disalbe Right click

Friday, August 5, 2016

ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்


ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க 
என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஆன் லைனில் புகார் அளிப்பதற்கு  இங்கு  http://onlinegdp.tn.nic.in/  கிளிக் செய்யுங்கள்.

 அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது  இரண்டற கலந்த ஒன்றாகும்.

 அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு புள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. 

இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வையும் எளிதாக்குகிறது .

ஆன்லைன் மூலமாக மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன், அது பற்றிய விபரங்கள் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அதனை  கண்காணிக்கிறது. 

கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகமானது, கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.


நன்றி : 
திரு நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் அவர்கள்

No comments:

Post a Comment