disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-7


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-7
***************************************************************************
நாம் கொடுக்கும் குடும்ப விசாரணை ஏற்கனவே வந்திருக்கும் விசாவுடன் சரிபார்த்து, மனைவி மற்றும் குழந்தைகளின் கடவுச்சீட்டில் (Passport) முத்திரை செய்வார்கள்.

கடவுச்சீட்டில் முத்திரை செய்யவும், ஏஜென்சிக்கு சர்வீஸ் தொகையாக பணம் தரவேண்டும்.

குடும்ப விசாவுடன் மனைவி, குழந்தைகள் கடவுச்சீட்டுக்கள் கைக்கு கிடைத்தவுடன் விமான பயணச்சீட்டு பெற்று, தேதியை உறுதி செய்யவேண்டும். இவர்கள் நீங்கள் பணிபுரியும் நாட்டில் விமான நிலையத்திற்கு வந்தவுடன், நீங்கள் சென்று, உங்கள் அடையாள (Work Permit) அங்குள்ள அதிகாரிகளிடம் காண்பித்து, மனைவி குழந்தைகளை உங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வரலாம்.

வாழ்க வளமுடன்!


வேலை  வாய்ப்பு உள்ள தொழில்கள்:



வளைகுடா நாடுகளில் அடிப்படை தொழில்கள் தவிர, தொழிற்பயிற்சி முடித்து (I.T.I)  டர்னர், வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உண்டு.

மேற்கத்திய நாடுகளில் ஐ.டி எனப்படும் கணினி தொழிற் சம்பந்தமான வேலைகளுக்கு வாய்ப்பு முதலில் அதிகமாக இருந்தாலும், தற்போது பாதியாக குறைந்து உள்ளது.

டாக்டர், என்ஜீனியர், நர்ஸ் போன்றவர்களுக்கு தங்களுடைய அடிப்படை படிப்புடன் மாஸ்டர்ஸ் டிகிரி (Master's Degree) எனப்படும் கூடுதல் தகுதி, உதாரணமாக MBBS உடன் MS  படிப்பும் இருந்தால் கூடுதல் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.

என்ஜீனியர் படிப்பிலும் கூடுதலாக M.B.A மற்றும் M.E படிப்பு இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் தற்போது வேலை வாய்ப்பு குறைந்தாலும், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் இன்றும் அதே வேலை வாய்ப்பு இருந்து கொண்டேதான் உள்ளது.

படிப்புடன், வேலைத் திறமையும் இருந்துவிட்டால் போதும் உலகத்தின் எந்த மூலையிலும்  நாம் பெருமையுடன் அதிக வருமானத்துடன் வலம் வரலாம்.

இந்த விஷயத்தில் உலகத்தில் தமிழன் முதல் இடத்தில் இருக்கிறான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

கீழ்கண்ட  நிறுவனங்களில் நிரந்தரமாக தொடர்ந்து அதிக வேலை வாய்ப்பு உண்டு என்பது தினசரிகளில் வரும் விளம்பரங்களே சாட்சி.

1. ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்கள்

2. மின்வாரிய கட்டுமான பணிகள்

3. சாலை மற்றும் பில்டிங் கட்டுமான பணிகள்

4. தொழிற்சாலை பணிகள்

5. சேல்ஸ் மேன்

6. ஐ.டி. சம்பந்தமான  பணிகள்

7. மருத்துவமனை பணிகள்

8. பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள்

9. தொலைத் தொடர்பு சம்பந்தமான பணிகள்

10. ஹெவி  டிரைவர் பணிகள்

மேலும் வெளிநாடு வேலைகளுக்கு வரும் அன்பர்கள் முக்கியமா க தெரிந்து கொள்ள வேண்டியது;
பெரும்பாலும் உங்களுடைய ஒரு மாத சம்பளம் நிறுவனத்திடம் இருக்குமாறு, நிறுவனம் உஷாராக இருக்கும். நீங்கள் முடிவாக (EXIT) செல்லும்போது தான் உங்களுடைய சம்பள பிடித்தங்கள் அனைத்தும் கிளியர் செய்து அனுப்புவார்கள்.

உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதற்குரிய சம்பளமும் இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு வரக்கூடாது.

உங்களை அனுப்பும் ஏஜென்சிகள், உங்களுடைய அவசரத்தைப் பார்த்து. நீங்கள்  அங்கு செல்லுங்கள். ஓவர்டைம் உண்டு, இன்கிரிமெண்ட் உண்டு என பொய் சொல்லி விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப் பார்ப்பார்கள்.

ஒப்பந்த பத்திரத்தில் (Agreement) அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஒழிய கையெழுத்து இடக்கூடாது. அதே நேரம் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கையெழுத்து இட்டிருக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து, சவூதி அரேபியாவில் ஆடு மற்றும் ஒட்டகம் பராமரிக்க ஐடிஐ முடித்தவர்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி!

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான்! அதற்காக அவசரப்படாமல், முறையாக நல்ல வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகி, சர்வீஸ் சார்ஜ் அதிகம் வாங்காத நல்ல நிறுவனங்கள் மூலம், நல்ல வேலையாக தேர்ந்தெடுத்து, நமக்கு உணவு தங்கும் இடம் இலவசமாக தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சம்பளமும் சரியாக தரும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து  வெளிநாடு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பமும் வசதியாக இருக்கும்.

சில நாடுகளுக்கு நாம் பணிக்குச் செல்வதை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக மலேசியா, கொரியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் பணிக்குச் சென்றால், இன்றும் அங்கு கொத்தடிமை முறை இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறோம்.

அப்படி செல்வதாக இருந்தால் கூட ஒரு தடவைக்கு பல தடவை.. நான் முன்பு சொன்ன இணைய தளம் மூலமாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நமக்கு திருப்தி ஏற்பட்டால் தான் பணிக்குச் செல்ல வேண்டும்.

நம்பகத்தன்மை இல்லாத அயல்நாடு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியை நம்பி அங்கு சென்று அவஸ்தை படக்கூடாது.

இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள் அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை.

டாக்டர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

எந்த நாட்டிற்கும், வீட்டு பணிகளுக்கு என செல்லும்போது பெண்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லக் கேள்வி. அதிக வேலைப் பளு, பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம்; சமயத்தில் அடி உதை ஆகியவையும் உண்டு. 

எனவே  பெண்களே உஷார்!
                                                                                                                                   -நிறைவடைந்தது-

நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு
                                               

1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete