disalbe Right click

Thursday, October 5, 2017

எஸ்பிஐ புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல்

எஸ்பிஐ புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல்
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் நாளை (அக்.,1) முதல் அமலுக்கு வர உள்ளன.
அமலுக்கு வரும் விதிகள் :
* வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புதொகையின் அளவை எஸ்பிஐ குறைத்துள்ளது. இவை, மெட்ரோ நகரங்களில் இருப்பவர்களின் குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.5000 லிருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதி வங்கி கிளைகளில் கணக்கு வைத்திருப்போரின் குறைந்தபட்ச வைப்பு தொகை அளவு ரூ.2000 லிருந்து ரூ.1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* குறைந்தபட்ச வைப்புதொகைக்கும் கீழான தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்போரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வைப்பு தொகையை வைக்காத புறநகர் பகுதி மற்றும் கிராமப்புற கிளைகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.20 லிருந்து ரூ.40 ஆக்கப்பட்டுள்ளது. நகரம் மற்றும் மெட்ரோ கிளைகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ.30 லிருந்து ரூ.50 ஆக்கப்பட்டுள்ளது.
* குறைந்தபட்ச வைப்புதொகை கட்டாயம் என முறையிலிருந்து ஓய்வூதியதாரர்கள், அரசு நலத்திட்ட பயனாளர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மற்றும் பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச வைப்பு தொகையை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.
எஸ்பிஐ.,யில் 42 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கோடி கணக்குகள் பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழும், அடிப்படை சேமிப்பு கணக்கின் கீழும் வருகின்றன.
* மற்ற வங்கிகள் எஸ்பிஐ உடன் இணைக்கப்படும் முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் பட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் அல்லது பாரதிய மகிளா வங்கி ஆகிய வங்கிகளின் செக்புக் மற்றும் ஐஎப்எஸ் கோடு நாளை முதல் செல்லாது. இந்த கிளைகளின் ஐஎப்எஸ் கோடுகள் மாற்றப்பட உள்ளன.
நன்றி : தினமலர் நாளிதழ் -30.09.2017 

Wednesday, October 4, 2017

இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354

Image may contain: text
இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 
இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் கூரான சட்ட ஆயுதம், இந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 ஆகும். வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

Monday, October 2, 2017

புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு

புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு
ஒருவர் மற்றொருவரிடம் கடன் வாங்கியதற்கு அத்தாட்சியாக எழுத்து மூலம் உறுதி செய்து கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற தாளையே,  PROMISSORY NOTE  என்று   கூறுகிறோம்தமிழில் சுருக்கமாக “ புரோ நோட்என்று சொல்கிறோம்.
கடன் கொடுத்தவர் கடனை கேட்டவுடன் கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி வாங்கிய கடனை அவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். இதுவே இந்த புரோ நோட்டின் சாராம்சம் ஆகும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம்
குறிப்பிட்ட ஒரு நபருக்கோ அல்லது அவரது உத்தரவு பெற்றவருக்கோ அல்லது முறைப்படி அந்த உத்தரவை கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி கடன் பெற்றவர் எழுதி கையொப்பம் இட்டுக் கொடுக்கும் முறையே ஆவணக்கடன் உறுதிச் சீட்டு ஆகும்! என்று புரோ நோட்டு பற்றி மாற்றுமுறை   ஆவணச் சட்டம்,   நான்காவது   விதியில்  குறிப்பிடப்பட்டு உள்ளது.
புரோ நோட்டின் சிறப்பு
இதனை முத்திரைத் தாளில் எழுத வேண்டியதில்லை.
எங்கும் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை.
 சாட்சிகளிடம் முதலிலேயே கையெழுத்து வாங்க வேண்டியதில்லை.
ரூ.50,000/- வரை கடைசி நேரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்.  
சாதாரணத் தாளில் எழுதி, ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதுமானது.
கடன் கொடுப்பவர் நிபந்தனைகள் விதிக்க வேண்டியதில்லை.
முக்கிய விதிகள்
கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி, வாங்கிய  கடனை,    கேட்டவுடன்  கடன் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும்
 ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், கடன் வாங்கியவர் புரோ நோட்டில் கையெழுத்து போட்டால் அந்த புரோ நோட்டு செல்லாது.
நிபந்தனைகள் விதிக்கப்பட்ட புரோ நோட்டுகள் செல்லாது.
புரோ நோட்டு எழுதப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு செல்லாது.
கடன் வாங்கியவர் வட்டியோ அல்லது அசலோ கடன் பெற்றவரிடம் கொடுக்கும்போது புரோ நோட்டின் பின்புறத்தில் எழுதி அவரது கையெழுத்தை வாங்கிக் கொள்ளவேண்டும்.
அசலும் வட்டியுமாக மொத்தத் தொகையையும் கடன் வாங்கியவர் செலுத்திவிட்டால், புரோநோட்டில் கடன் கொடுத்தவரிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
முழுப்பணமும் செலுத்திய பிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் புரோநோட்டை வாங்க மறக்கக் கூடாது.
புரோநோட்டை வாங்காமல் விட்டுவிட்டால், கடன் கொடுத்தவர், அதனை வேறு ஒருவருக்குமேடோவர்முறையில் எழுதிக் கொடுத்துவிட வாய்ப்பு உண்டு.
வட்டி மற்றும் அசல் கடன் வாங்கியவர் செலுத்தும்போது, அதனை பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தவர் தருகின்ற ரசீது செல்லாது.
கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாது. சிவில் வழக்கு தான் போடவேண்டும்.
புரோ நோட்டின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Related image
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி