disalbe Right click

Wednesday, May 31, 2017

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் நெருப்பு, ஆள்காட்டி விரல் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் நிலம், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை:
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வர்.
Image result for தியான முத்திரை:
இதே நிலையில் இருபது நிமிடம் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, பதற்றம் ஆகியவை அகலும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை:
Image result for தியான முத்திரை:
மூட்டுவலி, ரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்து கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி, தியான நிலையில் அமரவும்.
காது நன்கு கேட்க:
காதில் வலி எனில், நாற்பது நிமிடங்கள் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி, அழுத்திக் கொண்டு உட்காரவும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை: மனப்பதற்றம், உடலும் உள்ளமும் சோர்ந்து போவதை தடுக்க, நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்கவும் பிருதிவி முத்திரை பயன்படும்.
Image result for தியான முத்திரை:
மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்தால், தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன் இம்முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான நாளாக அமையும்.
ரத்தம் சுத்தமாக வருண் முத்திரை:
ரத்தம் சுத்தமாக, தோல் நோய்கள், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
Image result for லிங் முத்திரை:
வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றல் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாக்கும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை:
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும்.
Image result for தியான முத்திரை:
மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
பிராண முத்திரை:
உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும்.
Image result for தியான முத்திரை:
சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல், மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை:
2 உள்ளங்கைகளையும் விரல்களையும் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக்கை பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும்.
Image result for லிங் முத்திரை:
பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.05.2017

Tuesday, May 30, 2017

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.
பசுமை தகனம்
அறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.
தீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.
பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.
சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை
அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.
மரணம், அடக்கம்
சவப்பெட்டிக்கான செலவு சில சமயம் மலைக்க வைக்கும்
அப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.
சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.
முற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?
ரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.
கரைத்து கரையேற்றும் முறை
இதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.
மரணம், அடக்கம்
இரசாயனக் கரைப்புக்காக எடுத்த்துச் செல்லப்படும் உடல்
உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.
மரணம், அடக்கம்
முதல் நிலையில் உடல் இயந்திரத்தினுள் செலுத்தப்படும்
பின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.
அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.
மரணம், அடக்கம்
இரண்டாவது நிலையில் நீருடன் இரசாயனம் கலக்கப்படுகிறது
மிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.
விரைவாக உருக்குலையும்
புதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.
மரணம், அடக்கம்
மூன்றாவது நிலையில், இரசாயனக் கலவை சூடாக்கப்படுகிறது
ஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.
மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.
சிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.
மரணம், அடக்கம்
நான்கவது நிலையில், உடலின் தசைப்பகுதிகள் கரைந்து போயிருக்கும்
வடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.
வெள்ளை சாம்பல்
மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்சியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.
மரணம், அடக்கம்
கடைசியாக பையில் அள்ளப்படும் சாம்பல்
மரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.
இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இடப்பிரச்சினை
சரி இதனால் என்ன பலன்? முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.
மரணம், அடக்கம்
பல இடங்களில் சடலங்களை ஒன்றின் மேல் அல்லது கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது
இதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.
புதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செலவு?
இரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
Thanks to : BBC News - 28.05.2017


