disalbe Right click

Tuesday, July 5, 2016

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,
சட்டம் வகுத்தவர்கள் நமது நாட்டில் நடைபெறும் குற்றங்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர்.
1) கைது செய்வதற்குரிய குற்றம். (Cognizable offence)
2) கைது செய்ய முடியாத குற்றம். (Non cognizable offence)
கைது செய்தற்குரிய குற்றங்களை செய்தவர்கள் பற்றிய புகாரை நாம், காவல்துறையினருக்கு குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 154 மூலம் தெரிவிக்க வேண்டும். நாம் எழுதும் புகாரின் தலைப்பிலேயே இதனை தெரிவித்தால் புகாரைப்பற்றி எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்ள காவல்துறை அலுவலருக்கு உதவியாக இருக்கும்.
கைது செய்ய முடியாத குற்றங்களைப் பற்றி புகார் செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு - 155 பயன்படுத்துகிறார்கள்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154
*** ஒரு காவல்நிலைய எல்லைக்குள் கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளதாக ஒருவர் புகார் அளிக்கும் போது, அதற்கென்று காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற குறிப்பேட்டில் அதனை பதிவு செய்து அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புகார் அளித்தவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
*** கைது செய்ய முடியாத வழக்கு ஒன்றை காவல் நிலைய அலுவலராலோ அல்லது காவல்நிலைய அதிகாரியாலோ தன்னிச்சையாக விசாரணை செய்வதற்கும், மேல்விசாரணைக்கு அனுப்புவதற்கும் முடியாது.
*** அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால், காவல் நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கை விசாரணை செய்யலாம்.
*** நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு காவல்நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கில், ”கைது செய்வதற்குரிய வழக்கில் உள்ள அதிகாரங்களில்கைது செய்வதைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154 (4)
*** ஒரு வழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குற்றங்கள் செய்யப்பட்டு இருந்து அதில் ஏதாவது ஒன்று கைது செய்யக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கு கைது செய்யப்படக் கூடிய வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment