disalbe Right click

Tuesday, July 5, 2016

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160, என்ன செய்ய வேண்டும்?
அழைத்து விசாரணை செய்வதற்குள்ள அதிகாரம்
ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மை அழைத்து விசாரிப்பதற்கு காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரிக்கு கொடுக்கப் பட்டுள்ள அதிகாரம் என்ன? நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன?  என்பதைப் பற்றி இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்ட புகார் மூலமாகவோ, அல்லது ஒரு வழக்கு நிகழ்வு மற்றும் சூழ்நிலைகளுடன் தொடர்பு உள்ளவர் போல் நாம் இருந்து, காவல்நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் குடியிருந்தால், நம்மை தன்முன் ஆஜராகுமாறு அந்த வழக்கு சம்பந்தமாக புலனாய்வு செய்து வருகின்ற காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரி எழுத்து முலமாக நமக்கு உத்தரவிடலாம்.
xxxxx என்பவர் xxxxx அன்று கொடுத்த புகாரின்படி தங்களிடம் (xxxxx வழக்கு சம்பந்தமாக தங்களை) விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால் தாங்கள் xxxxx அன்று காலை (அல்லது மாலை) xxxxx மணிக்கு xxxxx காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவு எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
அதில் நிலைய முத்திரையுடன் அதிகாரியின் கையெழுத்தும் இருக்கவேண்டும்.
அழைக்கப்பட்ட எவரும் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
அந்த வழக்குக்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் நம்மிடமிருந்தாலோ அல்லது இருக்கிறது என்று அவர்கள் நினைத்தாலோ, அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த காவல்துறை அதிகாரி விரும்பினால் அதனை கொண்டுவரும்படியும் அதில் குறிப்பிட வேண்டும்.

அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக எதனையும் மறைக்காமல் நமக்கு தெரிந்த அனைத்தையும் அவரிடம் தெரிவிப்பது மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஒப்படைப்பது நமது கடமையாகும்.
ஆனால், ஒரு பெண்ணையோ அல்லது பதினைந்து வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனையோ அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்வதாக இருந்தால் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஒரு காவல் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
ஒருவேளை நாம் அந்த காவல்நிலைய அதிகார எல்லைக்குள் வசிக்காதவராக இருந்து நம்மை அவர்கள் விசாரணைக்கு அழைத்தால், நமக்கு ஏற்படுகின்ற நியாயமான போக்குவரத்து செலவை இந்தப் பிரிவின் கீழ் காவல்துறையினர் கொடுக்க வேண்டும்.
ஆனால், இந்தப்பிரிவில் உள்ளது போல எந்த காவல்நிலைய அலுவலரும் 100% நடந்து கொள்வதில்லை. அதனை அரசும் ஏனோ கண்டுகொள்ளவதில்லை.
பொதுமக்களும் சட்டம் தெரியாததாலும், பயத்தாலும் இதனை வற்புறுத்துவதில்லை.
****************************************  அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment