disalbe Right click

Saturday, January 13, 2018

சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தரணிகளாக இருக்கலாமா?


1980-களில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்குவருகிறது. மத்திய சட்ட அமைச்சராகவும், அதற்கு முன்னால் மேற்கு வங்க முதல்வராகவும் இருந்த காங்கிரஸ் தலைவர் சித்தார்த்த சங்கர் ராய், தனது பதவிக் காலத்துக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். அப்போது கேரளத்தில் பிர்லாவுக்குச் சொந்தமான ரேயான் தொழிற்சாலையில் (மாவூர்) ஒரு தொழில் தகராறு ஏற்பட்டது. தொழிலாளிகள் ஆலையை மூடிவிடும் முயற்சியை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் போராடிவந்தன. அதையொட்டி அங்குள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் பிர்லா நிர்வாகம் சார்பில் வாதாடுவதற்கு சித்தார்த்த ராய் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைச் சட்டை செய்யாத ராய், “நான் காங்கிரஸ்காரனாக வழக்கு நடத்த வரவில்லை. ஒரு வழக்கறிஞராகவே வந்துள்ளேன்என்று சமாளித்தார்.
வழக்காடும் தலைவர்கள்
அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உருவாவதற்கு முன்னாலேயே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் .சிதம்பரம் ஆஜரானது விமர்சனத்துக்கு உள்ளானது. ஏனெனில், அந்த இடஒதுக்கீட்டை அன்றைய காங்கிரஸ் கட்சி வரவேற்றது.
இரண்டு நிலைகள்
சாந்தி பூஷண், கபில் சிபல், அசோக் சென், .சிதம்பரம், அருண் ஜெட்லி இவர்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. மத்திய அமைச்சரவையில் பதவிவகிக்கும்போது வக்கீல் தொழில் அவர்களால் செய்ய முடியாது. ஆனால், பதவிக்காலம் முடிந்த அடுத்த நிமிடமே வக்கீல் உடுப்பை மாட்டிக்கொண்டு நீதிமன்றத்தில் காணப்படுவார்கள். அச்சமயத்தில், அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வக்கீல்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தலாமா என்ற கேள்வி எப்போதுமே எழுப்பப்பட்டு வந்துள்ளது.
புதிய சர்ச்சை
எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிக் காலத்தில் வக்கீல் தொழில் நடத்தக் கூடாது என்று ஒரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, அகில இந்திய பார் கவுன்சில் ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
ஒருவர் வக்கீலாக இருக்க வேண்டும் என்றால்
எந்த நிறுவனத்திலும் (அரசு மற்றும் அரசு சாரா) வேலை பார்க்கக் கூடாது
➽ மேலும், அப்படிப்பட்ட நிறுவனங்களில் அவர்கள் தங்களது சட்டப் படிப்பின் காரணமாக சட்ட ஆலோசகராகவோ, சட்ட மேலாளராகவோ இருப்பினும், அவர்களால் நேரடியாக நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியாது
➽ அதேபோல், முழு நேரமும் வேறொரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களை வக்கீல்களாகப் பதிவுசெய்துகொள்ள முடியாது.
➽ ஏதேனும் ஒரு தொழிலில் அவர்கள் நேரடிச் செயல்பாட்டில்லாத பங்குதாரர்களாகவோ () இயக்குநர்களாகவோ இருக்க வேண்டும் என்றால், அதற்கு பார் கவுன்சிலில் முன்அனுமதி பெற வேண்டும்
வக்கீல் தொழில் என்பது ஒரு கௌரவமான சுயேச்சைத் தன்மை பொருந்திய தொழில்அத்தொழிலுக்குக் குந்தகமான எந்த ஒரு செயலிலும் வக்கீல்கள் ஈடுபடக் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம்
அதேபோல் நாடாளுமன்றங்களிலும், சட்ட மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களில் ஊழியர்களாகப் பணிபுரிய முடியாது.
➽ தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் சொந்தத்தில் தொழில் நடத்துபவர்களும் வியாபாரிகளும் அம்மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தடையில்லை.
வரவேற்கத் தகுந்த  சுற்றறிக்கை
எம்.எல்..க்களும், எம்.பி.க்களும் தங்களது பதவிக் காலத்தில் வக்கீல்களாகப் பணியாற்றக் கூடாது என்று தடைவிதிப்பதற்காகப் போட்டுள்ள அகில இந்திய பார் கவுன்சிலின் சுற்றறிக்கை வரவேற்கத்தக்கதே. வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு முழு நேரப் பணி. மேலும், அத்தொழிலில் பணியாற்றுபவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்குத் தடையில்லையென்றாலும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவிகள் போன்றவை முழுநேரப் பணிகளாகும். மேலும், அந்தப் பதவியில் உள்ளவர்களுக்கு மாதச் சம்பளம், இதர படிகள், மற்றும் அரசின் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பதவியில் இல்லாவிட்டாலும் ஓய்வூதியம்
இது தவிர, தமிழ்நாட்டில் பதவியில் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியமும் உண்டு. முழு நேரம் கவனம் செலுத்தக்கூடிய பணியில் இருந்துகொண்டு, மற்றொரு முழு கவனமும் செலுத்த வேண்டிய வக்கீல் தொழிலில் ஈடுபடுவது கடினம். மேலும், பதவியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நலனை முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து, தங்கள் தொழிலில் பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள். வக்கீல்கள் சங்கத்திலும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவார்கள்.
அன்றைய மத்திய சட்ட அமைச்சர்கள்
இன்றைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமன நடைமுறை உருவாவதற்கு முன்னால் (1993-க்கு முன்) மத்திய சட்ட அமைச்சர்கள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். சட்ட அமைச்சரைக் காண்பதற்கு சட்ட அமைச்சகத்தின் வராந்தாக்களில் நீதிபதிகள் கைகட்டி நின்றதாகக் கூறுவார்கள். அப்பதவிக் காலம் முடிந்த பின்னரும் அவருக்கு உண்டான செல்வாக்கு குறைவதில்லை. ஏனென்றால், மீண்டும் அவர் அமைச்சராகிவிடுவாரோ () தற்போதைய அமைச்சரிடம் அவருக்கு நல்ல உறவு இருக்கும் என்று பயப்படும் நீதிமன்ற நடுவர்கள் உண்டு.
கூடவே கூடாது!
நேரடி அரசியலில் நுழைந்து, நாடாளுமன்றத்தின் உறுப்பினராகச் சேவை புரிய வேண்டும் என்று எண்ணக்கூடிய வக்கீல்கள், மீண்டும் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்டிட வேண்டும் என்று பணம் எண்ணும் இயந்திரங்களாக நீதிமன்ற வளாகத்தில் உலாவக் கூடாது. நாடாளுமன்றப் பணிக்காலத்தில் அதற்கு உண்டான சேவைகளைச் செய்வதற்கே நேரம் போதாது. இதில் அவர்கள் கோப்புகளுடனும், அதனை ஒப்படைத்த இளம் வக்கீல்களுடனும் வழக்கு நடத்துவதற்குப் பெரும் நேரத்தைச் செலவிடுவது அவர்களை எந்தக் காரணத்துக்காகத் தேர்ந்தெடுத்தார்களோ அக்காரணத்தையே முறியடித்துவிடும்.
வழக்கறிஞர் உடையில் மக்கள் பிரதிநிதி
தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்த வக்கீல் ஒருவர், தினசரி சட்டப் பேரவைக்கே வக்கீல் உடுப்பில்தான் வருவார். காலையில் சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் தன்னுடைய சீருடையில் நீதிமன்றங்களில் காணப்படுவார். இதையெல்லாம் தடுத்து, ஒரு கண்ணியமான வக்கீல் தொழிலைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிக்காலத்தில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளாக - வழக்கறிஞர்களாக உலாவுவது தடுக்கப்பட வேண்டும். அகில இந்திய பார் கவுன்சிலின் முடிவு வரவேற்கத்தக்கதே!
-கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு),உயர் நீதிமன்றம், சென்னை.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 14.01.2018 

போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை:ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜன., 28ல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால், 14வது ஆண்டாக தொடர்ந்து, போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள், திரையரங்குகள்... வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலியோ முகாம் நடத்த, தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம், 45 ஆயிரம் மையங்களிலும், நடமாடும் குழுக்கள் வழியாகவும் நடத்தப்படுகிறது. இந்த பணிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம், வரும், 28ல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, இரண்டு நாட்கள், விடுபட்ட குழந்தைகளுக்கு, வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெறும்.
பின், ஒரு வாரம், அரசு மருத்துவமனைகளில் மட்டும் போலியோ மருந்து தரப்படும். இரண்டாம் கட்ட முகாம், மார்ச், 11ம் தேதி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.01.2018 

Friday, January 12, 2018

கோரப்படாத மியூச்சிவல் ஃபண்ட்

பல கோடி ரூபாய்கள் - கேட்பதற்கு ஆளில்லை!  
ஒருவருடைய தந்தையோ, தாயோ அல்லது கணவரோ, மனைவியோ மியூச்சிவல் ஃபண்ட்டில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரியாமல் முதலீடு செய்திருப்பார்கள். சில நேரங்களில் முதலீடு செய்தவர்கள் இறந்த பிறகுதான் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இந்த விபரம் தெரிய வரும். அதற்குரிய ஆவனங்கள் இருக்காது. என்ன செய்வது? என்று தெரியாமல் அதனை பெறாமலேயே விட்டு விடுவார்கள். முதலீடு செய்தவர்களும்கூட உரிய ஆவணங்களை தொலைத்துவிட்டு இதனைக் கோராமல் விட்டுவிடுவதும் உண்டு.  இதைப் போன்று பெறப்படாமல் இருக்கும் தொகை பல கோடிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
முதலீட்டாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் இதனைப் பெற என்ன செய்ய வேண்டும்? 
முயூச்சிவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் என்றால்,  நேரடியாக முதலீடு செய்த விவரத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் அல்லது அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஏஜண்ட் மூலமாக தங்களது பான் கார்டு, போலியோ எண், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண், ஆதார் அடையாள அட்டை எண்  ஆகியவற்றைக் கொடுத்து இலகுவாக முதலீடு செய்த விவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்
அதனை தெரிந்து கொண்ட பிறகு அந்த முதலீட்டாளர் வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்வது போல  விற்பனை செய்துவிடலாம். முதலீடு செய்தவரின் முகவரி, வங்கிக் கணக்கு விவரம், செல்போன் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு முறைப்படி எழுத்து மூலமாக தெரிவித்து தங்களுடைய முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெறலாம்.
கோரப்படாத டிவிடெண்ட் தொகை
கோரப்படாத  டிவிடெண்ட் தொகையையும் இதேமுறையில் முதலீட்டாளர்கள் பெற முடியும்அதாவது, டிவிடெண்ட் தொகை தன்னால் க்ளைம் செய்யப்படாததற்கான காரணத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்து மேற்கூறிய சான்று நகல்களையும் சமர்ப்பித்து டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்யலாம்.  
வாரிசுதாரர் என்றால் என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டாளரின் வாரிசுதாரர் என்றால்,, முதலீட்டாளர் இறந்த விவரத்தையும் அதற்கு ஆதாரமாக இறப்புச் சான்றிதழ் நகலையும், முதலீட்டாளரின் வாரிசு என்பதற்கு ஆதாரமாக வாரிசுச் சான்றிதழ் நகலையும், முகவரிச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலையும் கொடுத்து க்ளைம் செய்ய முடியும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டெபாசிட்டரி ஆகியவற்றின் https://www.sbimf.com இணையதளத்தில் உள்ளது. இதை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அந்த நிறுவனத்திடம் அளித்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்துகொள்ளலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருந்தால்....?
முதலீட்டாளரின் வாரிசுதாரர்களாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால், அவர்களுக்குள் யாராவது ஒருவரைத் தேர்தெடுத்து, அந்தத் தொகையை அவரிடம் கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று மீதமுள்ள அனைவரும் 20 ரூபாய் முத்திரைத் தாளில்  தங்களது கையொப்பமிட்டு, அதில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரி கையெழுத்து  மற்றும் முத்திரை பெற்று அதனை அந்த நிறுவனத்திடம் அளித்து     மியூச்சுவல்  ஃபண்ட்  முதலீடு மற்றும் டிவிடெண்ட்   தொகையை   க்ளைம்  செய்து, அதன் பிறகு அதனை தங்களுக்குள் பங்கு பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.01.2018

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பலபேரிடம் பணத்தை வசூல் செய்து, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ அதுல பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கும் இதனை நடத்துகின்ற நிதி நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கும். இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் ‘மியூச்சுவல் ஃபண்ட்னு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தெரியாத முதலீட்டாளர்கள் இதனை தெர்வு செய்கிறார்கள். இதனை  பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள்  மட்டுமல்ல, வங்கிகளும் நடத்துகின்றன.
நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைப் பிரிச்சு பல திட்டங்கள்ல அவங்க முதலீடு செய்கிறார்கள். ஏதாவது ஒன்றில் லாபம் குறைஞ்சாலும் மற்றோரு திட்டத்தில் செய்த முதலீடு நமக்கு லாபத்தை தந்துவிடும்.  ஆகையால் முதலுக்கு மோசம் என்ற கவலை நமக்கு  வராது. நாம் முதளிடு செய்த  பணம் எப்படிப் பெருகிக் கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் வசதியும் உண்டு. 
இதில் ரிஸ்க் உண்டா?
யாரோ ஒருவரின் தவறான வழிகாட்டுதலினால் ஷேர் மார்க்கெட்டில் நேரடியாக நுழைஞ்சு  திறமையின்மை காரணமாக நஷ்டம் என்பது இதில் ஏற்படாது. முதலில், நமக்குப் பிடிச்ச திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. 
நமது இருப்புத் தொகை எவ்வளவு? எவ்வளவு முதலீடு செய்யலாம்? என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். முதலீடு செய்த திட்டத்தில் திருப்தி இல்லை என்றால் அதிலிருந்து விலகியும் கொள்ளலாம். 
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம்
ரியல் எஸ்டேட்டில் போடுவது போல அதிகமான தொகையை  மொத்தமா முதலீடு செய்ய வேண்டும் என்பது இதில் இல்லை.  மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்யலாம். மாதாமாதம் 1000/- ரூபாயைக்கூட நாம் முதலீடு செய்யலாம்.  Equity Linked Saving Schemes (ELSS) என்று சொல்லக்கூடிய சில திட்டங்களில்  நாம் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டு இரண்டு விதம்.
Open ended, Closed ended என்று  இரண்டு விதமாக மியூச்சுவல் ஃபண்டுகளைப் பிரித்துக் கொள்ளலாம்.
Open endedல் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் எடுக்கலாம்.
Closed endedல்  ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், அது முதிர்ச்சி அடைந்த பிறகுதான் எடுக்க முடியும். சில நிறுவனங்கள் மட்டும், இடையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீட்டை எடுத்துக் கொள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.   Closeended   திட்டத்தில் போட்ட முதலீட்டை பொதுவாக மூணு   வருஷத்துக்கு  எடுக்க முடியாது
லாபத்தில் நமக்கு கிடைக்கும் பங்கு
மியூச்சுவல் ஃபண்டில் நாம முதலீடு செய்த தொகை வளரும்போது, கிடைக்கின்ற லாபத்தை  நமக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். இதில் Dividend, Growth என்று இரண்டு முறைகள் இருக்கு. முதலீடு செய்த தொகை முதிர்ச்சியடையும் காலத்திற்குள் நமக்குத் பணம் தேவை என்று  நினைக்கிறவர்கள் Dividend  முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த  முதலீடு வேகமாக வளர்ந்தால்தான் உங்களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்Dividend வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது.
மொத்தமாக கடைசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் Growth  முறையை  தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
முதலீட்டுக் காலம் எவ்வளவு?
அது நமது இஷ்டம்தான். முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.
Systematic Investment Plan' (SIP)
மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில், எஸ்..பி., (Systematic Investment Plan) எனப்­படும், தவணை முறை­யில் முத­லீடு செய்­யும் திட்­டத்­திற்கு, தற்போது வர­வேற்பு அதி­­ரித்து வரு­கிறது. இத்­திட்­டத்­தில் இணைந்து நீங்கள் வாரம், மாதம், காலாண்­டு­களில் குறைந்­­பட்­சம், 500 ரூபாய் முத­லீடு செய்­­லாம்.
அன்­றாட பங்­குச் சந்­தை­யினுடைய ஏற்ற, இறக்­கத்தை நாம் கவ­னிக்க தேவை­யின்றி, முத­லீட்­டில் ஒழுங்­கு­மு­றையை ஏற்­­டுத்த, இந்த எஸ்..பி., திட்­டம் நமக்கு உத­வு­கிறது. 2017 அக்­டோ­­ர் வரை இத்­திட்­டத்­தில், 5,600 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.01.2018