disalbe Right click

Saturday, August 12, 2017

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு எங்கள் சல்யூட்!

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு எங்கள் சல்யூட்!
(நீதியின் மாறுபட்ட கோணம் இது)
தச்சு வேலைக்காக, மதுரையில் இருந்து, தாராபுரம் வந்த வாலிபர் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் பசி தாளாமல் அங்கும், இங்கும் அலைந்தார். வேறு வழியின்றி, அங்கிருந்த ஒரு கடையில் பன்னை திருடி சாப்பிட்டார். கடைக்காரர், வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மறுநாள், நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் முன் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்த விபரத்தை போலீசாரிடம் கேட்டார், மாஜிஸ்திரேட், ஜியாவுதீன். 'ஐயா, பசிக்காக, பன்னை திருடி விட்டான்' என, போலீசார் கூறினர். 
அதை கேட்டு கடுப்பான அவர், 'பசின்னு ஒரு பன்னை திருடி விட்டான்; அதுக்குப் போய் சிறையா' என்றார்.'
இன்னும் புலன் விசாரணை முடியவில்லை' என்றனர், போலீசார். 
அதற்கு, மாஜிஸ்திரேட், 'இதிலே என்னய்யா இன்வஸ்டிகேஷன்' என்றார். வாலிபரை பார்த்த அவர், 'நேத்து காலை, ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனியா?' எனக் கேட்டார்.
ஆமாங்கய்யா போனேன்' என, வாலிபர் தலையாட்ட, 'அதெல்லாம் சரி, எங்க போன' எனக் கேட்டார், மாஜிஸ்திரேட்.
'போலீஸ் ஸ்டேஷன்லேதான்யா' என, வெட்கத்துடன் சொல்ல, போலீஸ் பக்கம் திரும்பினார், மாஜிஸ்திரேட்.
அப்புறம் இதிலென்னய்யா இன்வஸ்டிகேஷன்; அவன் திருடின பன்னை, உங்க ஸ்டேஷன்லே இன்னைக்கு வேறு விதமா விட்டுட்டு வந்துட்டான். ஆக, திருடு போன, 'பிராபர்ட்டி ரிகவரி' ஆயிடுச்சில்ல. அப்புறம் எதுக்கு ஜெயில்' என, மாஜிஸ்திரேட் கேட்க, இன்ஸ்பெக்டரும், ஏட்டும் 'திருதிரு'வென முழித்தனர்.
பசிக்கு திருடிய வாலிபருக்கு, பெரிய சைஸ் பன்னும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தர, மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். மேலும், சொந்த ஊர் திரும்ப, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.
நீதி என்பது, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேடும் சட்டப் புத்தகங்களில் இல்லை; இதயங்களில் தான் இருக்கிறது என, அனைவருக்கும் புரிய வைத்த, மாஜிஸ்திரேட்டிற்கு பெரிய வணக்கத்தை தெரிவிப்போம்!
க.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.08.2017

Friday, August 11, 2017

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
‘‘வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற நீங்கள் அலைந்ததெல்லாம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் கல்விக் கடன் பெற வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் அல்லது ஒரு கம்ப்யூட்டா் பிரவுஸிங் சென்டாில் இருந்தோகூட கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசு, கல்விக் கடனுக்காக பிரத்யேகமாகத் துவங்கியுள்ள வித்யா லட்சுமி இணையதளத்தில் (www.vidyalakshmi.co.in) சென்று முதலில் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தற்சமயம் 40-க்கும் மேற்பட்ட வங்கிகள் வழங்கும் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காலவிரயம், தட்டிக்கழித்தல்களை எளிதில் தவிா்த்துவிடலாம். இந்த இணையதளத்தில் பதிவு செய்யாமல் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டுமென்றால், அந்தந்த வங்கிகளின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்ல பலன் அளிக்கும்.
நாடு முழுக்க உள்ள 130-க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் 200-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன.
கிராம வங்கியிலும் வாங்கலாம்
கல்விக் கடன் என்றாலே பெரும்பாலானோர்களுக்கு ஒரு சில பொதுத் துறை வங்கிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். பொதுத் துறை வங்கிகள் மட்டுமல்லாமல், தனியாா் வங்கிகள், கிராம வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய அரசின் நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் கல்விக் கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவை தவிர இன்னும் சில அமைப்புகள்
1. தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
2. தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
3. தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
4. தேசிய தாழ்த்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
5. தேசிய துப்புரவுத் தொழிலாளா்கள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
6. தேசிய பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
அந்தந்தப் பிாிவினாின் மேம்பாட்டுக்காக இவை கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இவை நேரடியாக மக்களுடன் இணைந்து செயல்படுவதில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள், பொதுத் துைற மற்றும் தனியாா் வங்கிகளுடன் இணைந்து தங்களது கடன் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகின்றன.
வட்டி குறைவு
பொதுவாக, பிற வணிக வங்கிகளின் வட்டி விகிதங்களைவிட இந்த நிறுவனங்களின் வட்டி விகிதம் மிகவும் குறைவு. பிற வங்கிகளில் ஆண்டு வட்டி விகிதம் 12% மற்றும் அதற்கும் மேல் உள்ள நிலையில், இந்தப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்களின் ஆண்டு சராசாி வட்டி விகிதம் 6% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும்கூட மத்திய அரசின் வட்டி மானியத் திட்டத்துக்குத் தகுதியுடையதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிள்ளைகளுக்கான மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி மானியத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் படிக்க வாங்கும் கல்விக்கடனுக்கும் வட்டியை மத்திய அரசே பகிர்ந்துகொள்ளும் வகையில் பல்வேறு வட்டி மானியத் திட்டங்களும் உள்ளன.
எவ்வளவு கிடைக்கும்?
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள, அதாவது ஆண்டுக்கு சுமாா் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவான வருமானமுடைய பெற்றோா்களின் பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு செலுத்தும் (Central Scheme to Provide Interest Subsidy) திட்டம். மாணவா்கள் படிக்கும் காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்கள் கழித்து இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலான காலகட்டத்துக்கு உண்டான வட்டியை மாணவா்கள் சாா்பாக மத்திய அரசே வங்கிகளுக்கு நேரடியாகச் செலுத்தும்.
வெளிநாட்டில் படிக்க
அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெற்றோா்களின் பிள்ளைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெற்றோா்களின் பிள்ளைகள், வெளிநாடுகளில் படிக்க செல்ல வாங்கும் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம், டாக்டா் அம்பேத்கா் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம் (Dr.Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loan for Overseas studies for other backward classes (OBCS) and Economically Backward Classses (EBCS)) என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்கும் மாணவா்கள் இந்த வட்டி மானியத் திட்டத்தால் பயன் பெற முடியும்.
கிட்டத்தட்ட இதே அடிப்படையில் பதோ பிரதேஷ் (Padho Pradesh) என்ற பெயாில் வட்டி மானியத் திட்டம் சிறுபான்மை மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யாருக்குக் கடன் கிடைக்கும்?
சாி, யாா் யாரெல்லாம் கல்விக் கடன் வாங்கலாம் என்றால், இந்தியக் குடிமகன்கள் அனைவரும் கல்விக் கடன் வாங்கலாம். ஆனால், இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டவா்கள் கல்விக் கடன் வாங்க முடியாது.
பொதுவாக, கல்விக் கடன் வரையறைகளை மூன்று பிாிவுகளாகப் பிரித்துப் பாா்க்கலாம். இது இந்தியாவில் படிப்பதற்கும் வெளிநாட்டில் படிப்பதற்கும் பொதுவானது.
முதலாவது சுமாா் நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கடன். இதைப் பெறுவதற்கு பெற்றோா் அல்லது மாமனாா், மாமியாா் ஆகியோா்களில் ஒருவா் இணைக் கடன்தாரராகச் சோ்க்கப்பட்டு அவா்களது கையெழுத்து மட்டும் இருந்தால் போதுமானது. இந்தக் கடனைப் பெறுவதற்கு வேறு பிணையமோ, பொறுப்போ தேவையில்லை.
இரண்டாவதாக, சுமாா் ரூ.7.50 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெறுவதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுடன், மாதச் சம்பளம் பெறுபவரோ அல்லது வருமான வரிச் செலுத்துபவரோ யாராவது ஒருவா் கூடுதலாக ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டும்.
மூன்றாவதாக, ரூ.7.50 லட்சத்துக்கு மேற்பட்ட கல்விக்கடனுக்கு கட்டாயம் பிணையம் தேவைப்படும். அது கட்டடமாகவோ, நில மாகவோ, அரசாங்க முதலீட்டுப் பத்திரங்களா கவோ, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளா கவோ, மியூச்சுவல் ஃபண்டு களாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ யூ.டி.ஐ, என்.எஸ்.ஸி, கே.வி.பி மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களாகவோ இருக்கலாம்.
எப்போது கடன் வாங்கலாம்?
பொதுவாக, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க கால நிா்ணயம் எதுவும் கிடையாது. ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டில் கல்விக் கடன் வாங்காமல், இரண்டாம் ஆண்டோ அல்லது இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக் கடன் கிடைக்கவிட்டால்…?
கல்விக் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தபின் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள வழிகாட்டுதல்களின்படி வங்கிக் கிளைகள் செயல்படாவிட்டால், முதலில் மாவட்ட ஆட்சியரின் புகாா் மனுப் பிரிவில் வெள்ளைத் தாளில் எழுதி புகாா் அளிக்கலாம். அவா் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் உங்களது குறைகளைக் களைய நடவடிக்கை எடுப்பாா்.
இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளரை அணுகி, அவா் மூலம் உங்கள் குறைகளைத் தீா்த்துக்கொள்ளலாம். அடுத்ததாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பலாம்.
எல்.கே.ஜி-க்கும் உண்டு கல்விக் கடன்!
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்காக மட்டுமே கல்விக் கடன் பெற முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மையல்ல. எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள், ஐ.டி.சி மற்றும் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம். சிஏ படிப்பவர்கள், 55-வது வயது வரை கல்விக் கடன்கள் பெற முடியும். இதற்கான வாய்ப்புகளைச் சில வங்கிகள் வழங்குகின்றன. மேலும், வேலையில் இருப்பவர்கள் மேற்படிப்பு படிக்கவும், தங்கள் வேலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சிக் கல்வியைப் பெறவும் கடன் உதவி கிடைக்கும்.
நன்றி : நாணயம் விகடன் – 13.08.2017

தானாகவே மாறிவிடும் இனி பி.எஃப் கணக்கு!

தானாகவே மாறிவிடும் இனி பி.எஃப் கணக்கு!
இனி எந்த வேலைக்கு போனாலும் ஒரே பிஎப் கணக்குதான், மாறவே மாறது!
பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தங்கள் பணியியை மாற்றிக் கொண்டாலும் அவர்களது பிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு தானாகவே அந்நிறுவனத்துக்கு மாறிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளன. இச்சேவை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. பணியாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தங்கள் பணியியை மாற்றிக் கொள்ளும் போது, பலருக்கும் எவ்வாறு தங்களது பிஎப் கணக்கை புதிதாக மாறும் அலுவலகத்திற்கு மாற்றுவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்படும். இதனை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஎப் கணக்கு எண் 
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான வாழ்நாள் சிறுசேமிப்பு திட்டமான பிஎப் கணக்கு எனப்படும் சேமநல நிதி கணக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் முன்பெல்லாம் வேறு நிறுவனங்களுக்கு மாறினாலோ, வேலையை விட்டு திடீரென நின்று விட்டாலோ பிஎப் கணக்குகளை முடிக்கும் நிலை காணப்பட்டது. இதனால் வாழ்நாள் சேமிப்பை தொடர முடியாத நிலை காணப்பட்டது.
மத்திய அரசு அறிமுகம் 
தற்போது பிஎப் கணக்குகளில் பல்வேறு நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வேறு நிறுவனங்களுக்கு மாறினால், அவர்களது பிஎப் கணக்கும் மற்ற நிறுவனத்திற்கு தானாக மாறும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய நடைமுறை இதுகுறித்து பிஎப் தலைமை ஆணையர் வி.பி.ஜாய் கூறுகையில்
வேறு நிறுவனங்களுக்கு மாறுபவர்களின் பிஎப் கணக்கு தானாக மற்ற நிறுவனத்திற்கு மாறும் நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. முன்பு வேறு நிறுவனத்திற்கு மாறியவர்கள் தங்களது கணக்குகளை முடித்துக் கொள்வர். பின்னர் மற்ற நிறுவனத்தில் சேர்ந்த பிறகு மீண்டும் தொடங்குவர். தற்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
புதிய பணி 
தொழிலாளர்கள் புதிய பணிக்கு மாறும்போது அவர்களது பிஎப் கணக்கை அப்படியே விட்டு சென்றுவிடுகிறார்கள். அல்லது தங்களது கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொண்டு செல்கின்றனர். பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
விண்ணப்பம் தேவையில்லை 
தேவை இல்லாமல் கணக்குகள் மூடுவதை நாங்கள் விரும்புவதில்லை. இனிமேல் பிஎப் கணக்கு நிரந்தரமாகவே இருக்கும். தங்களது வருங்கால பாதுகாப்புகளுக்கென்று இந்த கணக்கை தொழிலாளர்கள் பயன்படுத்தலாம். புதிய பணிக்கு மாறிய மூன்றே நாட்களில் பணம் முதற்கொண்டு கணக்குகளும் மாற்றப்படும். இதற்கு விண்ணப்பங்கள் தேவையில்லை.
பிஎப் பணத்தின் அவசியம் 
மேலும், நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் ஆதார் எண்ணை வைத்து மாற்றிக் கொள்ளலாம். இந்த முறை விரைவில் அமலுக்கு வருகிறது. புது வீடு கட்டுவதற்கு, குழந்தைகளின் கல்வி மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தருணத்தில், பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டும்தான் தங்களது பிஎப் பணத்தை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். என்று அவர் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை:'அரசு அனுமதி பெறாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் போது, அதிகாரிகள் விரைந்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், அரசு அனுமதியின்றி துவங்கப்பட்ட பள்ளியில், 200 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
தஞ்சையில் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அனுமதி கேட்டு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது; ஆனால், ஒப்புதல் பெறவில்லை. அதனால் தான், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கபட்டது' என,கூறப்பட்டது.
நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பகுதியில், அரசு அனுமதியுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன என்பது, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரியும். அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்தால், அதிகாரிகள் உடனுக்குடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, அனுமதி கோரிய பள்ளியின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னே, கல்வித்துறை அதிகாரிகள் துாக்கத்தில் இருந்து விழித்து, மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள், சரியாக செயல்படாததால், இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு,பதிலளிக்க வேண்டும்.
➤ பள்ளிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வரும் போது, அதிகாரிகள் ஏன் முறையாக செயல்பட வில்லை.
 மாணவர்கள் சேர்க்கையை அந்த பள்ளிகள் துவங்கி விட்டதா, இல்லையா என்பதை ஏன் சரிபார்க்கவில்லை?
 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களின் நலன் கருதி, துவக்கத்திலேயே அதிகாரிகள் ஏன் விரைந்து செயல்படவில்லை?
 அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்த பள்ளிகள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
 அனுமதி பெறாமல், ரகசியமாக மாணவர் களை சேர்க்கும் பள்ளிகளை தடுக்க, சட்டத்தின் கீழ் எந்தெந்த வழிகள் உள்ளன?
➤ தமிழகம் முழுவதும், அரசின் அனுமதியின்றி எவ்வளவு பள்ளிகள் இயங்குகின்றன?
மேற்கூறிய விபரங்களை, வரும், 16க்குள் வழங்க வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பதை தடுக்க, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -11.08.2017

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களைப் பற்றி

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களைப் பற்றி
அரசு துறையில் பணியாற்றி வருகின்ற சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ப்ணியில் இருக்கின்ற காலத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் திடீரென இறக்கும்போது அவர்களது குடும்பத்தின் எதிர்காலமானது இருண்டுவிடுகிறது. அந்தக் குடும்பத்தில் வருமானம் ஈட்டுவதற்கு யாருமற்ற நிலையில், அந்த குடும்பம் ஜீவனம் செய்ய முடியாத கஷ்டமான சூழ்நிலைக்கு வந்து விடுகிறது. இது போன்ற குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவருக்கு (மனைவி அல்லது மகன் அல்லது மகள்) தகுதிப்படி வாரிசு (கருணை அடிப்படையில்) வேலை வழங்கப்படுவது தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நியமனத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு காரணமாக கடந்த 2001ம் ஆண்டில் வாரிசு நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இதனால் பணியில் இருக்கும்போது இறந்து போகின்ற அரசு ஊழியரின் குடும்பத்திற்கு ஆதரவு கிடைக்காமல் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், மீண்டும் அரசுத்துறையில் உள்ள சங்கத்தினர் ஒட்டுமொத்தமாக வாரிசு வேலை கேட்டு போராடினர் இதன் காரணமாக கடந்த 2006ம் ஆண்டில் மீண்டும் வாரிசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இருக்கின்ற மொத்த காலிப்பணியிடங்களில் 25% மட்டுமே வாரிசு வேலைக்கு ஒதுக்கப்படும் என்று நிபந்தனையும் விதித்தது.
வாரிசுகளுக்குத் தரப்பட்ட தற்காலிகப் பணியை வரன்முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் வாரிசுகளிடம் இருந்து 15 வகையான சான்றிதழ்கள் முன்பு பெறப்பட்டது. பணியில் இறந்தவரின் வாரிசுகள் தற்போது பணிபுரியும் துறையின் உயர் அதிகாரியிடம் இந்தச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.
அந்தச் சான்றிதழ்களுடன், 18 வகையான பிரிவுகள் அடங்கிய ஒரு படிவத்தையும் வாரிசுதாரரிடம் இருந்து பெற்று அரசின் பரிசீலனைக்கு அந்த அதிகாரி அனுப்பி வைப்பார். இப்படி பலவகையான சான்றிதழ்களைத் திரட்டி வாரிசுதாரர் தரவேண்டியதிருந்ததால், வாரிசுகளின் பணி நிரந்தரம் காலதாமதமாகி வந்தது.
இதைத் தவிர்க்கின்ற வகையில், புதிய நடைமுறை ஒன்றை கடந்த 2013ம் ஆண்டின் இறுதியில் தமிழக அரசு பிறப்பித்தது. இதன்படி, பணி காலத்தில் இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், கல்விதகுதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்களை அனுப்பினால் போதும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட சான்றிதழ்களுடன் வாரிசு பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிவிப்பதற்கான 18 பிரிவுகளைக் கொண்ட ஒரு படிவத்தையும், பணி காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரரும் அரசுத் துறைகளின் தலைவரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று கடந்த 16.05.2015 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறித்த கேள்வி பதில்கள்
(TNPSC இணையதளத்திலிருந்து)
கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது..??
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா..??
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது..??
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர்
/ வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக
உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா..??
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி
வழங்கப்படும்.
இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா..??
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.
கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்..??
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்..??
பணி காலத்தில் இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், கல்வி தகுதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்கள்.
கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு..??
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக / கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது..??
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படுமா..??
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால் / கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.
என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா..??
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.
என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா..??
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் லியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த
காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா..??
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா..??
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு.கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்..??
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்குதல் 
தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை - G.O.:78
www.tn.gov.in 

அரசாணையின் நகல்