disalbe Right click

Tuesday, June 7, 2016

வங்கி தீர்ப்பாயத்தில் புகார் செய்ய


வங்கி தீர்ப்பாயத்தில் புகார் செய்ய என்ன செய்ய வேண்டும்?
சென்னை: வங்கி தீர்ப்பாயம்(Ombudsman - ஓம்பட்ஸ்மேன்) என்பது வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் செய்யும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் சேவை. 

இந்த வங்கி தீர்ப்பாயம் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இது திட்டம் ஒரு சட்ட ரீதியிலான அமைப்பாகும். 

இந்த அமைப்பு வங்கி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்று அவற்றை சரி செய்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியால் நியமனம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் இந்த அமைப்பில் இருக்கின்றனர். இவர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை ஏற்று அவர்களின் புகார்களை சரி செய்ய ஆவன செய்கின்றனர். 

இந்த அமைப்பு அனைத்து வர்த்தக வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்து வகை வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறது. 

தீர்ப்பாயம் ஏற்கும் புகார்கள் எப்படிப்பட்ட புகார்களை வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தீர்ப்பாயத்தில் தெரிவிக்கலாம் என்பதைப் பார்ப்போம் 

1. வங்கிகள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு செக்குகள், ட்ராப்ட்ஸ் மற்றும் பில்கள் போன்றவற்றிற்கான பணத்தை செலுத்தாத போது அல்லது பணத்தைச் செலுத்த கால தாமதம் செய்யும் போது இந்த அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். 

2. வாடிக்கையாளர்கள் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்கும் போது, அதை சரியான காரணங்கள் இல்லாமல் வங்கிகள் மறுக்கும் போது அல்லது அதற்காக கமிஷன் வாங்கும் போது 

3. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை எடுக்க விடாமல் செய்வது அல்லது தாமதமாக்குவது

 4. ட்ராப்டுகள், பே ஆர்டர்கள் அல்லது வங்கி செக்குகளை அனுப்பாத போது அல்லது அனுப்ப கால தாமதம் செய்யும்போது

 5. வேலை நேரத்தில் வங்கி வாடிக்கையாளரின் தேவைகளை கவனிக்காமல் இருக்கும்போது 

6. வங்கியால் அல்லது வங்கி முகவர்களால் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட வசதிகளை வழங்காதபோது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

7. வைப்பு நிதிகளை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தாத போது அல்லது ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை கடைபிடிக்காதபோது 

8. இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு வங்கிகளிடமிருந்து முறையாக சேவைகள் கிடைக்காவிட்டால் அவர்களும் இந்த அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். 

9. சரியான காரணம் இல்லாமல் டெப்பாசிட் அக்கவுண்டுகளை தொடங்க வங்கிகள் மறுக்கும்போது 

10. முன்னறிவிப்பின்றி வாடிக்கையாளரிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கும்போது 

11. ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு ஆகியவற்றைக் கையாள்வதில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை வங்கிகள் அலட்சியப்படுத்தும்போது 

12. ஓய்வூதியத்தை உரிய வாடிக்கையாளர்களிடம் வழங்காதபோது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

13. வரி செலுத்தும்போது அதை வங்கிகள் மறுக்கும்போது அல்லது அந்த தொகையை வாங்க கால தாமதம் செய்யும்போது 

14. அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மறுக்கும்போது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

15. சரியான காரணம் இல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் வைப்பு நிதி கணக்குகளை வலுக்கட்டாயமாக முடிக்கும்போது 

16. கணக்குகளை முடிக்க மறுக்கும்போது அல்லது முடிக்க கால தமாதம் செய்யும் போது 

17. வங்கிகள் சட்டத்தின்படி, வெளிப்படையாக வங்கிகள் செயல்படாதபோது 

18. வங்கி கடன்கள் வழங்குவதில் குறைகள் இருந்தாலும் புகார் செய்யலாம் 

19. வட்டி வசூலிப்பதில் ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளைப் பின்பற்றாதபோது

 20. வங்கிக் கடனை சரியான நேரத்தில் வழங்காதபோது அல்லது கால தாமதம் செய்யும்போது

 21. சரியான காரணம் இல்லாமல் வங்கிக் கடனுக்கான விண்ணப்பங்களை நிராகரிக்கும்போது 

ஆனால் தீர்ப்பாயத்தில் புகார் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்கள் அது சம்பந்தமாக புகார் தெரிவித்திருக்க வேண்டும். 

அவ்வாறு புகார் தெரிவித்து 1 மாதத்திற்கும் மேலாக அதன் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அல்லது வங்கிகள் எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் தீர்ப்பாயத்தில் புகார் செய்யலாம். 

எழுத்து மூலமாக புகார்களைத் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலமாக அதாவது 

https://secweb.rbi.org.in அல்லது BO/compltindex.htm 

என்ற இணையதளத்திற்குள் சென்று புகார் தெரிவிக்கலாம். அல்லது இமெயில் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். எனினும் புகார் தெரிவிக்க முறையான படிவம் எதுவும் வழங்கப்படவில்லை.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 04.04.2013

குறிப்பு:

E-mail address of Ombudsman officer 

http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=164#

No comments:

Post a Comment