disalbe Right click

Friday, August 31, 2018

தமிழில் சட்ட நூல்கள்

காவல்துறை பொது நாட்குறிப்பிலுள்ள தகவல்களை பெற முடியுமா?
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொது நாட்குறிப்பு (Station General Diary/Daily Diary) ஒன்று தினசரி எழுதி பராமரித்து வரவேண்டும். அதில் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவுசெய்து வரவேண்டும். இதனை காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் முதலில் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
 ஒவ்வொரு நாளும் காலை பொதுநாட்குறிப்பை ஆரம்பிக்கும்போது கையிருப்பிலுள்ள ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும்.
 அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.
  வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
 காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
  மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம், தேதியுடன் பதிவு செய்ய வேண்டும்.
  வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்யவேண்டும்.
  பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் இல்லை என குறிப்பு எழுத வேண்டும்.
 ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும்.
 பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
  வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்யவேண்டும்.
  இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றியவிவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.
  வழக்கு விசாரணை அல்லது மனு அளிக்க யாரேனும் காவல் நிலையம் வந்தால், அவர்களை விசாரணை செய்த விபரம் /திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.
  வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லதுகழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
  அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுதவேண்டும்.
  பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பவேண்டும்.
  பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  பொது நாட்குறிப்பில் அடித்தல் மற்றும் திருத்தல் இருக்கக்கூடாது.
  அனைவருக்கும் புரியும்  வண்ணம் எழுதவேண்டும்.
  பக்க எண்கள் குறிப்பிட்டு எழுதவேண்டும்.
  உடனுக்குடன் எழுத வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 172
குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் பிரிவு - 172ல், கூறப்பட்டவாறு, புலனாய்வு செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நாட்குறிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது..
பொது நாட்குறிப்பைப் பெறுவதால் என்ன பயன்?
பொதுமக்கள் அளிக்கக்கூடிய நியாயமான புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும்கூட காவல்துறையினர் அதன்மீது வழக்குப் பதிவு செய்வதில்லை. (Mistake of Fact) பிழை வழக்கு என்று எழுதி அந்த புகாரை முடித்து வைத்து விடுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையில் பராமரித்து வரப்படுகின்ற நாட்குறிப்பின் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கின் (மனுதாரர் மட்டும்) கேட்டுப் பெறலாம். அதன் மூலம் காவல்துறையினர் புலன்விசாரணை செய்த விபரத்தை அறிந்து கொள்ளலாம். நமது வழக்கு நியாயமான முறையில் விசாரணை செய்யப்படவில்லை என்றால், அதற்கான ஆதாரங்களை அதில் இருந்தே திரட்டி, புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்து, நமது வழக்கிற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கலாம்.
இது சம்பந்தமாக தகவல் ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றை மேற்கண்ட ப்ளாக்ஸ்பாட்டில் நான் கண்டேன். அதன் நகலைப் பெற கீழே காணும்லிங்க்கை கிளிக் செய்யவும்.

****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.10.201

Thursday, August 30, 2018

JEE - Joint Entrance Examination


JEE - Joint Entrance Examination - இனி வருடத்திற்கு இரு முறை
Joint Entrance Exam மெயின் தேர்வை (2019) NTA எனப்படும் National Testing Agency நடத்துகிறது. N.I.T & I.I.T உட்பட பல அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், இளநிலை இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜே..., மெயின் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
இதற்கான விண்ணப்பப்பதிவானது வருகின்ற 01.09.2018 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டில் இருந்து அந்த தேர்வில் சில முக்கிய மாற்றங்களையும் தேர்வு குழு செய்துள்ளது.
முதலாவதாக இனி இந்த தேர்வு வருடங்களுக்கு இருமுறை நடைபெறும்.
ஜனவரி 6 முதல் 20ம் தேதி வரை ஜனவரி மாதத்திற்கான தேர்வும்
ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை ஏப்ரல் மாதத்திற்கான தேர்வும் நடத்தப்பட உள்ளது.
இரண்டாவதாக, இனி இது முழுக்க முழுக்க கணினி வழி தேர்வாக மட்டுமே நடத்தப்படும். மொத்தம் எட்டு அமர்வுகளாகத் தேர்வு நடைபெறும். அதில் மாணவர்கள் தங்களுக்கு பொருந்தும் அமர்வை விண்ணப்பப் பதிவின் போதே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு எழுதும் தகுதி
12வது வகுப்புத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் ஜே..., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பப் பதிவை ஆன்லைன் வழியாகவே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஜனவரி அமர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.08.2018
மாணவர்கள் ஓர் ஆண்டின் இரண்டு அமர்வுகளிலும் தேர்வினை எழுதலாம். அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஜே..., மெயின் 2019ம் ஜனவரி மாதத்திற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 31 அன்று வெளியிடப்படும்
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.08.2018