பட்டா எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி, அந்த நிலத்தை விற்ற அஜய், நிலத்துக்குரிய பணத்தை சுஜாதாவிடம் கொடுக்கவில்லை.

இதையறிந்த குமரேசன் நிலத்துக் கான பணத்தை அஜய்யிடம் கேட் டுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அஜய் தம்பதியை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, வேலூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் சுஜாதா புகார் செய்தார். அதன்பேரில், அஜய் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி போலீஸார் வழக் குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அஜய்யை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு போலீஸாரிடம் குமரேசன் கேட்டுள் ளார். அதற்கு, ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் விரைவாக விசாரிப்ப தாக துணை காவல் கண்காணிப் பாளர் உஸ்மான் அலிகான் தெரிவித் துள்ளார்.

ரூ.3.50 லட்சம் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்ட குமரேசன், வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அவரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கொடுத்தனுப்பினர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் உஸ்மான் அலிகான் நேற்று அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் வாங்கிய வழக்கில் உஸ்மான் அலிகானை கைது செய்தனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 28.12.2016

Monday, November 30, 2015

லஞ்ச ஒழிப்புத்துறை


லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோர், அரசுத்துறைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். இவர்கள், நேர்மையான ஊழியர்களை கண்டு பயந்தனர். மக்களிடம் லஞ்சம் கேட்கவே கூச்சப்பட்டனர்; கைநீட்டி காசு வாங்க அச்சப்பட்டனர். இன்றோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது. இதற்குகாரணம், லஞ்சம் வாங்குவோரே, 'மெஜாரிட்டி'யாக உள்ளனர். 'லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா' என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்தவும் துணிந்துவிட்டனர்.
அரசுத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினால், தற்போது அது, அதிசயத்துக்குரிய செய்தியாக வெளியாகிறது. இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஒருவர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக பணியாற்றுவது என்பது, வாழ்வில் அவர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறி கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், அவ்வாறான ஒழுக்க நெறி கோட்பாட்டை ஒருவர் பின்பற்றுவதே ஆச்சரியத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது. இது, நாம் சார்ந்திருக்கும் சமூகம் எப்படிப்பட்ட சீரழிவுப்பாதையில், பேரபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே, அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தை செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள். 'இந்த நடவடிக்கைக்கு, 'இன்ன ரேட்' என்று விலையையும் நிர்ணயம் செய்துவிட்டார்கள். 'கரன்சி'யை காட்டாதவர்களின் மனுக்கள், கசங்கிய காகிதமாக குப்பைக்கூடைக்கு போகின்றன.
நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமியற்றும் பார்லிமென்ட் வரை நாறடித்துக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. லஞ்சம் கொடுப்போர் இருக்கும்வரை, வாங்குவோரும் இருக்கத்தான் செய்வர்.
வாங்குவது குற்றமெனில்; கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை இனி, செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி? என்பதற்கு, இந்த இதழ் உங்களுக்கு வழிகாட்டும். 

கேட்டால் ஆத்திரப்படாதீர்கள்! 
அரசின் நலத்திட்ட உதவி பெற, உங்களுக்கு வருமானச் சான்று தேவைப்படுகிறது என, வைத்துக்கொள்வோம். வருவாய்த்துறை அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் அளிக்கிறீர்கள். அங்குள்ள அதிகாரியோ, '2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்குவேன்' என்கிறார். அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். 'பணத்துடன் வருகிறேன்' என, பவ்யமாக கூறிவிட்டு வெளியேறிவிடுங்கள். லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எழுத்து பூர்வமான புகார் அளியுங்கள். புகாரை பெற்றதும், லஞ்ச ஒழிப்புத்துறையின், ஆரம்பகட்ட விசாரணை இரு விதமாக நடக்கும்.

புகார்தாரரின் கூற்றில் உண்மை உள்ளதா ? லஞ்சம் கேட்ட அதிகாரி எப்படிப்பட்டவர் ?
அதிகாரி மீது லஞ்ச புகார் அளிப்பவர், நேர்மையானவராக இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை (வருமானச் சான்று கோரி, வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த விவரங்கள்) சட்டப்படி நியாயமானதாக இருக்க வேண்டும். இது குறித்துதான், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்வர். புகாரில் கூறிய விவரங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியபின், லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்த விசாரணை ரகசியமாக நடக்கும். அவர் எப்படிப்பட்டவர், ஏற்கனவே புகார் உள்ளதா என, தகவல் திரட்டுவர். ஏனெனில், குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி, நேர்மையானவராகவும், கண்டிப்பானவராகவும் கூட இருக்கக்கூடும். அவரது பெயரைக்கூறி, புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.
எதிரிகள், பொய் புகார் அளித்து பழிவாங்கவும்கூடும். எனவே, ரகசிய விசாரணை நடத்தி, புகார் உண்மை என்பதை உறுதி செய்த பிறகே, அடுத்தகட்ட கைது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும்.

மன உறுதி பரிசோதிப்பு' 
புகார்தாரர் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை' என, உறுதி செய்யப்பட்டதும், அவரது மன உறுதி பரிசோதிக்கப்படும். புகார்தாரர் தாமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? வேறு யாரேனும் தூண்டிவிட்டதன் காரணமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாரா? என, பரிசோதிப்பர். ஏனெனில், லஞ்சம் கேட்ட அதிகாரியை, 'பொறி' வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மனுதாரரின் மன உறுதி மிக முக்கியமானது.
காரணம், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை துவக்கியபின், பாதிக்கட்டத்தில், புகார்தாரர் ஒத்துழைக்காமல் அச்சமடைந்து ஓடிவிடுவதும் உண்டு. இவ்வாறு பின்வாங்கிவிட்டால், லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கை தோற்றுவிடும். கைது நடவடிக்கையை துவக்கிய போலீஸ் அதிகாரி, துறைசார்ந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். எனவே, புகார்தாரர் மனஉறுதியுடன் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். அதன்பிறகே, லஞ்ச பேர்வழியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.

ஒத்திகை... கைது!
அரசு தரப்பு சாட்சிகள் அழைப்பு: லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அரசு தரப்பு சாட்சிகள் இருவர் கட்டாயம் இருக்க வேண்டும், என்கிறது சட்டம். அதனால், அரசு தரப்பு சாட்சிகள் இருவர் தயார் செய்யப்படுவர்.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்படவுள்ள அதிகாரி எந்த பதவியில், என்ன பணி நிலையில் உள்ளாரோ, அதற்கு நிகரான பதவியில் இருக்கும் அதிகாரிகள் இருவர், அரசு தரப்பு சாட்சிகளாக அழைக்கப்படுவர். உதாரணமாக, 'குரூப் -1' பதவி நிலை அதிகாரியை கைது செய்யும் திட்டமிட்டிருந்தால், அதே பதவி நிலையில் இருக்கும் அதிகாரிகள் இருவரை, வேறு துறைகளில் இருந்து அழைப்பர். கைது செய்யப்படப்போகும் நபர் சாதாரண ஊழியராக இருப்பின், அதற்கு நிகரான பணி நிலையில் இருக்கும் ஊழியரை அழைப்பர்.
அரசு தரப்பு சாட்சிகளாக செயல்படுமாறு, இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அழைக்க மாட்டார்கள். அழைக்கப்படும் சாட்சிகள், எந்த துறையில் பணியாற்றுகிறார்களோ, அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு கடிதம் அளிப்பர். அவர்தான், சாட்சியை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்.
இரு சாட்சிகள், வெவ்வேறு துறையை சார்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை, லஞ்ச வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ, அந்த துறையில் இருந்து, அரசு தரப்பு சாட்சிகளை அழைக்கமாட்டார்கள். அவ்வாறு அழைத்தால், கைது நடவடிக்கை திட்டம் கசிந்து தோல்வியடைந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஒத்திகை: 
லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வருகை தரும் இரு அரசு தரப்பு சாட்சிகளிடம், புகார்தாரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைப்பர். அப்போதுதான், எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை கைது செய்ய, தாம் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே, அந்த சாட்சிகளுக்கு தெரியும்.
அதன்பின், லஞ்ச அதிகாரியை கைது செய்வது தொடர்பான ஒத்திகை, லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நடத்தப்படும். லஞ்ச அதிகாரியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, புகார்தாரரும், அரசு தரப்பு சாட்சிகளும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என, காட்சி அமைப்புடன் கூடிய செயல் விளக்கம் அளிக்கப்படும். லஞ்ச ஒழிப்பு போலீசாரில் ஒருவர், லஞ்சம் கேட்ட அதிகாரியாக நடிப்பார். அரசு தரப்பு சாட்சிகள் தயார் நிலையில் இருப்பர். கைது செய்யப்போகும், போலீஸ் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் நடிப்பர். ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்ததாக, உண்மையான கைது நடவடிக்கைகள் துவங்கும்.

