disalbe Right click

Thursday, April 20, 2017

மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புப் பதிவு


மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புப் பதிவு
10, 12ம் வகுப்பு மாணவர்கள்... பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுசெய்ய ஏற்பாடு!
சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிகளிலேயே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

15 நாட்கள் பதிவு
அது போலவே இந்த ஆண்டும் (2017) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 12ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படும் நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு பதிவு
2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு
மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2016) வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Posted by: Sivasankari

நன்றி : கேரியர் இந்தியா  »தமிழ் – 20.04.2017

Wednesday, April 19, 2017

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2


நீதிமன்றத்தில் தனது வழக்கில் தாமே வாதாட வேண்டும் என்று எண்ணுவோரின் கவனத்திற்கு....

துணிவே துணை
உங்களை வரவேற்க யாரும் அங்கு கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். குற்றம் கண்டு பிடிக்கவும், மட்டம் தட்டவும், வந்த வழியே திருப்பி அனுப்பவும், மாற்று வழி கூறவும் பலர் இருப்பார்கள்.

இவர்களை எல்லாம் தாண்டிதான் நீங்கள் வழக்கை தாக்கல் செய்து வாதாடி வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு மன தைரியம் என்பது அதிகமாக இருக்க வேண்டும்.

முதன் முதலாகப் போகப் போகிறீர்களா?
நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யும் பொழுதுதான் முதன் முதலாக போகப் போகிறீர்களா? அது மிகவும் தவறான செயலாகும். இரண்டு கண்ணையும் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். யாரை பார்க்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று மனக்குழப்பம் உண்டாகும்.

அதனால், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் வழக்கு தாக்கல் செய்யப்போகின்ற நீதிமன்றத்திற்கு சில நாட்கள் சென்று அங்கு நடக்கும் செயல்களை நேரில் உற்று கவனியுங்கள். உங்களது மனதில் இருக்கின்ற பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். மனதில் இருக்கின்ற தயக்கத்தையும் அகற்றும். உங்களுக்கு மிகுந்த தைரியத்தை அது கொடுக்கும்.

இந்திய தண்டணைச் சட்டம்
இந்தப் புத்தகம் தமிழில் கிடைக்கிறது. இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் I.P.C. என்பார்கள். அல்லது இ.பி.கோ (இந்தியன் பீனல் கோடு) என்பார்கள். இதனை வாங்கி படியுங்கள். எந்த குற்றத்திற்கு எந்த செக்‌ஷன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். யார் எந்தக் குற்றம் செய்தாலும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் தண்டணை வழங்கப்படும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம்
இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் Cr.P.C. என்பார்கள். இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கின்றது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றமும், காவல்துறையும் இயங்குகின்றது. இதனையும் வாங்கி படியுங்கள். உங்களது சந்தேகங்கள் பெருமளவு தீரும். தானாகவே தைரியம் வரும்.

இந்திய சாட்சியச் சட்டம்
இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கிறது. ஒரு வழக்கை நடத்துவதற்கு சாட்சியும், ஆவணங்களுமே பெரிதும் துணை புரிகின்றது. ஆகவே, இந்த புத்தகத்தையும் வாங்கி கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழைய வழக்குகள்
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வழக்கு நடத்தியிருப்பார்கள். அதன் நகல்களைக் கேட்டு வாங்கி அதில் எப்படி வார்த்தைகள், வாக்கியங்கள் கையாளப் பட்டிருக்கி்ன்றது? என்பதை கவனித்துப் படியுங்கள். அதற்குப் பின்னர் உங்கள் வழக்குகளை எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி சிந்தியுங்கள். ஒரு வெள்ளைத் தாளில் எழுதிப் பாருங்கள்.

கை காட்டி மரம்
நாங்கள் அனைவருமே ஒரு கை காட்டி மரத்தைப் போலத்தான். உங்களுக்கு வழி காட்டுவோமே தவிர வழக்காடுவதற்கு கூடவர இயலாது. எங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை உங்களுக்காக எந்தவித பிரதிபலனின்றி பயன்படுத்தி வருகிறோம். அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கித்தான்! என்பதை மனதார நம்புங்கள். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்! என்று அடிக்கடி வாய்விட்டுச் சொல்லுங்கள்.

வாழ்த்துக்கள், வெற்றி நிச்சயம்!
தொடரும்

அன்புடன் செல்வம் பழனிச்சாமி


ஆன்லைன் மூலமாக SBI அக்கவுண்ட் தொடங்க


ஆன்லைன் மூலமாக SBI அக்கவுண்ட் தொடங்க.....

ஆன்லைன்-ல் மிக எளிமையாக எஸ்பிஐ கணக்கு தொடங்குவது எப்படி?


தற்போது இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எஸ்பிஐ-ல் கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது, காரணம் அனைத்து இந்திய அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் அரசின் சலுகைகள், கடன்பெற வசதி போன்ற மிக அதிகமான முக்கிய அம்சங்கள் இவற்றில் இடம்பெருகிறது. தற்போது உலகம் நவீனமையம் அனதால் எளிமையாக வீட்டில் இருந்துகொண்டே மக்கள் ஆன்லைன்-ல் மிக எளிமையாக கணக்கு தொடரலாம்.பின்பு வங்கி சென்று காத்திருக்கும் அவசியம் தற்போது இல்லை.

எஸ்பிஐ: எஸ்பிஐ பொருத்தமாட்டில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகப்படியான கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் அதிகப்படியான மக்கள் இதில் கணக்குகள் தொடங்கவுள்ளனர், காரணம் இதன் சேவைப்பிரிவு மிக எளிமையாக இருக்கும்.

எஸ்பிஐ-ல் ஆன்லைன் பங்கு: எஸ்பிஐ பொருத்தவரை தற்போது ஆன்லைன்தான் அனைத்து செயல்படுகளும் மிக எளிமையாக செயல்படும் வண்ணம் உள்ளது. மேலும் இரவு பகல் எந்தநேரத்திலும் வங்கிக் கணக்குகள் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவை.

எஸ்பிஐ கணக்கு: எஸ்பிஐ கணக்குகள் தொடர பல்வேறு ஆதாரங்கள் தேவை. மேலும் குறிப்பிட்ட தேதியில் எஸ்பிஐ வங்கிக்கணக்கு தொடங்கினால் அன்றே கணக்கு செயல்படும் வசதி செய்து தரப்படுகிறது தற்போது.

ஆன்லைன்-ல் கணக்கு தொடங்குவது எப்படி



ஆன்லைன்-ல் கணக்கு தொடங்குவது எப்படி?

*முதலில் ஆன்லைன்-ல் எஸ்பிஐ  www.onlinesbi.com  சேவைப்பாட்டிற்கு நுழையவேண்டும் 

*பின்பு ஆன்லைன்-ல் எஸ்பிஐ கணக்கு தொடர உங்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

*மேலும் கணக்கு தொடர ஆதார்அட்டை, வாக்காளர்அட்டை, குடும்பஅட்டை போன்றவை மிகவும் அவசியம் 

*பின்பு ஆன்லைன் உங்கள் விவரங்களைப் முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்

 *மேலும் உங்களது தெளிவான புகைப்படத்தை அதில் பதிவு செய்யவேண்டும் 

*உங்களிடம் தற்போது உள்ள அழைப்பேசி எண் தெளிவாக கொடுக்கவேண்டும் 

*மேலும் ஏடிஎம் அட்டைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்திசெய்ய வேண்டும்

 *அதன்பின் அந்தப்படிவங்களை ஒரு நகல் (ப்ரிண்ட்) எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்பு படிவங்களை பூர்த்திசெய்து அனுப்பிய பிறகு டிசிஆர்என் - அதாவது தற்காலிக வடிக்கையாளர் குறிப்பு எண் உங்கள் மொபைலுக்கு அனுப்பபடும் 

*பின்பு உங்கள் வங்கிகணக்கு எளிமையாக தொடங்கப்படும்.  

