disalbe Right click

Saturday, February 17, 2018

பொது நல வழக்கில் .........!

ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்!

சாதாரண காரணங்களுக்காக எந்தவித ஆதாரமும் இல்லாமல்  பொது நல வழக்குகள் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு
டிராபிக் ராமசாமி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரியும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை சட்டப்படி எடுக்க கோரியும்  பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாக அரசுத் தரப்பில் அரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அளித்த மனுக்களின் நகல்களை மட்டுமே இணைத்துள்ள மனுதாரர், வேறு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்றும், எந்த சட்டப் பிரிவின் கீழ் எந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் யார் யார்? என்று அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்து இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
அபராதம் விதிக்கப்படும்
இதுபோல எந்த ஆதாரங்களும் இல்லாமல்எதிர்காலத்தில் சாதாரண காரணங்களுக்காக  பொதுநல வழக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018 

வேட்பாளர்களுக்கு சிக்கல்

வேட்பாளர்கள் தங்களுக்குரிய வருமானத்திற்கு ஆதாரம் காட்ட வேண்டும்
தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
இனி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய சொத்து கணக்கை தாக்கல் செய்வதுடன், அதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக    தீர்ப்பு அளித்துள்ளது.
பொதுநல வழக்கு
'லோக் பிரஹாரிஎன்றஅரசு சாரா அமைப்பு ஒன்று தேர்தல்களில் போட்டியிடுபவர்கள், தங்களுடைய சொத்து கணக்குடன், அதற்கான வருவாய் ஆதாரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
'லோக் பிரஹாரிஎன்றஅரசு சாரா அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த இரு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தற்போது லோக்சபாஎம்.பி.,யாக உள்ள 
நான்கு பேரின் சொத்து மதிப்பு, 12 மடங்கு உயர்ந்து உள்ளது. 'அதே நேரத்தில், 22 பேரின் சொத்து மதிப்புஐந்து மடங்கு உயர்ந்து உள்ளதுஎனகுறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போதுமத்திய நேரடி வரி வருவாய் வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், 'ஏழு லோக்சபாஎம்.பி.,க்கள் மற்றும், 98 எம்.எல்..,க்கள் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்குகளில்தவறான தகவல்கள் உள்ளது தங்களுக்குத் தெரிய வந்துள்ளதுஎன்று கூறியுள்ளது. 
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய மற்றும் குடும்பத்தாரின் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறைகளில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இனிமேல், இந்த சொத்துக்கான வருவாய் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018 

Wednesday, February 14, 2018

அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான

அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான தேவையைக் கவனித்துக்கொள்ள இப்போதெல்லாம் அநேக அமைப்புகள் வந்துவிட்டன. இவை அடுக்குமாடியில் குடியிருப்பவர்களின் தேவையைத் தெரிந்து அவற்றைத் தீர்க்க உதவுகின்றன. இப்படி அடுக்குமாடியில் குடியிருப்பவர்களையும் அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளையும் இணைய சேவை ஒன்று இணைக்கிறது. அப்பார்ட்மெண்ட் அட்டா (Apartment ADDA) எனப்படும் ஒரு ஆன்லைன் போர்டல் அடுக்குமாடி குடியிருப்புகளையும், வில்லாக்களையும் நிர்வகிப்பதை எளிமையாக்குவதற்காக இயங்கிவருகிறது.
அந்த போர்டலில் பதிவு செய்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களையும், அடுக்குமாடி குடியிருப்பை நிர்வகிக்கும் சங்கத்தினரையும் அது இணைக்கிறது. இந்த போர்டலில் அவர்களுக்கான பிரத்யேகமான அட்டா அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது. இந்த அட்டா போர்டல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தொடர்பு, நிர்வாகம், பராமரிப்பு பில்லிங், கணக்கியல், பணம் செலுத்தும் வசதி என எல்லாவற்றையும் வழங்குகிறது.
எளிமையாகும் தகவல்தொடர்பு
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், நிர்வாகச் சங்கத்தினர்கள் என இருவருக்கும் பல வசதிகளை வழங்கும்படி இந்த போர்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டலில் அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான ஃபோரம் இருக்கிறது. அதில் அவர்கள் விவாதிப்பதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்குமான வசதி இருக்கிறது.
ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்படும் இந்த அட்டா பக்கத்தில் ஆன்லைன் தகவல் பலகை இருக்கிறது. அதில் குடியிருப்பில் நடக்கும் கொண்டாட்டங்கள், சந்திப்புகள், காலியாக இருக்கும் பார்க்கிங் இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் குழந்தைகளுக்கான வகுப்புகள், பெரியவர்களுக்கான வகுப்புகள் என எல்லா வகுப்புகளின் நாட்களையும், நேரத்தையும் தெரிந்துகொள்வதற்கான காலண்டர் வசதியும் இந்த அட்டா போர்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தீர்வுகள்
அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு காவலர்களுக்கு உதவும் வகையில்கேட்கீப்பர் ஆப்ஸ்வசதியையும் வழங்குகிறது அட்டா. பார்வையாளர்கள் வருகையைப் பற்றிய தகவல்களையும் எஸ்எம்எஸ் மூலம் குடியிருப்பவர்களுக்கு இந்த அட்டா போர்டல் உடனடியாகத் தெரிவிக்கிறது. இந்த கேட்கீப்பர் ஆப்ஸ் இன்டர்நெட் வசதி இல்லாமலே இயங்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்த அட்டா போர்டல் பெரிதும் உதவும். குடியிருப்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்தால் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி அட்டாவின் பக்கத்தில் கோரலாம். ஆன்லைனிலேயே இந்த வாக்கெடுப்புக்குக் குடியிருப்பவர்கள் வாக்களிக்கலாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆன்லைனிலேயே தீர்வு காணும் வாய்ப்பை அட்டா வழங்குகிறது.
அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்த அட்டா போர்டல் பெரிதும் உதவும். குடியிருப்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்தால் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி அட்டாவின் பக்கத்தில் கோரலாம். ஆன்லைனிலேயே இந்த வாக்கெடுப்புக்குக் குடியிருப்பவர்கள் வாக்களிக்கலாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆன்லைனிலேயே தீர்வு காணும் வாய்ப்பை அட்டா வழங்குகிறது.
நிர்வகிக்கும் பயிற்சி
அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறமை யாக நிர்வகிப்பதற்கான பலவிதமான பயிற்சிகளை நிர்வாகிகளுக்கு வழங்குகிறது. நீச்சல் குளங்களைப் பராமரிப்பதில் ஆரம்பித்துப் பல்வேறு விதமான பராமரிப்பு ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்குக் குடியிருப்புகளில் அட்டா ஏற்பாடு செய்துதருகிறது.
இந்த அட்டா போர்டல் வசதி இப்போது சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் இயங்குகிறது. ஆறாயிரத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் அட்டா போர்டலால் பயனடைந்துவருகின்றனர்.
மேலும் அட்டா போர்டல் பற்றித் தெரிந்துகொள்ள: apartmentadda.com