disalbe Right click

Friday, March 9, 2018

ஆன்லைன்/இசேவை மையம் மூலமாக சான்றிதழ்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணைய சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு 15 வகையான சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் -சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு 
💬 சாதிச் சான்றிதழ்
💬 வருமானச் சான்றிதழ்
💬 இருப்பிடச் சான்றிதழ்
💬 முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் 
💬 கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் 
ஆகிய 5 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. 
தற்போது  
💬 விவசாய வருமானச் சான்றிதழ்
💬 சிறு, குறு விவசாயி சான்றிதழ்
💬 கலப்புத் திருமணச் சான்றிதழ்
💬 விதவைச் சான்றிதழ்
💬 வேலையின்மைச் சான்றிதழ்
💬 குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ்
💬 கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ்
💬 ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ்
💬 திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்
💬 வாரிசு சான்றிதழ்
💬 செல்வ நிலைச் சான்றிதழ்
💬 அடகு வணிகர் உரிமம்
💬 வட்டிக்குப் பணம் கொடுப்போர் உரிமம்
💬 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் 
ஆகிய சான்றிதழ்களையும் இந்த வசதி மூலம் பொதுமக்கள் பெறலாம்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு ஒன்று வழங்கப்படும். இந்த விவரம் அவர்கள் பதிவு செய்துள்ள செல்போனுக்கு  குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். தங்களது விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய '155250' என்ற எண்ணுக்கு விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்த குறுஞ்செய்தி கிடைத்தவுடன் விண்ணப்பதாரர் இணையதளத்தில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள அரசு பொதுச்சேவை மையம் மூலமாகவோ  சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018 

முன்பதிவு ரயில் டிக்கெட்

மற்றொருவருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஒரு பயணத்திற்காக ரயில் டிக்கட் முன்பதிவு செய்திருப்போம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதிருக்கும். அந்த நேரத்தில்  பெரும்பாலானோர்  அந்த  டிக்கெட்டை ரத்து செய்து விடுவோம்.  அல்லது  அதை அப்படியே விட்டுவிடுவோம்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை நாம் வேறொருவர் பெயருக்கு மாற்றிக் கொள்ள தற்போது முடியும்! 
அதற்கு என்ன வழிமுறை என்பதைப் பற்றி கீழே காண்போம். 
ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை
எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல்  முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக  மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை கீழே காணலாம்.
  ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும்பெயரை மாற்ற வேண்டும்இருக்கைபடுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டமுக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் அலுவலகங்களில் உள்ள தலைமை கண்காணிப்பாளரை நாம் முதலில் அணுகவேண்டும்.
❤ முன்பதிவு செய்த நீங்கள் அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
 நீங்கள் உங்களது முன்பதிவு டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்திருக்கும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை என்ற சூழ்நிலையில்  அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்று பள்ளி / கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் ஒன்றை பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து பயணிக்கலாம்
ஒரு திருமணத்துக்காகவோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்காகவோ மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் N.C.C or N.S.S பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக முன்பதிவு   நிலைய    தலைமை  கண்காணிப்பாளரிடம் கொடுத்து கடிதம் எழுதிக் கொடுத்து   மாற்றிக்கொள்ள முடியும்.
************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018 

Wednesday, March 7, 2018

47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக புகார்.

47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக நடிகர்  மீது புகார்!
ஷிம்லா: பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் உறவுப் பெண் அளித்த புகாரின்படி, போலீசார், எப்..ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.
Image may contain: 1 person, hat
பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், ஜிதேந்திரா. இவருக்கு இப்போது வயது 75 ஆகிறது. இவர் மீது, அவரது நெருங்கிய உறவுப் பெண் ஒருவர் (வயது 65)  ஹிமாச்சல பிரதேச காவல்துறைக்கு இமெயில் மூலமாக அளித்த புகாரில்,  நடிகர் ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன்தனக்கு 18 வயதாக இருக்கும் போது    ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஷிம்லா நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு வருமாறு, என்னை அழைத்ததாகவும், ஷிம்லா நகர ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, இரவில் தனது அறைக்கு வந்த ஜிதேந்திரா,தன்னை பலாத்காரம் செய்ததாகவும். அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனே எப்..ஆர்
இந்த புகாரின்படி, ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா காவல்துறையினர், எப்..ஆர்., பதிவு செய்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.03.2018
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018