disalbe Right click

Wednesday, August 22, 2018

மதம் மாறினாலும் ஜாதி மாறாது - தீர்ப்பு

ஹிந்துவாக மாறிய பெண்ணின் பணியை உறுதி செய்தது ஐகோர்ட்
சென்னை, 'கிறிஸ்தவ மதத்தில் இருந்து, ஹிந்து மதத்துக்கு மாறிய, ஆதிதிராவிட பெண்ணின், பணி நியமனம் சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்திலிருந்து.......
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, சிக்கத்தம்பூப்பாளையத்தைச் சேர்ந்தவர், டெய்சி ப்ளோரா; கிறிஸ்தவ ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பின், ஹிந்து மதத்துக்கு மாறி, மேகலை என, பெயர் சூட்டிக் கொண்டார்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, 1999-ல், திருமணம் செய்து கொண்டார்இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து, 2004-ல், தேர்வு எழுதினார். அதிக மதிப்பெண் எடுத்தும், தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அவரது ஜாதி சான்றிதழ் ஏற்கப்படவில்லை என்பது தெரிய வந்தது
உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், மேகலா வழக்கு தொடுத்தார்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து2005-ல், பணியில் சேர்க்கப்பட்டார். பின், கல்வி தகுதியின் அடிப்படையில்2007-ல், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
பிரதான இந்த வழக்கு, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மேகலா சார்பில், வழக்கறிஞர், ஆர்.முத்துகண்ணு ஆஜரானார்.
மனுவை  விசாரித்த,  நீதிபதி  பிறப்பித்த  உத்தரவு:
  • ஹிந்து மதத்துக்கு மாறி, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, மேகலா திருமணம் செய்து கொண்டுள்ளார்
  • கிறிஸ்தவ மதத்தில் இருக்கும்போதும், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதில், எந்த சர்ச்சையும் இல்லை.
  • ஹிந்து மதத்துக்கு மாறியதை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா; அதை நிரூபிக்க ஆதாரம் உள்ளதா; மதம் மாறிய பின், ஹிந்து மத சடங்குகளை பின்பற்றுகிறாரா என்கிற, சர்ச்சைக்கு தான் தீர்வு காணப்பட வேண்டும்.
  • ஹிந்து மதத்துக்கு மாறிய நிகழ்ச்சி, அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அளித்த சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது
  • மேலும், கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், வருவாய் ஆய்வாளரின் பரிந்துரைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது
  • மதம் மாறிய பின், அரசு இதழிலும் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில், புகழ் பெற்ற அமைப்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளது. ஹிந்து மதத்தின் மகத்துவம், அதன் சடங்குகள், நடைமுறைகளை, நாடெங்கும் பரப்பி வருகிறது
  • மதம் மாற்றத்துக்கான பூஜை, 'சுத்தி சடங்கு' நடத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • இந்த சடங்குகளை, 'பண்டிட்' ஒருவர் நடத்தி உள்ளார்.எனவே, நாடு முழுவதும் கிளைகள் கொண்ட, புகழ் பெற்ற ஹிந்து அமைப்பு, மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, சான்றிதழ் வழங்கி உள்ளது.
  • ஹிந்து மத சடங்குகளை மனுதாரர் பின்பற்றுவதாக, அந்தப் பகுதியில் வசிப்பவர்களும், வருவாய் அதிகாரிகளிடம், வாக்குமூலம் அளித்துள்ளனர்
  • அதனால், ஹிந்து ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என, மனுதாரர் கோருவதில், எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
  • மனுதாரரின் ஜாதி பற்றி, இன்னும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவரது ஜாதிஅந்தஸ்தின் அடிப்படையில், பணியில் தேர்வு செய்து நியமிக்கப்பட்டதை, உறுதி செய்ய வேண்டும்
  • அதன்படி தற்போது, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவது,உறுதி செய்யப்படுகிறது
  • ஜாதியை காரணம் காட்டி, இவரது நியமனத்தில் தொந்தரவு கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
********************************நன்றி : தினமலர் நாளிதழ் -22.08.2018 செய்தி 

Thursday, August 16, 2018

கோர்ட்டு சொன்னாதான் வழக்குப்பதிவு

பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு!
திருப்பூர்:போலி சான்றிதழ் தயாரித்து, மாநகராட்சியில் பணிபுரிந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இளம் பொறியாளர் மீது, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி, பொறியியல் பிரிவில், இளம் பொறியாளராக சந்திரசேகரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, 2017 ஜூலையில் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
போலி சான்றிதழ் தயாரித்து, அரசு வேலையும், பதவி உயர்வும் பெற்ற சந்திரசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீஸ் கமிஷனரிடம், திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் மனு அளித்தார்.
விசாரித்த ரூரல் போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில், கனகராஜ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், ரூரல் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 16.08.2018

Wednesday, August 15, 2018

உயில் எழுதாத சொத்து

உயில் எழுதாத சொத்து - பங்கு பிரித்துக் கொள்வது எப்படி?

படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்

உயில் எழுதி வைக்காத நிலையில் ஒரு ஆண் இறந்து போனால், அந்த ஆணின் சுய சம்பாத்திய சொத்துக்கள் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 (8) &, (9) பிரிவுகளினபடி அந்த ஆணின் வாரிசுகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்.....?

உயில் எழுதி வைக்காமல் இறந்த ஆணிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால் அந்த சட்டத்தின் 10 வது பிரிவு அதற்கு மிகத் தெளிவாக வழி காட்டுகிறது. அந்த 10 வது பிரிவில் மொத்தம் நான்கு விதிகள் உள்ளது. அவை என்ன சொல்கிறது என்பதைப் பற்றி கீழே காணலாம்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 1

இறந்து போன ஆணுக்கு ஒரு மனைவி இருந்தால் அவருக்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும். அந்த ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால் அனைத்து மனைவிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பங்கு வழங்க வேண்டும்.

உதாரணமாக இறந்தவரது வங்கிக்கணக்கில் அறுபது லட்சம் ரூபாய் இருப்பதாகவும், அவரது உறவுகளாக இரண்டு மனைவிகள் ஒரு மகன் ஒரு மகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

(பணம் என்றால் அதனை பிரிப்பது இலகுவாக இருக்கும் என்பதாலும், படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் என்பதாலும் இந்தப் பதிவில் பணத்தை மட்டும் உதாரணத்திற்காக கூறியுள்ளேன்)

அந்த இரண்டு மனைவிகளுக்கும் சேர்ந்து ஒரு பங்கு (இருபது லட்சம்) அதாவது ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் பங்காக கொடுக்க வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கான நாற்பது லட்ச ரூபாயை அவரது மகனும், மகளும் ஆளுக்கு இருபது லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 2

இறந்து போன ஆணின் மகன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு, மகள்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு, இறந்து போன ஆணின் தாயாருக்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும்.

உதாரணமாக இறந்து போன ஆணுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும், இரண்டு மனைவியும், ஒரு தாயாரும் இருக்கிறார்கள் என்றும், அவரது வங்கிக் கணக்கில் அறுபது லட்சம் ரூபாயும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற சூழ்நிலையில் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956, பிரிவு-10, விதி 2டன் விதி எண் 1 யும் சேர்த்து பயன்படுத்தி பங்குகளை பிரித்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற அறுபது லட்சத்தை ஐந்து பங்காக (ரூ.பனிரெண்டு லட்சம்) முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் தாயார், மகன், மகள்கள் ஆகிய நால்வருக்கும் தலா ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கான ரூ.பனிரெண்டு லட்சத்தை அவருடைய மனைவிகள் இருவரும் ஆளுக்கு ஆறு லட்சமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 3

இறந்து போனவருக்கு முன்பாகவே அவரது மகன் இறந்திருந்தால் அந்த மகனின் வாரிசுகள் ஒரு பங்கையும், இறந்து போனவருக்கு முன்பாகவே அவரது மகள் இறந்திருந்தால் அந்த மகளின் வாரிசுகள் ஒரு பங்கையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக இறந்து போன ஆணுக்கு ஒரு தாயார் ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், அவரது வங்கிக் கணக்கில் அறுபது லட்சம் ரூபாயும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956, பிரிவு-10, விதி 1. விதி 2-டன் விதி 3 யும் சேர்த்து பயன்படுத்தி பங்குகளை பிரித்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற அறுபது லட்சத்தை நான்கு பங்காக (ரூ.பதினைந்து லட்சம்) முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் இறந்து போனவரது தாயாருக்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, மகளுக்கு ஒரு பங்கு, அந்த மகனின் வாரிசுகளுக்கு அதாவது அந்த மகனின் மனைவி, மகன்கள் மற்றும் மகள்கள் (அவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் சரி)  அவர்களுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 4

விதி 3 ல் குறிப்பிடப் பட்டுள்ள பங்குகளை பிரித்து விநியோகம் செய்வது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது. விஷேசமாக ஏதுமில்லை. 

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 16.08.2018