disalbe Right click

Thursday, October 26, 2017

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுமா?

சென்னையில் உள்ள குடும்பநல கோர்ட்டில் இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான் குமார் என்பவருடன் வக்கீல் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்று இருந்தேன். அங்கு என்னிடம் சில ஆவணங்களில் வக்கீல்கள் கையெழுத்து பெற்றனர். இந்தநிலையில் வக்கீல்கள் முன்னிலையில் எனக்கும், குமார் என்பவருக்கும் திருமணம் நடந்ததாக கூறி அதை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அந்தப்பெண் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் .செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். குமார் தரப்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ‘வழக்கு தொடர்ந்துள்ள இளம்பெண்ணுக்கும், குமாருக்கும் வக்கீல்கள் முன்பாக திருமணம் நடந்தது. பின்னர் திருமணத்தை அவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டனர். இந்து திருமண சட்டப்படி 2 நபர்கள் முன்பு ஒரு ஆணும், பெண்ணும் சீர்திருத்த முறைப்படி திருமணம் செய்துகொண்டால் அது செல்லுபடியாகும்.
அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள், வேறு சிலராகவும் இருக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. அந்த வேறு சிலரில் வக்கீல்களும் உள்ளடங்குவர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
கீழ் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையின் போது, தனக்கும், குமார் என்பவருக்கும் வக்கீல் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடந்ததாகவும், வக்கீல்கள் முன்பு நடந்த திருமணம் செல்லாது என்றும் அந்தப்பெண் கூறி உள்ளார். இதற்கு நேர் எதிரான கருத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அந்தப்பெண் கூறி உள்ளார்.
எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். திருமணம் நடந்தது தொடர்பாக வக்கீல் கொடுத்த கடிதம் இந்து திருமணம் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினத்தந்தி நாளிதழ் - 18.10.2017  

அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை


அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல! என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு நகல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 
நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்
No automatic alt text available.

Image may contain: text

Image may contain: text

Image may contain: text


Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

No automatic alt text available.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Wednesday, October 25, 2017

இலவசமாக RTI தபால்கள் அனுப்பலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதும் விண்ணப்பங்களை அரசு அலுவலகத்திற்கு இலவசமாக எப்படி அனுப்புவது ,அதன் நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
தபால்துறை மூலம் நமது கடிதங்களை அரசு அலுவலகங்களுக்கு  இரண்டு வழிகளில்  இலவசமாக அனுப்பலாம்,
1.BY POST (தபால் மூலம் அனுப்புவது )
2.BY HAND ( நேரடியாக கையில் தருவது )
BY POST ( தபால் மூலம் அனுப்புவது)
உங்கள் விண்ணப்பத்தை ஒரு கடித உரையில் போட்டு குறைந்தது 5 ரூபாய் அஞ்சல் விலை ஒட்டி உங்கள் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலக போஸ்ட் மாஸ்டர்க்கு அல்லது சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸ் அவர்களுக்கு அனுப்பலாம்உங்கள் கடிதத்தை பெற்ற அவர்கள் எந்த துறை முகவரிக்கு உங்கள் கடிதம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு உங்கள் கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டு ,அதன் விவரங்களை உங்களுக்கும் தெரிவிப்பார்கள்.

BY HAND ( நேரடியாக கையில் தருவது).
நீங்களே நேரடியாக உங்கள் மாவட்ட தலைமை தபால்துறை அலுவலகத்திற்கு சென்று தலைமை போஸ்ட் மாஸ்டர் அவர்களை சந்தித்து உங்கள் விண்ணப்பத்தை மட்டும், (கடித உரைக்குள்  வைக்காமல்) அவரிடம் கொடுத்தால்,   அவர் அதனை பெற்று வட்ட வடிவியல் முத்திரை மற்றும் அவரது முத்திரை குத்தி சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸிற்கு அனுப்பி வைப்பார். மேலும், நீங்கள் கொடுக்கின்ற  (அனுப்புகின்ற கடிதத்தின்) நகல் ஒன்றில் அவரது கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை வைத்தும் தருவார்.
அதன் பின்னர், அங்கிருந்து உரிய அரசு அலுவலகங்களுக்கு உங்கள் கடிதம் அனுப்பி வைக்கப்படும்அவ்வாறு அனுப்பி வைத்தவுடன் ,உங்களுக்கு அவைகள் பற்றி விபரங்கள் தபால் துறையில் இருந்து அனுப்பப்படும். மேலும், அவைகள் உரிய அலுவலகத்தில் சேர்ந்தவுடன் அந்த அலுவலகத்தில் இருந்தும் உங்களுக்கு அது சேர்ந்த விபரம் கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

பிரிவு 6(1) - தகவல் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பம் .
பிரிவு 19(1) - மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 19(3) - இரண்டாம் மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 2 J (1)- ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை இலவசமாக அனுப்பி தகவல்களை நீங்கள்  பெறலாம்.
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக அனுப்பிய கடிதத்தின் நகலில் சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கையொப்பம் மற்றும் அஞ்சலக முத்திரையை கீழே காணலாம்.

மேலே கண்ட கடிதத்தின் அசலை விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு இலவசமாக அனுப்பிவிட்டு அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவித்த சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கடித நகலை கீழே காணலாம்.

*********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

குழந்தை பேசவில்லை என்றால்

பிறந்து 3 மாதங்களில் தலை நிற்காமல் இருப்பது, குப்புறிதல், தவழுதல், உட்காருதல் போன்ற வளர்ச்சி நிலைகள் முறையே 4,6,8 மாதங்களில் நடைபெறாமல் இருப்பது, ஒன்றரை வயதாகியும் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாமல் இருப்பது, இரண்டரை வயதாகியும் சிறுவாக்கியங்களையும் பேசாமல் இருப்பது, மலம், சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடற்ற நிலையில் இருப்பது, நாம் கூறும் விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல், மிக அமைதியாகவோ அல்லது மிகுந்த பரபரப்பும், தவிப்பும் உடையதாக இருப்பது போன்ற அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால் காலத்தைத் தள்ளிப்போடாமல் சரியான வழியில் பயிற்சிகளை அளிப்பது அவசியமானது ஆகும்.
இன்றைய நிலையில் 100 குழந்தைகள் பிறந்தால் 2 அல்லது 3 குழந்தைகள் இதுபோன்ற குறைபாடுகளுடன் பிறக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் என்ன, அதை எவ்வாறு சரி செய்வது என்பது தெரியாமல் பெற்றோர் பல இடங்களுக்கு அலையும் நிலையை பல இடங்களில் காணலாம்
அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக குழந்தைகளுக்கும் பல்வேறு வகையான பயிற்சிகளையும் அளிக்கிறது திருச்சி- புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகிலுள்ள மானஸமித்ரா வித்யா பீடம்
இந்த மையத்தின் முதல்வரும், மனநலவியலாளருமான ஷீலா ஜோஸியுடன் உரையாடியபோது:
""மனிதர்களின் சராசரி அறிவுத்திறன் 90 முதல் 110 இருக்க வேண்டும். அறிவுத்திறன் 70 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் போது அவர்களின் மூளை வளர்ச்சித் திறன் குறைவு என்று கருதலம். இதனால் அவர்களால் மற்றவர்கள் போல் இருக்க முடிவதில்லை.
பொதுவாக குழந்தைகள் 5 வயதை அடைவதற்குள் அவர்களின் பெருந்தசை மற்றும் நுண்தசை இயக்க வளர்ச்சி, மொழி வளர்ச்சி ஆகியவை 100-சதமும், அறிவு சார்ந்த வளர்ச்சி ஏறத்தாழ 80சதமும் முடிந்து விடுகின்றன. மீதமுள்ள 20 சதவீத வளர்ச்சி 6 முதல் 18 வயது வரையிலான காலத்தில் நிகழ்கிறது.
எனவே அந்த காலகட்டங்களிலேயே, பெற்றோர், தம் குழந்தைகளின் நிலையை கூர்ந்து கவனித்து, குறைகள் இருப்பின் சரியான மையங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்தல் அவசியமாகும்
பார்ப்பதற்கு இயல்பான குழந்தைகள் போல இருந்தாலும், ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகள் தனக்கென்ற ஒரு தனி உலகில் சஞ்சரிப்பது போல, பிறருடன் கலந்து பழகாமலும், மற்றோரின் கேள்விகள் அல்லது தகவல்களுக்கு செவிமடுக்காதவராகவும் இருப்பர்.
இவ்வாறு, தகவல் பரிமாற்றத் திறன் இல்லாமல் இருப்பது, நண்பர்களுடன் சேர்ந்து பழகாமல் இருப்பது, சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது (உதாரணமாக கட்டுப்படுத்த இயலாத வண்ணம் கைகளை ஆட்டிக்கொண்டே இருப்பர்) போன்றவற்றை வைத்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாங்கள் கண்டறிகிறோம். அவர்களின் திறன் குறைபாடுகளை மேம்படுத்தும் விதமான பல பயிற்சிகளை அளித்தல், அவர்களுள் குறைந்த அளவு பிரச்சனைகளுடன் இருக்கும் சிறுவர்களின் திறனை மேம்படுத்தி, சராசரி அறிவுத்திறன் அளவீட்டில் உள்ள பிற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஆட்டிசம் மற்றும் மூளைவளர்ச்சித் திறன் குறைபாடு உடைய சிறப்புக் குழந்தைகளிடம் காணப்படும் பரபரப்புத் தன்மை, முரட்டுத்தனம், கவனக்குறைவு, நினைவில் நிறுத்தும் திறன், மற்றும் பிற இயல்பான நடத்தை மாறுபாடுகளை சீர்செய்யும் வகையில் பயிற்சிகள் பலவற்றையும், சிறப்புக் கல்வி, திறன் ஊக்குவிப்பு பயிற்சிகள் ஆகியவற்றுடன் சேர்த்து அளித்து வருகிறோம்.