Written By: Prakash 

நன்றி : கிஸ்பாட் » News » 19.04.2017


தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

நாமாகவே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் நாமே வாதாட வேண்டும்! என்ற உங்களது தைரியத்திற்கு முதலில் எனது பாராட்டுக்கள். நம்மைவிட நமது வழக்கைப் பற்றி யாருக்கு நன்றாகத் தெரியும்? இப்படிச் செய்வதனால், எந்த ஒரு வழக்கும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். வாய்தாக்கள் வாங்க வேண்டியதில்லை. வழக்குகளும் நீதிமன்றத்தில் தேங்க வேண்டியதில்லை. நமது நோக்கத்தை  வேறு எவரும் சிதைக்க முடியாது.  

இது போன்று நான் முயற்சி செய்யும் போது சில தவறுகள் செய்திருந்தேன். நீதிபதியால் தவறுகள் குறிப்பிடப்பட்டு எனது மனு என்னிடமே திருப்பி அளிக்கப்பட்டது. தவறுகளை திருத்தி மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பிக்கலாம் என்று, வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், நமது நேரம் அதனால் வீணாவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும், நமது வழக்கின் போக்கு, திசை மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவறு எதுவும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். 

நேரடியாக தன்னிடம் வருபவர்களை (சில வழக்குகள் தவிர) நீதிமன்றம் விரும்புவதில்லை. துறை ரீதியாக கீழிருந்து மேல் வரைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை முதலில் அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.  அவ்வாறு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.  

காவல்துறை சம்பந்தப்பட்ட புகாராக இருந்தால், முதலில் நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய காவல்நிலையத்தில் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். நேரடியாக எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்காதீர்கள். புகார் அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய “புகார் மனு ஏற்புச் சான்றிதழ்” கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை காவல்நிலையத்தில் அதனை தர மறுத்தால், ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி அதற்குரிய  ஆதாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீதிமன்றத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இது இல்லை என்றால் தங்கள் மனு திருப்பி அளிக்கப்படும்.  

உள்ளூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன்பிறகு நீங்கள் எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.  

அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள்  காவல் துறை துணைத்தலைவர் (DIG) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 

மேற்கண்டவாறு செய்தும் நடவடிக்கை இல்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகலாம். ஆதாரங்கள் மிகமிக அவசியம்.

நாம் அதிகமாக அணுகுகின்ற துறை என்பதால் மேலே காவல்துறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  மற்ற துறைகளுக்கும் இந்த நடைமுறையையே பின்பற்றி அந்தந்த துறை அதிகாரி மற்றும் மேலதிகாரிகளை அணுகுங்கள்.  

தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Tuesday, April 18, 2017

அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்


அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்

புருவம் மெலிதாக இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் எடுபடாது. அடர்த்தியான புருவமும் இமையும் சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஏதோ ஒரு நாள் செய்து இன்னொரு நாள் செய்யாவிட்டால் எதுவுமே பலனளிக்காது. தொடர்த்து செய்யும்போது மட்டுமே எதுவும் பலன் தரும். ஆகவே விடாமல் செய்து பாருங்கள் மிக விரைவில் உங்கள் புருவம் அடர்த்தியாக மாறும்.
பால் :
மிக எளிதில் கிடைக்கக் கூடியது. ஒரு பஞ்சினால் பாலில் நனைத்து புருவத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாலிலுள்ள வே புரோட்டின்மற்றும் கேசின் புருவ வளர்ச்சியை தூண்டும்.
கற்றாழை :
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் த்டவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். கற்றாழையிலிள்ள அலோனின் என்ற பொருள் கெரட்டின் போன்றது. முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
பெட்ரோலியம் ஜெல்லி :
பெட்ரோலியம் ஜெல்லியை தினமும் இரௌ தூங்குவதற்கு புருவத்தின் மீது தடவி வர வேண்டும். இதிலுள்ள ஈரத்தன்மை புருவத்திற்கு தகுந்த ஈரப்பசையை அளித்து முடி உதிராமல் காக்கும். அடர்த்தியான புருவம் வரும் வர உபயோகப்படுத்துங்கள்.
முட்டை மஞ்சள் கரு :
முட்டையிலுள்ள மஞ்சள் கருவை நன்றாக அடித்து க்ரீம் போல் செய்து கொள்ளுங்கள். ஒரு பிரஷினால் அதனை புருவத்தின் மீது தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். மஞ்சள் கருவில் பையோடின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான கெரோட்டின் உற்பத்திக்கு உதவுகிறது.
வெங்காய சாறு :
வெங்காய சாற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் புருவத்தில் தடவி வாருங்கள். வெங்காயத்தில் சல்ஃபர்”, “செலினியம்அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் அளிக்கும். இதனால் உதிராத பலமான புருவம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணயை தினமும் கண்ணிமை மற்றும் புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் அடர்த்தியான புருவம் கிடைக்கும். இது பழமையான குறிப்பாக இருந்தாலும் மிகவும் நல்ல பலனளிக்கக் கூடியது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 12.04.2017 

கான்டாக்ட் லென்ஸ் - சந்தேகங்கள், பதில்கள்


கான்டாக்ட் லென்ஸ் - சந்தேகங்கள், பதில்கள்
பார்வை தெளிவாக இருக்க வேண்டும்; ஆனால், மூக்கு கண்ணாடி வேண்டாம், லேஸர் சிகிச்சையும் வேண்டாம்என்று நினைப்பவர்களுக்கான சரியான தேர்வு கான்டாக்ட் லென்ஸ். கான்டாக்ட் லென்ஸ் யார் அணியலாம், எந்த நேரங்களில் அணியலாம் என்பது உள்பட எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார் கண்சிகிச்சை மருத்துவர் அமர் அகர்வால்.
யார் அணியலாம்?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மங்கலான பார்வை மற்றும் அருகில் உள்ள பொருட்களை சிரமத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து பார்வை குறைபாடுகளையும் சரிசெய்ய கான்டாக்ட் லென்ஸ் அணியலாம்.
கான்டாக்ட் லென்ஸில் எத்தனை வகைகள் உள்ளன?
கான்டாக் லென்ஸ் அணிய முடிவு செய்தவர்களின் முதல் தேர்வாக இருக்கும் சாஃப்ட் கான்டாக்ட் லென்ஸ்களை(Soft Contact lens) நாள், வாரம், மாதம் என்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக்கொள்ளலாம். மங்கலான பார்வை உள்ளவர்களுக்கு ஏற்றது நீண்ட காலம் உழைக்கக்கூடிய கேஸ் பெர்மிபல் லென்ஸ்(Gas permeable lens). இதேபோல், கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் கலர் கான்டாக்ட் லென்ஸ்களும் இருக்கின்றன.
கான்டாக்ட் லென்ஸில் வடிவங்கள் இருக்கின்றனவா?

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை உள்ளவர்களுக்கு உருண்டை வடிவ லென்ஸ்கள் உள்ளன. மங்கலான பார்வையை சரிப்படுத்தக்கூடிய டோரிக் லென்ஸ்கள் மற்றும் முதுமையின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுபவர்கள் அணியக்கூடிய மல்ட்டி போகல்லென்ஸ்களும் இருக்கின்றன.
எந்த நேரங்களில் அணியலாம்?
தினந்தோறும் அணியும் லென்ஸ்களை ஒவ்வொரு நாள் இரவிலும் கழற்றி வைத்துக் கொள்ளவேண்டும். நீடித்த நாட்களுக்கு லென்ஸ்களை அணிவோர் எத்தனை இரவுகள் லென்ஸ்களை அணிந்து தூங்கலாம் என்பதை கண்சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை பெற்று அணியலாம்.
கான்டாக் லென்ஸ் அணிவதால் தொற்று ஏற்படும் என்கிறார்களே
கான்டாக்ட் லென்ஸ் இன்றைய இளைஞர்களுக்கு சரியான தேர்வாக இருந்தாலும், சரியாகப் பராமரிக்காவிட்டால் கண் தொற்று வருவதோடு விழிப்படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பும் கூட நேரிடலாம். லென்ஸ் அணிந்துகொண்டே தூங்குவது, அடிக்கடி லென்ஸ்களில் கை வைப்பது, கான்டாக்ட் லென்ஸ் சொல்யூஷனை மீண்டும் பயன்படுத்துவது உள்ளிட்ட சுகாதாரமற்ற செயல்களால் கண்களில் இருந்து நீர் வழிதல், சிவப்பு நிறமாக மாறுவது, தெளிவற்ற பார்வை போன்றவை தொற்றினால் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாகவே கான்டாக்ட் லென்ஸைக் கையாள வேண்டும்.

கண்தொற்றை தவிர்க்க என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்?
ஒவ்வொரு முறை லென்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  லென்ஸ் வைக்கும் பாக்ஸை சுத்தமான துணியால் துடைத்து காய வைக்க வேண்டும். இந்த பாக்ஸை 3 மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை அணிவதற்கு முன்பும் லென்ஸில் ஏதேனும் சேதமுற்றுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.பெண்கள் மேக்கப் போட்டுக் கொள்வதற்கு முன்பே லென்ஸை அணிந்து கொள்ள வேண்டும். லென்ஸ் அணிந்து கொண்டு கணினி மற்றும் மடிக்கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும்.
செய்யக்கூடாதது என்ன?
கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் மற்றும் அதை வைக்கும் பாக்ஸை அதற்கென்றே இருக்கும் திரவத்தால் கழுவ வேண்டும். குழாய்த்தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடாது. தரையில் அல்லது வேறு எங்கேனும் கீழே விழுந்தால் அதனை சுத்தப்படுத்தாமல் அணியக்கூடாது. அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த லென்ஸ் அணிவதையும், நீச்சல் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கும்போதும் லென்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.கண் சிகிச்சை மருத்துவரின் அனுமதியின்றி கடைகளில் வாங்கும் சொட்டு மருந்துகளை கண்களுக்கு போட்டுக் கொள்ளக்கூடாது. லென்ஸ் அணிந்திருக்கும்போது வெப்பம் கண்களை நேரடியாக தாக்கும்படி நிற்பதும் தவறான செயல்.
உஷா நாராயணன்
 நன்றி : டாக்டர் குங்குமம் - 01.03.2017 

Monday, April 17, 2017

ஆதார் அட்டைகளில் திருத்தம்

ஆதார் அட்டைகளில் திருத்தம் 

இன்று முதல் 303 நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி தொடக்கம்!

 தங்களது ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள், திங்களன்று செயல்பட உள்ள 303 நிலையான மையங்களில் தங்களுக்குத் தேவையான திருத்தங்களை செய்து கொள்ள அணுகலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

புதிதாக ஆதார் அட்டைகள் பதிவு செய்து கொள்பவர்கள் மற்றும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டை விரல் ரேகை பதிவு செய்ய எந்த விதக் கட்டணமும் இல்லை. ஆனால் ஆதார் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும். 

யாரெல்லாம் தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

கட்டை விரல் ரேகை, கண் விழித்திரை ரேகை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மாற்ற விரும்புபவர்கள் ரூ.15 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டைகளை பிரிண்ட் எடுக்க வேண்டுமெனில் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
இது குறித்து மேலதிக விவரங்கள் பெற 1800 425 2911 எனும் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 17.04.2017 

Saturday, April 15, 2017

தமிழக அமைச்சர்கள் மூவர் மீது வழக்கு!


தமிழக அமைச்சர்கள் மூவர் மீது வழக்கு!

3 தமிழக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு
தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் மூவர் உள்பட ஐந்து பேர் மீது சென்னைக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அத்துமீறிநுழைதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் மூவர் உள்பட ஐந்து பேர் மீது சென்னைக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த மாதம் ஏழாம் தேதியன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது சோதனை நடத்தப்பட்ட அவரது வீட்டிற்குள் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டார் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.

மேலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது விஜயபாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார், சில ஆவணங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவுக்கு வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் முரளி கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜய பாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார் ஆகியோர் மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 183, 186, 189, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை இந்த வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

நன்றி : BBC- தமிழ் -14.04.2017

நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு
ஜூபிட்டர் ஸ்கூட்டரை திரும்பப்பெற அகமதாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாங்கிய பொருட்கள் தரமற்று இருந்தால், அதற்காக சட்டரீதியான அனுகுமுறைகளை பற்றி தெரியாமல் இருந்தது எல்லாம் தற்போது மலையேறி விட்டது. அதற்கான எடுத்துக்காட்டான ஒரு சம்பவம் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது.
நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு
ஊடகங்களில் தெரிவித்தது போன்ற மைலேஜ் கிடைக்கவில்லை என்பதால் டி.வி.எஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டரை சரிசெய்து கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என அகமதாபாத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
குன்வென்ட் மெகத்தா என்பவர் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராஜ்காட் பகுதி டீலரிடம் ரூ.52,150 விலையில் ஜுபிட்டர் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.
லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அப்பொது அவரிடம் ஜுபிட்டர் ஸ்கூட்டர் விற்கப்பட்டுள்ளது. குன்வென்ட் மெகத்தா ஸ்கூட்டரை பயன்படுத்த தொடங்கிய பின்னர், விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் கிடைக்க பெறவில்லை. இதற்காக அவர் சர்வீஸ் மையங்களில் சோதனை செய்தும் பார்த்தார்,
தொடர்ந்து அவர் எதிர்பார்த்த மைலேஜ் வராத காரணத்தால் மெகத்தா ராஜ்காட் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். இவரது வழக்கை ஏற்று விசாரித்த ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் கிடைக்கபெறும் வகையில் ஸ்கூட்டரை பழுது பார்த்து தரவேண்டும் அல்லது ஜுபிட்டர் ஸ்கூட்டரின் விலையான ரூ. 52,150 தொகையுடன் சேர்த்து 9 சதவீத வட்டியை குன்வென்ட் மெகத்தாவிற்கு கூடுதலாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர் குன்வென்ட் மெகத்தா தொடர்ந்து வழக்கிற்கு டி.வி.எஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், மெக்தா வாங்கிய ஜுபிட்டர் ஸ்கூட்டரில் மே 2015ம் ஆண்டு மைலேஜ் லிட்டருக்கு 43 கி.மீ வந்ததாகவும், பிறகு செப்டம்பர் 2015ல் மைலேஜ் லிட்டருக்கு 55 கி.மீ கிடைத்ததகவும், 2017 மார்ச்சில் ஜுபிட்டர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 65.51 கிமீ மைலேஜ் வழங்கியதாகவும் டி.வி.எஸ் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுயிருந்தது.
இதனை திட்டவட்டமாக மறுத்த வாடிக்கையாளர் மெகத்தா , அவர் வாங்கிய டி.வி.எஸ் ஜுபிட்டர் ஸ்கூட்டரின் மைலேஜ் சாரசரியாக 45 கிமீ மட்டுமே வந்ததாக நீதிமன்றத்தில் பதில் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் நாடு முழுவதும் வழங்கப்பட்ட 6 தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து இந்த வழக்கில் ராஜ்காட் நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
அதாவது, ஜுபிட்டர் ஸ்கூட்டருக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் பெற்றுத்தரும் வகையில் வாகனத்தை பழுது பார்த்து தரவேண்டும், அல்லது வாடிக்கையாளர் வாங்கிய விலையை திருப்பி தர வேண்டும் என அதிரடி தீர்ப்பை ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் வழங்கியுள்ளது.
*********************************************************டிரைவ் ஸ்பார்க்14.04.2017