disalbe Right click

Wednesday, November 1, 2017

தடுப்பூசிகள் - கப்ம்ளீட் கைடு

தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றிய பொதுவான சில நம்பிக்கைகளையும் உண்மையையும் பற்றிப் பார்ப்போம்.
நம்பிக்கை 1: ஆரோக்கியமான, சுகாதார சூழலே தொற்றுநோய்களைத் தடுத்துவிடும். இதனால், தடுப்பூசி போடுவது தேவையற்றது.
உண்மை 1:
எவ்வளவு சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுதற்கான வாய்ப்பு குறைகிறது. ஆனால், முற்றிலுமாக வாய்ப்பு இல்லை என்று சொல்வதற்கு இல்லை. சில தொற்றுநோய்கள் மிக வேகமாக பரவிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏதாவது ஒரு சூழலில் தொற்றுநோய்க் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், தடுப்பூசி அளித்ததன் மூலமே, போலியோ, பெரியம்மை உள்ளிட்ட பல வியாதிகளை இல்லாமல் செய்திருக்கிறோம். தடுப்பூசி அளிக்கத் தவறினால், இந்த பாதிப்புகள் மீண்டும் ஏற்படலாம்.
நம்பிக்கை 2: தடுப்பூசிகள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். இதன் பக்கவிளைவுகளைப் பற்றி இன்னும்கூட முழுமையாக அறிந்திருக்கவில்லை.
உண்மை 2:
இது முற்றிலும் தவறான கருத்து. தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. பொதுவாக, தடுப்பூசி, மருந்துகள் பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர்தான் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பூசிகளால் பக்கவிளைவுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவை மிகமிகச்சிறிய பாதிப்பு மற்றும் தற்காலிகமானது. மெல்லிய காய்ச்சல், வலி போன்றவை ஏற்படலாம். அதுவும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். தடுப்பூசி அளிக்காததால், நோய் ஏற்பட்டு, அதனால் வரக்கூடிய விளைவுகளுடன் ஒப்பிடுகையில், இது ஒன்றும் பெரியதே இல்லை.
உதாரணத்துக்கு, போலியோவை எடுத்துக்கொள்வோம். போலியோ பாதிப்பு வந்தால் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படும். சில நோய்கள் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தும். அதற்கு தடுப்பூசி, மருந்து போட்டுக்கொள்வதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.
நம்பிக்கை 3: நம் நாட்டில்தான் போலியோவை ஒழித்தாகிவிட்டதே. இனிமேல் எதற்கு போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்? ஒழிக்கப்பட்ட நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போடுவது தேவையற்றது.
உண்மை 3:
அம்மை, போலியோ வருவதை முற்றிலும் தடுத்தி நிறுத்திவிட்டாலும் கிருமிகள் இன்னும் இருக்கலாம். இவை, உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். சர்வசாதாரணமாக எல்லைகளைக் கடந்து நாட்டுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஒருவர், உலகில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பதை தடுக்க முடியாது. அவர், முறையான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளாதவர் என்றால், அவர் மூலம் கிருமி பரவும். இதைத் தவிர்க்க, ஒவ்வொருவரும் முறையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம்.
நம்பிக்கை 4: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே, கூட்டு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகளை போடுவதால் பாதிப்பு ஏற்படலாம்.
உண்மை 4:
குழந்தையின் உடல், ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால், தடுப்பூசி போடுவதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று சொல்வதில் உண்மைஇல்லை. முத்தடுப்பு, பென்டாவேலன்ட் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை எதிர்க்கும் தடுப்பூசியைப் போடுவதால் பாதிப்பு வராது. டெட்டனஸ், கக்குவான் இருமல், போலியோ போன்ற பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு, உடல் உறுப்புக்கள் செயல்திறன் பாதிப்பு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரை அடிப்படையில், இந்த தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.
நம்பிக்கை 5: காய்ச்சல், சளி போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருக்கும்போது குழந்தைக்கு தடுப்பூசி அளிக்கக் கூடாது.
உண்மை 5:
சாதாரணக் காய்ச்சல், சளி இருக்கும்போது தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்தற்கு இதுவரை மருத்துவரீதியான ஆய்வுகள் இல்லை. நாம் நினைப்பதைவிட, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் மிக்கது என்பதை மக்கள் உணர்வதே இல்லை. அதேநேரத்தில், அதிகக் காய்ச்சல், தீவிர காதுத் தொற்று என்று பாதிப்பு இருக்கும்போது மருத்துவரே தடுப்பூசியை இப்போது போட வேண்டாம் என்று தெரிவிப்பார்.
நம்பிக்கை 6: தடுப்பூசியில் பாதரசம், பதப்படுத்திகள் உள்ளன. எனவே, அவை ஆபத்தானவை.
உண்மை 6:
சில தடுப்பூசிகளில் பாதரசம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், இவை எவ்வித பாதிப்பும் அற்றவை. எனவே, பாதரசம் கலந்துள்ளது என அச்சப்படத் தேவை இல்லை. மேலும், இந்த வகை மெத்தல் பாதரசத்தை நம்முடைய உடலே மிக எளிதாக வெளியேற்றிவிடும். அதனால், உடலில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று பயப்படத் தேவையில்லை.
நம்பிக்கை 7: தடுப்பூசிகள், கற்றல் குறைபாடு, ஆட்டிசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
உண்மை 7:
இது முற்றிலும் தவறான கருத்து. எம்.எம்.ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி, பிரிட்டிஷ் மருத்துவக் குழு ஒன்று மேற்கொண்ட பரிசோதனையில், தடுப்பூசிகள் மூலம் உடலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரித்துக்கொள்ள முடியுமே தவிர, கற்றல் குறைபாடுகளோ ஆட்டிசம் போன்ற பாதிப்புகளோ ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நம்பிக்கை 8: தடுப்பூசிகள் நோய்களை 100 சதவிகிதம் தடுப்பது இல்லை.
உண்மை 8:
இது ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக, தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. மிகச்சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இது மிக குறைவானவர்களுக்கே நேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்குமே தடுப்பூசி அளிக்கவில்லை என்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.
டீன் ஏஜ் மற்றும் முதியவர்களுக்கான தடுப்பூசி!
குழந்தைகளுக்கு இரண்டு வயது முடிவதற்குள், முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. மேலும், குழந்தையின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் சரியாக இருக்கும்.
குழந்தைகள் மட்டும் இன்றி இளைய வயதினரும் முதியோரும்கூட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும், ஆண், பெண் இருபாலரும் மஞ்சள் காமாலை தடுப்பூசிகளையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும்உலக சுகாதார நிறுவனம்கூறுகிறது.
பொதுவான அறிகுறிகள்!
தடுப்பூசி போட்ட உடனே சிலருக்கு முகம் அல்லது தோல் சிவத்தல், லேசான காய்ச்சல், சோர்வு, ஊசி போட்ட இடத்தில் வலி, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை பக்கவிளைவுகள் கிடையாது. தடுப்பூசி உடலினுள் சென்று செயல்புரிவதால், சிலரது உடல் இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
நன்றி : டாக்டர்விகடன் செய்திகள் - 01.11.2016 