சிறப்புப்பயிற்சி மற்றும் சராசரிக் கல்வியை கற்கக்கூடிய சம அளவிலான திறன் கொண்ட மாணவர்களை, அருகாமையிலுள்ள அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பிற்பகல் வரை மற்ற மாணவர்களுடன் பழகச் செய்து, படிக்க வைத்து, பிற்பகலுக்குப் பிறகு எங்கள் மையத்தில் மற்ற பயிற்சிகளை அளித்து வருகிறோம்.சராசரி அறிவுத் திறன் இருந்தாலும், கற்றலில் குறைபாடு இருக்கும் மாணவர்களுக்குத் தேவையான மேம்படுத்தும் பயிற்சிகளையும் அளிக்கிறோம்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு இங்கு பயின்ற மாணவி ஒருவர், பல்வேறு பயிற்சிகளுக்குப் பின்னர், சராசரியான பள்ளியில் சேர்க்கப்பட்டு, தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1058 மதிப்பெண்கள் பெற்ற தகவல் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எங்களுடைய மையத்தில் குழந்தைகள் பேசுவதற்கான பயிற்சி, அவர்களின் உணர்வுகளை கட்டுப்பாட்டுடன், முறையாக வெளிப்படுத்துவதற்கான பயிற்சி, அன்றாட மற்றும் வாழ்வியல் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி, குழந்தைகளின் மன ஆற்றலை சீர் செய்ய பெருமளவில் உதவும் மைண்ட் எலிவேஷன் தெரபி அளிக்கப்படுகிறது.
உடலின் வெப்பமாறுபாடுகள் காய்ச்சலாகத் தான் வெளிப்பட வேண்டும் என்பது இல்லை. குழந்தைகள் மிகுந்த பரபரப்புடன் இருப்பதற்கு உடலின் உஷ்ணம் சீரற்று இருத்தலும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அப்படியான உஷ்ணத்தைக் குறைத்து அவர்களில் சிந்தனைத் திறனை சீரமைக்கும் உஷ்ண ஸமனி பயிற்சி,
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பலவிதமான மின்னணுப்பொருட்கள் வெளிப்படுத்தும் மின்காந்த அலைகள் கவனத்திறன் குறைபாடு மற்றும் பரபரப்பும் எரிச்சலும் மிகுந்த குணப்பாங்கு ஆகியவற்றுக்குக் காரணம் அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனை சீர் செய்ய உதவும் கிரவுண்டிங் அண்ட் ஹார்டிகல்சர் தெரபி, யோகா போன்ற பல்வேறு பயிற்சிகளை நாங்கள் அளித்து வருகிறோம்.
எங்கள் மையத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தினமும் அரை மணி நேரம் கட்டாயமாக ஓவியப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
படங்களை வரையக் கற்றுக் கொள்வதன் மூலம் வண்ணங்களைப் பற்றியும் வடிவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். அவர்களின் மனஉணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் வரையும் ஓவியங்கள் அமைவதன் காரணத்தால், அதன் அடிப்படையில் அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் உதவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் திறன் பெற்றிருப்பார்கள். அவ்வாறு உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பயிற்சியையும் அளிக்கிறோம்.
குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் உடல் ரீதியானவை, மரபணு ரீதியானவை, கருக்கால பிரச்சனைகள், பேறுகால நேரம் மற்றும் பிறந்த சில மணிக்கூறுகள் முதல் சில நாட்கள் அல்லது ஒரு சில வருடங்களுக்குள் குழந்தைக்கு ஏற்படும் வலிப்பு போன்ற பிரச்னைகள்,
பிரசவநேரத்தில் ஏற்படும் பல்வேறு மருத்துவ காரணங்கள் ஆகியவற்றுடன் கர்ப்ப கால மன உணர்வுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
கர்ப்பகாலத்தில் பெற்றோரின் சிந்தனை, எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதைவிட முக்கியமானது, மகப்பேறு காலத்தில் முறையான உடல் உழைப்பு இருப்பது மிக மிக அவசியமானதாகும்
கர்ப்ப காலத்தில் நச்சுத்தன்மை உள்ள உணவை தாய் சாப்பிடும் போது அதன் பாதிப்பு அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் நேரடியாக பாதிக்கச்செய்கிறது'' என்கிறார் ஷீலா ஜோஸி.
தினமணி நாளிதழ் - 21.10.2015