லஞ்ச பணம் தயாராகும்: 
அதிகாரிக்கு தரப்பட வேண்டிய லஞ்சப்பணம் தயாராகும். இத்தொகையை, புகார்தாரரே கொண்டுவர வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் 'சீரியல் எண்கள்' குறிப்பெடுக்கப்படும். அதன்பின், அவற்றின் மீது பினாப்தலின் எனும் ரசாயனம் தடவப்படும்.

நேரம் குறிக்கப்படும்: 
புகார்தாரர், தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை சந்திக்க எப்போது வரலாம்' என, கேட்டு, நேரம் குறிப்பார். லஞ்ச பணத்தை வாங்கி பையில் போடும் ஆவலில், அந்த அதிகாரியும் ஓர் நேரத்தை சொல்வார்.
ஆம், அந்த நேரமே, அவர் அந்த அலுவலகத்தில் கடைசியாக பணியாற்றப்போகும், கைதாகப்போகும் நேரம் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். காசு தான் கண்களை மறைக்கிறதே! இப்போது, புகார்தாரர், அதிகாரியை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை, புகார்தாரரின் சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்பி வைப்பர்.

சாட்சி உடன் செல்வார்: 
அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவர், புகார்தாரருடன் செல்வார். மற்றொரு சாட்சி, லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் செல்வார். லஞ்ச பணத்தை எடுத்துச் செல்லும் புகார்தாரர், தப்பித்தவறிக்கூட ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தொடமாட்டார்; தொடவும் கூடாது. குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குச்சென்று, தன்னிடமுள்ள லஞ்சப் பணத்தை அதிகாரியிடம் அளிப்பார். ஒருவேளை அந்த அதிகாரி உஷாராக இருந்து, 'உங்களுடன் வந்திருப்பது யார்' எனக் கேட்டால், 'இவரா சார், என் சித்தப்பா, மாமா...' என, ஏதாவது ஒரு உறவுமுறையை கூறி நம்ப வைப்பார்.
கைமாறியதும் சிக்னல்: புகார்தாரர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதை, உடன் வந்த அரசு தரப்பு சாட்சி நேரில் காண்பார். அதன்பின் இருவரும் வெளியே வருவர். தனக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி, புகார்தாரர் வெளியே வந்ததும், சாதாரண உடையில், சாமானியரைப் போன்று சற்று தொலைவில் மறைந்து நின்றிருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு 'சிக்னல்' தருவார். (தலைமுடியை மூன்று முறை தன்னிடம் உள்ள சீப்பால் வாருவார் அல்லது கைக்குட்டையை பாக்கெட்டில் இருந்து எடுத்து முகத்தை துடைப்பார் அல்லது, தனக்கு அளிக்கப்பட்ட வேறு ஏதாவது சமிக்ஞையை காண்பிப்பார்).