மனைகள் வரன்முறை - நடைமுறைகள் அறிவிப்பு

மனைகள் வரன்முறை  - நடைமுறைகள் அறிவிப்பு
மனைகள் வரன்முறைக்கு நவ., 3 வரை அரசு கெடு
பரிசீலனை நடைமுறைகள் அறிவிப்பு
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு, நவம்பர், 3க்குள் மனைப்பிரிவு உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2016 அக்., 20க்குள் விற்கப்பட்ட அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு களுக்கான வரன்முறை திட்டத்தை, மே, 4ல், அரசு அறிவித்தது. மனைகளின் தகுதி, கட்டணம், நிபந்தனைகள் உள்ளிட்ட விபரங்களும் அறிவிக்கப் பட்டன.
நடைமுறை என்ன?
இத்திட்டத்துக்கு, உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதற்கான செயல் திட்டம் உருவாக்கும் முயற்சியில், கலெக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். உள்ளாட்சிகள் வாரியாக, மனை குறித்த விபரங்களை திரட்டி வருகின்றனர்.
வரன்முறை திட்டத்தில், விண்ணப்பங்களை, ஆன் - லைன் முறையில் பதிவு செய்ய, புதிய இணையதளம்உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் பெயர், முகவரி, இ - மெயில் மற்றும் மெபைல் எண் அளித்து, நுழைவு குறியீட்டு எண், ரகசிய குறியீடு ஆகியவற்றை பெறலாம்.
பரப்பளவு அடிப்படையில் வரன்முறை,
இதை பயன்படுத்தி, மனைகளின் விபரங்களையும், ஆவணங்களின் பிரதிகளையும் பதிவேற்றலாம். இதை, அதிகாரிகள் பரிசீலிப்பதற்கான, விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு
உள்ளன. இதன்படி, விண்ணப்பிப்போரிடம், ஆய்வு கட்டணமாக, 500 ரூபாய் வசூலிக்கப்படும்.
அந்த மனை வரன்முறைக்கு தகுதி பெற்றால், பரப்பளவு அடிப்படையில் வரன்முறை, வளர்ச்சி கட்டணங்கள் முடிவு செய்யப்படும். முதல் நிலை ஆய்வில், அதிகாரிகள் தெரிவிக்கும் திருத்தங்களை, விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டும்.
தகுதியின்றி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தகவல் தெரிவிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள், மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.கெடுஇத்திட்டத்தில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் அனைவரும், நவ., 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.
'விண்ணப்பிக்காத மனைகள் மீது, நகரமைப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதோடு, விற்பனை பதிவும் தடை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 30.05.2017
Image may contain: text


தினமலர் நாளிதழ் - 23.06.2017 - மதுரை பதிப்பு - பக்கம் 19


Monday, May 29, 2017

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய
ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல்
முதல்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியது தமிழக அரசு
6 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்து களை கையகப்படுத்தும் நடவடிக் கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-96ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 4 பேருக்கும் தலா 4 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலி தாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்த மான 68 சொத்துகளை கைப்பற்று மாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. மாநில அரசின் உத்தர வின்படி இந்த சொத்துகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (டிவிஏசி) கடிதம் எழுதியுள்ளது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியிருக்கிறது. இந்த 68 சொத்துகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கண்காணிப்பு இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
நிலம், வீடு உள்ளிட்ட இந்த சொத்துகளை அடையாளம் கண்ட பிறகு மாவட்ட வருவாய் அதிகாரிகள் அந்தந்த இடங்களில், ‘இது தமிழக அரசுக்கு சொந்த மானது’ என்று அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப் பற்றப்பட்ட இந்த சொத்துகள் தொடர்பாக எந்தவித பரிமாற்றத் தையும் அனுமதிக்கக் கூடாது என்று பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும்.
அபராதத்துக்கு ஈடு அல்ல
இந்த சொத்துகள், சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் செலுத்த வேண்டிய ரொக்க அபராதத்துக் கான ஈடு அல்ல. இந்த வழக்கில் மொத்தம் 128 சொத்துகள் கையகப் படுத்தப்பட்டாலும், விசாரணை நீதிமன்றம் அவற்றில் 68-ஐ மட்டும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் இந்த சொத்துகள் உள்ளன. இவற்றின் கொள்முதல் விலை, 20 ஆண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டு மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் இன்றைய சந்தைய மதிப்புக்கு மிகமிகக் குறைவானதாகும். இனி இந்த சொத்துகளுக்கு தமிழக அரசுதான் உரிமையாளர். தமிழக அரசு விரும்பினால் இந்த சொத்துகளைத் தன்னுடைய பயன் பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் பொது ஏலத்தில் விற்று பணமாக்கிக் கொள்ளலாம்.
1991 ஜூலை 1-ம் தேதியில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இருந்த சொத்துகள் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு ரூ.2.01 கோடிதான் என்று சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. ‘1991 ஜூலை 1-க்குப் பிறகு (1.7.1991 முதல் 30.4.1996 வரை) இவர்கள் இருவரின் சொத்துகளின் மதிப்பு மளமளவென்று உயர்ந்து கொண்டே போனது. ஜெயலலிதா (அரசிடம் ஊதியம் பெற்றதால் அரசு ஊழியர்) மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் ரூ.66.65 கோடிக்கு சொத்துகளைக் குவித்தனர். அவர்களுடைய அறிவிக்கப்பட்ட வருவாய்க்கு இது பொருந்தாத சொத்துக் குவிப்பாகும்’ என்பது தான் அரசுத் தரப்பின் வாதம்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வருவாய்க்கு பொருந்தாத வகையில் குவிக்கப்பட்ட சொத்தின் அளவு ரூ.53.60 கோடி என்று நிர்ணயித்தது. அதன் அடிப்படை யில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயல லிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் என்று தீர்ப்பு வழங்கியது.
குன்ஹா தீர்ப்பு செல்லும்
தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர ரொக்கக் கையிருப்பு ஆகிய அனைத்தையும் அரசுக்கு வழங்குமாறும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்துக்கு அவற்றை ஈடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அப்படி செய்த பிறகும் அபராதத் தொகை முழுதாக வசூலாகவில்லை என்றால் கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகளை ரிசர்வ் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கு விற்றோ அல்லது பொது ஏலத்தில் விற்றோ பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். மீதமுள்ள தங்க, வைர நகைகளை தமிழக அரசு கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.
6 நிறுவனங்கள்
வங்கிகளில் இருக்கும் ரொக் கத்தை பறிமுதல் செய்வதிலும் தங்க, வைர நகைகளை விற்பதி லும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்ககத்துக்கு பங்கு எதுவும் கிடையாது. வழக்கில் தொடர் புள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் (பி) லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அசையாச் சொத்துகள் அனைத்தையும் மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஆணையின் மூன்றாவது பகுதி கூறுகிறது.
இந்த 6 நிறுவனங்களுக்கான வருவாய் முழுவதும் குறிப்பிட்ட அந்தக் காலத்தில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரிலான நிறுவனங்களுக்கு வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் தங்களுடைய பணம் எதையும் முதலீடு செய்யவில்லை என்பது விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கணக்கில் வராத பெருந் தொகையை ஜெயலலிதா, சசிகலா வங்கிக் கணக்குகளில் மாற்றுவதற்கு பயன்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் உண்மையில் வழக்கில் முதல் எதிரியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவருக்காக (ஜெயலலிதா) உள்ளவை என்பதை விசாரணைகள் அடிப்படையில் பதிவு செய்கிறேன். எனவே, இந்த சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று விசாரணை நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா பெயரில் உள்ள இதர சொத்துகள், அவரது சட்டப் பூர்வ வாரிசுக்கு போய்ச் சேரும். இல்லையென்றால் மாநில அரசால் கையகப்படுத்தப்படும். ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு முடிவுக்கு வந்தாலும், சொத்துகளை கைப்பற்றுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணை தொடர்கிறது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை, அபராதத்துக்கு ஏற்ப வசூலிப்பது தொடர்பாக கர்நாடக விசாரணை நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கும். 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ததும் அதை விசாரணை நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தெரிவிக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 30.05.2017



60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன படிக்கலாம்?

