disalbe Right click

Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

Wednesday, January 31, 2018

காசோலையைப் பற்றி

காசோலை என்றால் என்ன?
காசோலை என்பதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காசோலை என்றால் என்ன? என்பதைத் தெரியாத பாமர மக்கள்கூட இன்று காசோலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களிடம் காசோலையை செக் என்று சொன்னால்தான்  அவர்களுக்குத் தெரியும். 
ஒரு வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கமாக அதே நேரத்தில் பாதுகாப்பாக பணத்தைச் செலுத்துவதற்கு, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படுவது காசோலை ஆகும். இன்றைய சூழலில் ஆன்லைன் மூலமாகவும், கிரடிட் கார்டு மூலமாகவும் பணப்பரிமாற்றம் நடந்து வந்தாலும் காசோலைகளின் பயன்பாடு குறையவில்லை. அந்த காசோலை பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
மாற்றத்தக்க ஆவணச் சட்டம் (Negotiable Instruments Act)
காசோலை பற்றி  மாற்றத்தக்க ஆவணச் சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.  காசோலையை பொறுத்த வரையில் அது  (1) (Drawer) காசோலை எழுதிக் கொடுப்பவர், (2) (Payee) காசோலையை பெற்றவர், (3)  (Drawee) காசோலைக்கு பணம் அளிப்பவர் என்ற மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டதாகும். மேற்கண்ட மூவருக்குமே இதில் முக்கிய பொறுப்புகள் உண்டு.
காசோலை அளிப்பவருக்குள்ள (Drawer) பொறுப்புகள் என்ன?
1 ஒருவருக்கு காசோலை அளிப்பதற்கு முன், வங்கியில் உள்ள தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
2. காசோலையில் நிரப்புகின்ற தொகை இருப்புத் தொகையைவிட குறைவாக இருக்க வேண்டும்.
3.  காசோலையில் தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
4. பணம் பெறுகின்றவரது பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர்,  ஊர் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும். 
5. தனி நபர் ஒருவருக்கு காசோலை மூலமாக பணம் அளிப்பதாக இருந்தால் அந்தக் காசோலையின் இடது பக்க மேல் மூலையில் மறக்காமல் குறுக்குக் கோடு (crossed cheque) இட வேண்டும்.
6. அளிக்க இருக்கின்ற தொகையினை அதற்குரிய இடத்தில் எண்ணாலும் எழுத்தாலும் எழுத வேண்டும்.
7. கண்டிப்பாக காசோலையில் மறக்காமல் கையெழுத்து இட வேண்டும். 
8. காசோலைகளின் எந்த இடத்திலும் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது.
9. காசோலைகளில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.
10. ஒரு காசோலையில் வேறு வேறு பேனாக்களின் மூலமாகவோ, வேறு வேறு வண்ண மைகளைக் கொண்டோ எழுதக்கூடாது.
11. நீங்கள் கொடுத்த காசோலை தொலைந்துவிட்ட தகவல் உங்களுக்கு கிடைத்தவுடன் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு எழுத்து மூலமாகவும் அறிவிக்க வேண்டும்.
காசோலை பெற்றவருக்குள்ள (Payee) பொறுப்புகள் என்ன?
1.  காசோலை பெற்றவுடன் அதனைப் பெற்ற நாள், அதனை வழங்கிய நபர், காசோலையின் எண், வங்கியின் பெயர்,  அதில் எழுதப்பட்டுள்ள தொகை ஆகியவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். 
2. பெற்ற காசோலையில் உள்ள தேதியை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தத் தேதிக்குப் பின்னரே அதனை அந்த வங்கியில் அளித்து தொகையைப் பெற முடியும்.
3. காசோலையில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் அதனை பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது செல்லாதது ஆகிவிடும்.
4. காசோலையின் பின்புறம் கையெழுத்து இட வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலையாக இருந்தால் அந்தக் காசோலையின் பின்புறத்தில் அந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணையும் எழுத வேண்டும். 
5. காசோலை அளிக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கணக்கு இல்லை என்றால், உங்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் அந்தக் காசோலையை செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நாட்கள் கழித்தே பணம் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேரும். 
6. பெற்ற காசோலை தொலைந்துவிட்டால், அதனை உடனடியாக காசோலை வழங்கியவருக்கும், வங்கிக்கும் தெரியப்படுத்த வேண்டும்
காசோலைக்கு பணம் அளிப்பவருக்குள்ள (Drawee) பொறுப்புகள் என்ன?  
1. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்குக் குறைவாக அதனை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இருந்தால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
2. பெறப்பட்ட காசோலை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
3. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
4. வங்கியின் நேரம் முடிந்த பிறகு கொடுக்கப்படுகின்ற காசோலைக்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
5. காசோலையில் அடித்தல், திருத்தல் இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
6. காசோலையினை வழங்கிய நபர் இறந்திருந்து அந்த செய்தி வங்கி ஊழியருக்கு தெரிந்திருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
7. காசோலையினை வழங்கிய நபர் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு அறிவித்து இருந்தாலும் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
8. காசோலையினை வழங்கிய நபர் கணக்கிலிருந்து யாருக்கும் பணம் அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தாலும், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
9. காசோலையினை வழங்கிய நபர் வங்கிக்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டியது இருந்தால், அந்த பற்றுத்தொகைக்கு மட்டுமே அவரது அக்கவுண்டில் பணம் இருந்தால்,  
அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
10. குறுக்குக் கோடு (crossed cheque) இடப்பட்ட காசோலையை கொண்டு வருபவருக்கு அந்த வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்றால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
11. கையெழுத்து இல்லாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.  
12. வேறு வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
13. முழுமையாக நிரப்பப்படாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
14. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மூன்று மாதங்களுக்கு முந்தியது என்றால்,   அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.02.2018 

Wednesday, November 22, 2017

பண பரிவர்த்தனை

யூபிஐ செயலியைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் 
National Payments Corporation of India  சுருக்கமாக (NPCI)  எனப்படும்   இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டு ஸ்தாபனம் கடந்த ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட  கொடுப்பனவு  இடைமுகம் (Unified Payment Interface - UPI) என்ற பணம் பரிமாற்ற சேவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
UPI செயலி என்றால் என்ன?
யூபிஐ என்பது செயலி என்பது வங்கி மூலமாக பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதியை நமக்கு தருகின்ற ஒரு செயலி ஆகும்
UPI செயலி பயன்கள் என்ன? 
இதன் மூலமாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி எளிதாக நாம் பண பரிமாற்றம் செய்யலாம். வங்கிக்கு செல்ல வேண்டியது இல்லை. வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. நேரம், காலம் பார்க்க வேண்டியதே இல்லை. 
வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் யூபிஐ செயலியின் வழியாக  தனது வங்கி கணக்கில் இருந்து பிற வணிகர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இருவழியாகவும் கிரெடிட் கார்டு விவரங்கள், IFSC குறியீடு, இணையதள வங்கி சேவை போன்று எதுவுமே இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய முடியும். 
எந்தெந்த வங்கிகளின் வாடிக்கையாளர் இதனை பயன்படுத்தும் வசதி உள்ளது? 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 
ஐசிஐசிஐ பாங்க்
ஹெச்டிஎஃப்சி
ஆந்திரா பேங்க்
ஆக்ஸிஸ் பேங்க்
பாங்க் ஆப் மஹாராஷ்டிரா
கனரா பேங்க்
கத்தோலிக் சிரியன் பேங்க்
டிசிபி
ஃபெடரல் பேங்க்
கர்நாடகா பேங்க்
பஞ்சாப் நேஷனல் பேங்க்
சவுத் இண்டியன் பேங்க்
யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியா
யுசிஓ பேங்க்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
விஜயா பேங்க்
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
டிஜேஎஸ்பி
ஐடிபிஐ பேங்க்
ஐடிஎஃப்சி
ஸ்டாண்டர்டு சார்ட்டெர்டு பேங்க்
அலகாபாத் பேங்க்
ஹெச் எஸ் பி சி
பேங்க் ஆப் பரோடா
கோடக் மகேந்திரா பேங்க்
இண்டஸ்ல்டு பேங்க் இந்த யூபிஐ செயலியை  பதிவிறக்கம் செய்வது எப்படி
மேற்கண்ட வங்கிகள் தங்களது யூபிஐ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளனயூபிஐ செயலியை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? 
 ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாா்ட்போன் வைத்திருக்க வேண்டும்
 பின்பு கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாா்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
 யூபிஐ செயலிக்கான பயனர் குறியீட்டை நீங்கள் உருவாக்க வேண்டும் 
அதன்பிறகு யூபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்