Monday, October 30, 2017

பட்டா வழங்கவில்லையா? நுகர்வோர் கோர்ட் இருக்கு!

நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்
முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, தனது நிலத்திற்கு, “பட்டா” வாங்குவது மிகவும் சிரமமாகவே உள்ளது.  இது அரசு நமக்கு வழங்குகின்ற கட்டணச்சேவை ஆகும். இதில் குறை இருந்தால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் நுகர்வோர் கோர்ட்டை தாராளமாக நாடலாம். செலவும் அதிகம் ஆகாது. வழக்கும் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும். வழக்கின் செலவோடு, உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும். இது சம்பந்தமான தீர்ப்புகளின் நகல்கள் உங்களுக்காக.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No automatic alt text available.

Image may contain: text
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text

Saturday, October 28, 2017

இனி இ-ஸ்டாம்பிங் பரவலாகும்

இனி -ஸ்டாம்பிங் பரவலாகும்
வீட்டை வாங்குவது, விற்பது, குத்ததைக்கு விடுவது போன்றவற்றில் தொடங்கி வணிக ஒப்பந்தங்கள் வரை எல்லாவற்றிற்கும் அரசுக்கு ஸ்டாம்ப் கட்டணம் செலுத்துவது அவசியம்.ஸ்டாம்ப் பேப்பர் என்ற ஒன்றை நாம் அறிவோம். மேல்பாதி முழுவதும் பிரம்மாண்டமான அளவில் அரசின் இலச்சினையும், அந்தத் தாளின் மதிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். கீழ்ப்பாதியில்தான் ஒப்பந்த வாசகங்கள் எழுதப்படும்.
சமீபகாலமாக -ஸ்டாம்பிங் என்ற ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. -மெயில் என்றால் மின்னஞ்சல் என்கிறோம் அல்லவா, அதுபோல -ஸ்டாம்பிங் என்றால் மின்னணு முறையில் ஸ்டாம்ப் கட்டணத்தைச் செலுத்துவது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழையபடி விற்கப்படும் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர்களிலும் பத்திரங்கள் நிரப்பலாம், -ஸ்டாம்பிங் முறையிலும் இதைச் செய்யலாம்.
ஏதற்காக இந்தப் புதிய முறை
நமக்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவா? அதுமட்டுமல்ல, ஆங்காங்கே ஸ்டாம்ப் பத்திரங்கள் அவ்வப்போது கிடைக்காமல் போகும். இதனால் பலவிதச் சங்கடங்கள் உருவாகும். தேவையே இல்லாமல் சிலசமயம் அதிகத் தொகைக்கான ஸ்டாம்ப் பத்திரங்களையும் வாங்க வேண்டி வரலாம். இவையெல்லாம் -ஸ்டாம்பிங்கில் தவிர்க்கப்படுகின்றன.
எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. முத்திரைத்தாள் மோசடிகள் பரவலாகத் தொடங்கின (ஹர்ஷத் மேத்தா நினைவுக்கு வருகிறாரா?). போலி முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் அரசுக்குப் பெரும் நஷ்டம். இதைத் தவிர்க்கவும் -ஸ்டாம்பிங் உதவுகிறது.
-ஸ்டாம்பிங் என்பது என்ன?
இதற்காக மத்திய அரசு ‘Stock Holding Corporation of India Limited’ என்ற அமைப்பை நியமித்திருக்கிறது. -ஸ்டாம்பிங்கிற்கான விண்ணப்பங்கள், பதிவுகள் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் உள்ள அனைத்தையும் இந்த நிறுவனம்தான் பார்த்துக் கொள்கிறது.
உங்களைப் பொறுத்தவரை பத்திரங்களுக்கு -ஸ்டாம்பிங் செய்யும் முறை இதுதான். முதலில் மாநில அரசு -ஸ்டாம்பிங்கை ஏற்றுக் கொள்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். SHCIL என்ற வலைத்தளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். இதன் இணையதள முகவரி www.schcelstamp.com.
ACCயில் (அங்கீகரிக்கப்பட்ட கலெக்ஷன் மையங்கள்) விண்ணப்பங்களைப் பெற்று நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் பெயர்கள், மின்னணு முறையில் ஸ்டாம்ப் கட்டணம் அளிக்கப்பட்ட தேதி, அந்த ஆவணத்திற்கென்று அளிக்கப்படும் தனிப்பட்ட எண் போன்ற பல விவரங்கள் அடங்கி இருக்கும். ஸ்டாம்ப் தொகையை இணையம் வழியாகச் செலுத்த முடியும். இதற்குக் கடன் அட்டை, பற்று அட்டை, RTGS, NEFT ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
வழக்கமான முறையில் பத்திரத் தாள்களை வாங்கிப் பதிவு செய்வதற்கும் இந்த -ஸ்டாம்பிங் முறைக்கும் கொஞ்சம் அன்னியம் இருக்கலாம். ஆனால் இதில் பல நன்மைகள் உள்ளன. சில நிமிடங்களிலேயே இப்படிச் செலுத்த முடியும். பத்திரத்தாள்கள் நாளடைவில் சிதிலமடையலாம். ஆனால் இந்த -ஸ்டாம்பிங்கின் முறையில் இந்தத் தகவல்கள் SHCIL அமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு -ஸ்டாம்பிங் ஒரு தனி எண் (UNIQUE IDENTIFICATION No) அளிக்கப்படுவதால், உண்மைத் தன்மையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் -ஸ்டாம்பிங் சான்றிதழ்களைத் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நகல் பிரதி வழங்குவதில்லை. இது நாம் பழகிக் கொள்ள வேண்டிய ஒரு முறை. இப்போதைக்கு டெல்லியில் -ஸ்டாம்பிங் முறையில் மட்டுமே ஸ்டாம்ப் கட்டணத்தைச் செலுத்த முடியும். போகப் போக பிற மாநிலங்களிலும் இது கட்டாயமாகலாம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.10.201