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன படிக்கலாம்?
நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.
+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம்.
இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
எனவே, இன்ஜினியரிங் சீட் வாங்குவதைவிட, அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே, இன்ஜினியரிங் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து, பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.
மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால், மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது. எனினும், MBBS என்கிற ஒரேயொரு படிப்பிற்கு மட்டும், நாம் முயற்சி செய்வதைத் தாண்டி, மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்தினால், சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகரிக்கும். MBBS போலவே, அதே காலஅளவில் உள்ள மாற்று மருத்துவம் சார்ந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகியவற்றின் மருத்துவப் பட்டப் படிப்புகளும் சமீப ஆண்டுகளில் புகழ்பெற்று வருகின்றன.
தவிர, BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு, MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட, சற்று அதிகமான கல்லூரிகளில், தமிழகத்தில் உள்ளதால், இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே, B.Pharm எனப்படும் மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும், மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.
மருத்துவத்தில், மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவம், காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது. தவிர, B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.
வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture), எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவையில் மட்டுமல்லாது, திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும், இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில், சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு, Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.
தவிர, கோவை வேளாண் பல்கலையில், ஒருசில சிறப்பு இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன என்பது பலர் அறியாத செய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நீங்கள் நேரடியாக கோவை வேளாண் பல்கலைக்கு, தனியாக ஒரு விண்ணப்பம் போட வேண்டும்.
ஒரு காலத்தில், அரசியலில் நுழைய வேண்டுமானால், அதற்கு சட்டக் கல்லூரியில் சேர்வதானது, பாஸ்போர்ட் எடுப்பது போன்றது என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்பிற்கான மவுசு கூடிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேர +2வில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் போதுமானது.
இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும், இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு, இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சொல்லப்போனால், இன்ஜினியரிங் கல்லூரியிலுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி போன்றவை, B.Sc. படிப்புகளாக, கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ் பாடங்களில்கூட, சிறப்புத் துறைகளாக மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி என சிறப்பு பட்டங்கள் தரப்படுகின்றன. சத்துணவு, இந்திய சுற்றுலா, ஹோம் சயின்ஸ், உளவியல் என பெண்களை மையப்படுத்தி, நிறைய சிறப்பு பட்டப் படிப்புகள், குறிப்பாக, மகளிர் கல்லூரிகளில் சொல்லித்தரப்படுகின்றன.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பிரபலமான இன்னொரு படிப்பு B.Com. என்றாலும், அதோடு சேர்ந்த படிக்க வேண்டிய இன்னும் சில கோர்ஸ்களை நம் மாணவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதாவதாக, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் CA, காஸ்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் ICWAI மற்றும் கம்பெனி செக்ரட்டரி எனப்படும் ACS ஆகிய மூன்றும்தான் அவை.
ஒருகாலத்தில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகுதான், இவற்றை முயற்சி செய்யவே முடியும். ஆனால் இன்று, +2 முடித்து பட்டப் படிப்பில் சேர்ந்தவுடனேயே இவற்றுக்கான தொடக்கநிலைத் தேர்வுகளை எழுத முடியும் என்பதால், பட்டப் படிப்பை படித்துக்கொண்டே ஒரே நேரத்தில், இந்தத் தேர்வுகளையும் எழுதுவதால், மூன்றாண்டு காலம், விரயமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதை, ஒரு காலத்தில், பல வீடுகளில் அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அத்தனைப் படிப்புகளும், தொலைக்காட்சித் துறைக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதால், அந்த எதிர்ப்பு நிலை மாறியுள்ளது. சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதேபோல், சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக் கல்லூரியில், இசை மற்றும் நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் சொல்லித் தரப்படுவதோடு, இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன.
உங்களின் ஓவியத் திறமையை மட்டுமே வைத்து பட்டப் படிப்பில் நுழையும் வாய்ப்பு உள்ளது தெரியுமா? சென்னை எழும்பூரிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியிலும், கும்பகோணத்திலுள்ள இதே அரசுக் கல்லூரியிலும் BFA எனப்படும் Fine Arts பட்டப் படிப்பு, பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சொல்லித் தரப்படுகிறது. இதில் சேர, உங்களது ஓவியத் திறமையைப் பரிசோதிக்கும் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதன்மூலம் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். இரண்டுமே அரசுக் கல்லூரிகள்  என்பதால், கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான். இன்று தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு ஆர்ட் டைரக்டர்களும் இக்கல்லூரிகளின் மாணவர்களே!
சமீப ஆண்டுகளில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் படிப்புகளில், முக்கியமான இன்னொரு படிப்பு பேஷன் டெக்னாலஜி. சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக் கல்லூரியான NIFT எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி போன்ற டிசைனிங் கோர்ஸ்கள், பட்டப் படிப்புகளாக சொல்லித் தரப்படுகின்றன.
சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், எப்போதுமே நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புகளாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கப்பல், விமானம் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வேலைபார்க்கும்  வாய்ப்பை கேட்டரிங் படிப்புகள் தருவதால், அதுசார்ந்த ரசனை உள்ளவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். அதேபோல், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் என, ஊடகத்துறை வளர்ச்சி, இன்று சிறப்பாகவே இருந்து வருவதால், மீடியா படிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Media போன்ற பட்டப் படிப்புகளும், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய படிப்புகளாகும்.
எனவே, காலங்காலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரேமாதிரியான படிப்புகளையே தேர்ந்தெடுக்காமல், உங்கள் ரசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வித்தியாசமான ஒரு பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதே சிறப்பான அமையும்.         
- ரமேஷ் பிரபா, கல்வியாளர்.
 நன்றி : தினமலர் - கல்விமலர் - 30.05.2017