⧭  பின் எம்பின் எனப்படும் தனி அடையாளக் குறி (mean the Personal Identification Number) உருவாக்க வேண்டும்
 இப்போது யூபிஐ செயலியை பயன்படுத்தி நாம் பரிவர்த்தனை செய்யலாம்
யூபிஐ செயலி எவ்வளவு பாதுகாப்பானது
வாடிக்கையாளர் இமெயில் முகவரி போன்ற தங்கள் பயனர் குறியீட்டைத் தவிர வேறு எந்த முக்கிய தகவலையும் அளிக்காததால் இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறையே ஆகும்
யூபிஐ செயலிவழியாக எந்த மாதிரியான பரிவர்த்தனைகளை செய்யலாம்
வணிகர்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை நாம் இதன் மூலமாக செய்யலாம்
இந்த பரிவர்த்தனைக்கு தொகை வரம்பு ஏதேனும் உள்ளதா
நீங்கள் இந்த செயலி மூலமாக ஒரு பரிவர்த்தனை செய்யும் போது அதிகபட்சமாக 1 லட்சம் வரை செய்யலாம்
பண பரிவர்த்தனை செயல்படுவது எப்படி? 
ஏதேனும் பொருள் வாங்கும் போது அல்லது ஏதேனும் சேவையை நீங்கள் பெறும் போது, அந்த வணிகர்களின் பயனர் குறியீட்டை அவர்களிடமிருந்து பெற்று அதை உங்கள் யூபிஐ செயலியில் உள்ளிட்டு அதில் அவருக்கு செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும். பின்னர் பணத்தை செலுத்தவும் என்ற ஆப்சனைத் தேர்வு செய்து பரிவத்தனைக்கான எம்-பின் குறியீட்டை உள்ளிட்டு பணத்தை  மிகவும் எளிமையாக செலுத்தலாம்.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Friday, October 13, 2017

ஸ்டேட் பேங்க் கட்டுப்பாடுகள் தளர்வு

ஸ்டேட் பேங்க் கட்டுப்பாடுகள் தளர்வு
இனி பணம் எடுக்க கட்டணம்கட்டுப்பாடு இல்லைஎஸ்பிஐ
புதுடில்லி : வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த கட்டணம் மற்றும் பணம் எடுப்பதற்கான வரையறையை திரும்பப் பெறுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் இனி நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அளவும் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி உடனான ரூ.300, இனி ஜிஎஸ்டி உடன் ரூ.100 ஆக குறைக்கப்படும்.
பிரைடு மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான அளவு ரூ.1 லட்சமாகவும், ஆன்லைன் பணபரிவர்த்தனை அளவு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிளாடினம் டெபிட் உடனான ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் இனி தினமும் ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் இனி தங்களின் தவணை தொகையை கிரெடிட் கார்ட்கள் மூலமும் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செய்ய, செக் புக் வாங்குவதற்கு உள்ளிட்ட தேவைகளுக்கும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ குழுமத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்.,களில் கட்டணம் இன்றி பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருநாளைக்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனின் பொருட்கள் வாங்குவதற்கான அளவு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 13.10.2017