disalbe Right click

Monday, December 4, 2017

வன அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

மேகமலையில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்
மதுரை: தேனி மாவட்டம் மேகமலை சரணாலயத்தில் மரங்கள் வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத்தவறிய வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கைகோரி தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதி வைகை ஆறு உற்பத்தியாகும் இடமாகும். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடைகின்றன. மேகமலையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சில நிறுவனங்களின் தேயிலை, காபி எஸ்டேட்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளால் மலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேகமலையில் வன சம்பந்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனுாத்து, நொச்சி ஓடை, அஞ்சரப்புலி, காந்திகிராமம், வெள்ளிமலை பகுதிகளில் சட்டவிரோதமாக வன நிலத்தை அழித்து, விவசாய நிலமாக மாற்றுகின்றனர். பொம்மராஜபுரம் பகுதியில் பலாப்பழத்தில் விஷம் வைத்து ஏழு சிங்கவால் குரங்குகளை கொன்றுள்ளனர்.
பொம்மராஜபுரம் சிற்றாறு மற்றும் கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதியில், 100ஆண்டுகள் பழமையான 300 மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர். அப்பகுதியில் மூன்று முதல் 4 கி.மீ.,துாரத்திற்கு ரோடு அமைக்கின்றனர். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, சிறப்புக்குழுவை தேனி கலெக்டர் அமைத்தார். அக்குழு,'நவீன இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக 300 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில மரங்களை தீ வைத்து எரித்துள்ளனர்,' என அறிக்கை சமர்ப்பித்ததுவனத்துறையினருக்கு தெரியாமல் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.
மேகமலையில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வனத்தைவிட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து அரசிடம் மனு அளித்தனர். அவர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வேலையாட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகமலையின் உயிர்ச்சூழலை ஏற்கனவே இருந்த பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். மரங்கள்வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய மேகமலை சரணாலய வன உயிரின காப்பாளர், உதவி வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாண்டி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வு மத்திய, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகசெயலாளர்கள், மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தேனி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,10 க்கு ஒத்திவைத்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.201

ஆசிரியர் பணிக்கு தகுதிப்படிப்பு அவசியம்!

கோவை: ”ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், மத்திய அரசின், தகுதிப்படிப்பில், வெற்றி பெறுவது அவசியம். இதில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை,” என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப்யாதவ் தெரிவித்தார்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், ஆசிரியர்களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தொடக்க வகுப்புகளுக்கு பாடம் எடுப்பவர்கள், ஆசிரியர் பட்டய படிப்புடன், ’டெட்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர்நிலை வகுப்பில் பாடம் எடுப்பவர்கள், பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்திருப்பதோடு, ’டெட்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவோர், பள்ளிக்கல்வி இறுதித்தேர்வில், 50 சதவீத மதிப்பெண் இல்லாமலும், ’டெட்தேர்வில் தேர்ச்சி பெறாமலும் இருப்பின், மத்திய அரசின், என்...எஸ்., எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டாண்டு டிப்ளமோ, ஆசிரியர் பட்டய படிப்பில் சேர, வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படிப்பை, வரும் மார்ச் 2019 க்குள் முடிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுக்க, 26 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுசார்ந்து, கோவையில் நடந்த, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ்விடம், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் முறையிட்டனர்.
இதற்கு விளக்கம் அளித்த, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மத்திய அரசு, ஆசிரியர்களுக்கான தகுதியை மேம்படுத்தி கொள்ள, 2010ல் அறிவுறுத்தியது. ஐந்து ஆண்டு கால அவகாசம் அளித்தும், பலரும் தகுதியை மேம்படுத்தி கொள்ளாததால், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது, கடைசி பஸ் ஏறுவது போன்றது. வாய்ப்பை தவறவிட்டால், வீட்டுக்கு திரும்புவது உறுதி என தெரிவித்தார். இது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்,”மத்திய அரசின், என்...எஸ்., தகுதிப்படிப்புக்கு, மாவட்ட அளவில் மையங்கள் அமைத்து, பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வகுப்புகளுக்கு பாடம் நடத்த, ஆசிரியர் பட்டய கல்வி முடித்திருப்பது அவசியம்.
இப்படிப்பு முடிக்காமல், அதிக கல்வித் தகுதி இருந்தாலும், வகுப்பு நடத்தக் கூடாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதிப்படிப்பில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை. ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், உரிய கல்வித்தகுதி பெறுவது அவசியம்,” என்றார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) நாளிதழ் - 05.12.201