அதிரடியாக கைது:
 'இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தோம்' என்பதைப் போன்று, அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து லஞ்ச அதிகாரியை கைது செய்வர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.12.2015

Sunday, November 8, 2015

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை முகவரிகள்


லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை முகவரிகள்

HEADQUARTERS

The Director,                                     
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311049 (Direct)
044-22321090
044- 22321085 
044-22310989
044-22342142
Fax:044-22311080

The Joint Director,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311052 (Direct)
044-22321090
044-22321085
044-22310989
044-22342142
Fax: 044-

The Dy. Director,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311042 (Direct)
044-22321090
044-22321085 
044-22310989
044-22342142 

SPECIAL INVESTIGATION CELLS

The Inspector General of Police,
Special Investigation Cell,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,

Chennai – 600 016.

044-22321099 (Direct)
044-22321090
044-22321085
044-22310989
044-22342142

Fax:044-22321025

The Superintendent of Police, 
Special Investigation Cell,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311056 


The Addl. Superintendent of Police, 
Special Investigation Cell,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

The Deputy Superintendent of Police,
Special Investigation Cell,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22321095


The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.


CENTRAL RANGE


The Superintendent of Police,
Central Range,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22321045 (Direct)
044-22321090
044-22321085
044-22310989
044-22342142


Headquarters Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311135 (Direct)
044-22321090
044-22321085
044-22310989

044-22342142


The Deputy Superintendent of Police, 
Vigilance and Anti-Corruption, 
Headquarters, 
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311059 (Direct)
044-22321090
044-22321085
044-22310989

044-22342142

Chennai CSU - I Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
City Special Unit - I, Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.

044-24613020 (Direct)
044-24615929 

044-24615949
044-24615989

044-24954142


Chennai CSU - III Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Special Unit - III,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.

044-24326020

Chennai City - I Vigilance office:
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - I, Post Box No.487,
NCB 24, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.

044-24615929 
044-24615949
044-24615989 
044-24954142


Deputy Superintendent of Police - I

044-24954234 (Direct)


Chennai City - II Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - II,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035. 

044-24326050


Chennai City - III Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - III,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.

044-24326040

Chennai City - IV Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - IV,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035. 

044-24328010


Chennai City - V  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - V,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.

044-24326080


Kanchipuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Ragavendra Nagar,
Thiruparuthi kundram Road,
Kancheepuram – 631 501.
  


044-27237139

WESTERN RANGE

The Superintendent of Police, 
Western Range,
Vigilance and Anti-Corruption,
No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

044-22311036 (Direct)           
044-22321090/22321085
044-22310989/22342142

Coimbatore Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
 No.:4, Ramasamy nagar Extension,
Countanpalayam,
Coimbatore – 641 040.

0422-238647 (off),
0422-2222250 (Res)
0422-2447550
Cell : 94450-48882

Erode Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/2, Kamatchi Amman Koil Street,
Karungalpalayam,
Erode – 638 003. 

0424-2210898

Nilgiris Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Stone House Hill, Maduvana Junction,
Kothagiri Road
Nilgiris – 643 001.  

0423-2443962      


Salem Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B-3, Rajaji Street, Swarnapuri,
Near New Bus Stand.
Salem – 636 004.    

0427-2448735    


Namakkal Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/7-1, Thiruchengodu Main Road,
Near Post Office, 
Nallipalayam Post,  
Namakkal - 637 003.    

04286-281331  


Dharmapuri Vigilance office:
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No.11, Kamala lakshmi Colony,
Ramasamy Gounder Street,
Dharmapuri – 636 701. 

04342-260042  



Krishnagiri Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No. H-90,Tamilnadu Housing Board Phase-I,
Krishnagiri - 635 001.

04343- 292275   

Vellore Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 24, Neeli Godown Street,
(Near Mummy Hospital) 
Vellore – 632 001.  

0416-2220893    

Cuddalore Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 16, Pavazha Salai, Anna Nagar,
Near S.P office Back side
Cuddalore – 607 001 

04142-233816      

Villupuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 92A, Radhakrishnan Salai, VGP Nagar,
East Sala Medu,
Villuppuram - 605401

04146-259216   

Thiruvannamalai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1164, Main Road, Thendral Nagar,
Vengikkal, Thiruvannamalai.  

04175-232619   

Thirupur Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 45/1, Asha Nagar, 2nd Avenue,
40 Feet Road, Gandhi Nagar Post, 
Thirupur - 641603     

0421-2482816 

,
   SOUTHERN RANGE
The Superintendent of Police,
Southern Range,
Vigilance and Anti-Corruption, 

No. 293, MKN Road,
Alandur,
Chennai – 600 016.

Phone : 044-22311109 (Direct)                   
     044-22321090
     044-22321085
     044-22310989
     044-22342142

TIRUCHY  - Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Race Course Road, Opp to Anna Stadium,  
Thiruchirappalli – 620 023. 


0431-2420166 

ARIYALUR - Vigilence office :
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
3/922, C1Kayarlabath, Sasthri Nagar,
Kallankurichi Salai, 
Ariyalur.

04329-228442

PUDUKOTTAI - Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
SF No.6089/8, Alankulam Housing Unit,
(Near Collectorate)..
Pudukottai – 622 005.  
  

04322-222355   

THANJAVUR - Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Tamil University Campus Post,    
Thanjavur – 613 010.

04362-227100 

NAGAPATTINAM -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Suriya Nagar, Kadambadi,
Nagapattinam – 611 001.


04365-248460    

MADURAI - Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 165/G, Alagar Koil Main Road,
Madurai – 625 002.

Phone : 0452-2531395 

DINDUGAL - VIGILENCE OFFICE
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 576/4, EB Colony,
Chettinaykkanpatty,
Trichy By-pass Road,
Dindugul – 624 004.

0451-2461828

THENI -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# W-4-21, Block-8-106/1,
Chairman Rathinam Nagar East, 
Periyakulam Main Road,
Theni – 625 531.

04546-255477

SIVAGANGAI -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 3/391, Thirupathur Road,                
Sivagangai – 630 561.  

04575-240222   

RAMANATHAPURAM -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
D-Block, Rameswaram Main Road
Near Customs Office
Ramanathapuram – 623 503.  

04567-230036   

VIRUDHUNAGAR -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Kumarasamy Raja nagar,
Collectorate Campus,
Virudhunagar - 626002

04562-252678 

TIRUNELVELI -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No:16/53A/1, Marilamani Nagar,
Near Central Jail, Palayamkottai,
Tirunelveli – 627 002.

Phone : 0462-2580908 

 THOOTHUKUDI - Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 2/175, Palayamkottai Main Road
Maravan Madam,
Thoothukkudi – 628 101.
       

0461-2310243

KANYAKUMARI & NAGERKOIL -  Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
#210/1A, Lourdu Annai Salai,
SP Camp office Road,
Thalavaipuram,
Punnai Nagar, Koram Post,
Nagercoil - 629 004.

04652-227339

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன்படி விண்ணப்பிக்க:
*******************************************************************
பொது தகவல் அலுவலர்

Public Information Officer:
The Public Information Officer and Superintendent of Police,
Central Range,
No. 293, MKN Road,
Alandur,

Chennai – 600 016
மேல்முறையீட்டு அலுவலர்
Appellate Authority :
The Appellate Authority and Deputy Director,
No. 293, MKN Road,
Alandur,

Chennai – 600 016

லஞ்ச ஒழிப்புத் துறை இணையதள முகவரி www.dvac.tn.gov.in


Resource Links:

www.cbi.nic.in Central Bureau of Investigation and its fight against corruption.
www.cvc.nic.in Central Vigilance Commission provides articles on corruption, citizens guide to fight corruption, etc.
www.transparency.org Transparency International (TI) gives good articles on corruption / anticorruption along the TI Sourcebook
www.tnpolice.gov.in Official Website of Tamilnadu Police
ww.tn.gov.in Official Website of Tamilnadu Government.

லஞ்ச ஒழிப்புத்துறை இணையதளத்தைப் பார்த்து 25.06.2016 அன்று திருத்தம் செய்யப்பட்டது.